Tuesday, October 9, 2012

புரியாத புதிர்!


ராதேக்ருஷ்ணா!

வலி அதிசயமானது! வலி 
புரியாத புதிர்! வலி உடலின் 
மகத்துவத்தை புரியவைக்கிறது!
வலி நம் மனதில் அடுத்தவரின் 
கஷ்டத்தை புரியவைக்கிறது!

Monday, October 8, 2012

அளவுகோல்...


ராதேக்ருஷ்ணா!

வியாதி நமது நலம் விரும்பிகளின் 
பிரார்த்தனையின் ஆழத்தை நமக்கு 
காட்டுகிறது! வியாதி நம்மை சுத்திகரிக்க 
ஒரு அளவுகோல்! பக்குவப்படுவாய்!

வியாதி!


ராதேக்ருஷ்ணா!

வியாதி நம் அஹம்பாவதை அழிக்கிறது!
வியாதி நமக்கு உடலின் ஆரோக்கியத்தின் 
மகிமையை புரியவைக்கிறது! வியாதி 
நமக்கு வாழும் முறையை சொல்கிறது!

வரமா அல்லது சாபமா?


ராதேக்ருஷ்ணா!

வியாதி வரமா அல்லது சாபமா?
வியாதியை மற்றவர் சாபமாக நினைப்பார்!
பக்தரோ வியாதியை பகவானின் 
விசேஷமான வரமாகக் கருதுவர்!

Saturday, October 6, 2012

க்ருஷ்ணன் கவனிப்பான்!


ராதேக்ருஷ்ணா!

குழந்தைகளின் தேவையை மற்றவர் 
கவனிப்பார்! அது போலே நீ குழந்தையாய் 
இருந்துவிட்டால் உன் தேவைகளை 
க்ருஷ்ணன் நன்றாக கவனிப்பான்!
 ஜாலியாய் இரு!

என்றும் ஆனந்தம்!


ராதேக்ருஷ்ணா!

நீ குழந்தையாய் இருக்கும் வரை 
என்றுமே ஆனந்தம் தான்! பொறுப்பாய் 
இரு! ஆனால் எல்லாவற்றையும் நீ தான் 
நடத்துகிறாய் என்று நினைத்து விடாதே!

சுகமாய் அனுபவி!


ராதேக்ருஷ்ணா!

நீ என்றும் குழந்தை என்பதை 
மட்டுமே நினைவில் கொள்! உன் 
உடலுக்கு தான் வயதாகிறதே 
ஒழியே உனக்கு அல்ல! குழந்தையாய் 
வாழ்வை சுகமாய் அனுபவி!

Friday, October 5, 2012

கோபத்தை விடு!


ராதேக்ருஷ்ணா!

கோபத்தை விட்டால் கவலையில்லை 
என்று மஹாபாரதத்தில் தர்மர்
கூறினார்! கோபம் என்பது பல 
நல்லவற்றை கெடுத்துவிடுகிறது! 
கோபம் உனக்கு நல்லதல்ல!

கோபப்படாமலிரு!


ராதேக்ருஷ்ணா!

கூடுமானவரை கோபப்படாமல் இருப்பாய்!
கோபம் உன் உடலில் உஷ்ணத்தை 
அதிகப்படுத்தும்! அது உனது நரம்பு 
மண்டலத்தை பாதிக்கும்! கோபப்படாமலிரு!

Thursday, October 4, 2012

நிகழ் காலம்!


ராதேக்ருஷ்ணா!

நிகழ் காலமே உன் கையில் 
இருக்கிறது! கடந்த காலம் 
முடிந்துவிட்டது! எதிர் காலம் 
நிச்சயம் வரும்! நிகழ் காலத்தை 
உபயோகப்படுத்தினால் உயர்வாய்!

சரியாக நினை!


ராதேக்ருஷ்ணா!

கடந்த காலத்தில் நீ நினைத்த 
பல விஷயங்களே இன்று வாழும் 
வாழ்க்கை! அது போலே இன்று 
நீ நினைப்பதே உனது நாளைய 
வாழ்க்கை! சரியாக நினை!

எதிர்கால கனவு!

ராதேக்ருஷ்ணா!

எதிர்கால கனவு அவசியம் தான்!
ஆனால் அதில் நிகழ்காலத்தில் 
செய்யவேண்டிய கடமைகளை 
செய்தால் தான் எதிர்கால 
கனவு நினைவாக மாறும்!

Tuesday, October 2, 2012

வெறுப்பே வேண்டாம்!


ராதேக்ருஷ்ணா!

மனதின் வெறுப்பு உன் உடலையும்,
வாழ்வையும் பாதிக்கும்! யார் மீதும் 
நமக்கு வெறுப்பே வேண்டாம்!
அமைதியாக எல்லோரையும் ஜெயிப்போம்!
அன்பில் உலகம் வசப்படும்!

அமைதி!


ராதேக்ருஷ்ணா!

நீ அடுத்தவரின் மீது வெறுப்பை 
காட்டும் போது, உன் மனதில் 
எரிச்சல் வரும்! அந்த எரிச்சல் 
நிச்சயம் உனது ஏதோ ஒரு 
இடத்தை பாதிக்கும்! அமைதி!

போட்டியே இல்லை!


ராதேக்ருஷ்ணா!

அழகாக நிதானமாக நிம்மதியாக 
வாழ்வாய்! அவசரமே வேண்டாம்!
யாரோடும் உனக்கு போட்டியே இல்லை!
உன் க்ருஷ்ணன் உனக்கு வேண்டியதை 
எல்லாம் தருகிறான்!

Sunday, September 30, 2012

நாவை பழக்கு!


ராதேக்ருஷ்ணா!

உடம்புக்கு நல்லதை மட்டுமே 
சாப்பிடும்படி உன் நாவை பழக்கு!
 இல்லையென்றால் பின்னாளில் நீ 
சாதாரண ஆகாரம் கூட சாப்பிட 
முடியாமல் போய்விடும்!

நாவை அடக்கு...


ராதேக்ருஷ்ணா!

நாவை அடக்கி எது உடலுக்கு 
நல்லதோ அதை மட்டுமே சாப்பிட 
வாழ்வில் என்றும் நிம்மதி உண்டு!
 நாவை அடக்காமல் இஷ்டப்படி 
சாப்பிட்டால் வியாதி தான்!

க்ருஷ்ணனை நினைத்துக்கொண்டு சாப்பிடு!


ராதேக்ருஷ்ணா!

வயிற்று பசிக்காக க்ருஷ்ணனை
நினைத்துக்கொண்டு சாப்பிடு! நாக்கு 
ருசிக்காக மட்டுமே சாப்பிட்டால் 
கோளாறு தான்! உன் உடம்பை நாக்கு 
ருசிக்காக கெடுத்துக்காதே!

Saturday, September 29, 2012

பாதிப்பு அடைகிறது!


ராதேக்ருஷ்ணா!

கோபப்படுவதினால் உன் நரம்பு
 மண்டலம் பாதிப்பு அடைகிறது!
 அதனால் உன் மனதில் சந்தோஷம் 
குறைகிறது  உன் உடம்பு நன்றாக 
இருக்க அமைதியாய் இரு!

கோபம்...


ராதேக்ருஷ்ணா!

கோபப்பட்டு ஒரு பிரயோஜனமும் 
இல்லை! கோபம் உன் உடம்பில் 
உஷ்ணம் அதிகப்படுத்தும்! அதனால் 
நிச்சயம் உன் மனதில் வாழ்வில் 
உடம்பில் பாதிப்பு வந்துவிடும்!

சந்தோஷமாய் இரு!


ராதேக்ருஷ்ணா!

கோபம் நல்லதல்ல! யார் 
வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் 
சொல்லட்டும்! செயட்டும்! நீ 
கோபப்பட்டு உடம்பை கெடுத்துக்கொள்ளாதே!
 அமைதியாய் சந்தோஷமாய் இரு!

Friday, September 28, 2012

மரியாதையோடு பழகவேண்டும்!

ராதேக்ருஷ்ணா!

தோளுக்கு மேல் நம் குழந்தைகள்
வளரும்போது நாமும் மரியாதையோடு
அவரிடம் பழகவேண்டும்! அப்பொழுது
வயதான காலத்தில் புலம்ப
வேண்டிய அவசியமில்லை!

மாறினால் நல்லது!

ராதேக்ருஷ்ணா!

குழந்தைகள் வளரும் போது
அவர்களுடைய தீர்மானிக்கும்
திறமையும் வளர்கிறது! அதற்க்கு
தகுந்தார் போல் பெற்றோர் மாறினால்
அவர்களுக்கு மிகவும் நல்லது!

பெரியவராக மதிப்பர்!

ராதேக்ருஷ்ணா!

குழந்தைகள் பெரியவர் ஆகும்போது
நாமும் அதற்க்கு ஏற்றார் போல்
நடக்கவேண்டும்! அப்பொழுது தான்
குழந்தைகளும் நம்மை பெரியவராக மதிப்பர்!

Thursday, September 27, 2012

வாழ்ந்து காட்டுவாய்!


ராதேக்ருஷ்ணா!

இயற்க்கை நீ நன்றாய் வாழ 
ஆசைபடுகிறது! அதனால் தான் 
உனக்கு வேண்டிய எல்லாவற்றையும் 
இயற்க்கை வாரி வாரி வழங்குகிறது!
 வாழ்ந்து காட்டுவாய்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP