Friday, November 25, 2011

மறக்காதே!


ராதேக்ருஷ்ணா!

மனிதர்கள் நம்மை பலவிதமாக 
ஏமாற்றுவார்கள்! நாம்தான் நம்மை 
ஜாக்கிரதையாக வைத்திருக்கவேண்டும்! 
நீ ஏமாற்றுபவர்களை ஜெயிக்கவேண்டும்!
மறக்காதே!

Thursday, November 24, 2011

க்ருஷ்ணா... காப்பாய்!


ராதேக்ருஷ்ணா

எல்லோரும் மாறிவிடுகிறோம்!
க்ருஷ்ணா நீ மட்டும் தான் 
மாறவில்லை! அதனால் நான் 
உன்னை தவிர யாரையும் 
நம்புவதில்லை! நம்பினாலும் 
பிரயோஜனமில்லை! காப்பாய்!

எனக்கு ஒன்றும் புரியவில்லை!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணா... நீ தானே மனிதர்களை 
சேர்த்து வைக்கிறாய்! நீ தானே 
மனிதர்களை நல்ல காரணத்திற்க்காக 
பிரிக்கிறாய்! எனக்கு ஒன்றும் 
புரியவில்லை! ப்ரபோ!

பூரணமாக நம்புகிறேன்!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணா! உனக்கு எல்லாம் 
தெரியும்! எல்லோரையும் தெரியும்!
எனக்கு உன்னை விட்டால் 
எதுவும் தெரியாது! யாரையும் 
தெரியாது! உன்னை மட்டுமே 
பூரணமாக நம்புகிறேன்!

Thursday, November 10, 2011

நல்ல மனிதராய் வாழ்!


ராதேக்ருஷ்ணா!

உன் உயிர் உள்ளவரை உனக்கு 
உதவி செய்தவரை மறக்கவே 
மறக்காதே! மறந்துவிட்டால் 
நிச்சயம் நீ ஒரு நாளும் 
நல்ல மனிதரில்லை! நல்ல 
மனிதராய் வாழ்!

ஆனந்தமாய் இரு!

ராதேக்ருஷ்ணா!


உனக்கு மற்றவர் செய்த 
உதவியை ஒரு நாளும் மறக்காதே! 
உனக்கு அடுத்தவர் கொடுத்த 
கஷ்டத்தை ஒரு நாளும் 
நினைவில் வைத்துக்கொள்ளாதே!
ஆனந்தமாய் இரு!

பழகு...

ராதேக்ருஷ்ணா!


ஒவ்வொருவரிடமும் நீ பழகித்தான் 
ஆகவேண்டும்! இதை நீ உன் 
வாழ்வின் எல்லைவரை தவிர்க்கவே 
முடியாது! மனிதர்களை நம்மால் 
ஒதுக்கமுடியாது! பழகு...

Monday, November 7, 2011

தயாராக இரு!


ராதேக்ருஷ்ணா

நீ வெளியில் செல்லும்போது 
மழை பெய்தால் அது இயற்கையின் 
சதியல்ல! மழைக்காலத்தில் எப்பொழுது 
 வேண்டுமானாலும் மழை பெய்யும்!
நீ எப்போதும் தயாராக இரு!

Wednesday, November 2, 2011

உதவி நிச்சயம்!


ராதேக்ருஷ்ணா!

உதவிகள் செய்ய உலகமே 
தயாராக இருக்கிறது! நீ 
க்ருஷ்ணனின் குழந்தையாக
இருப்பதால் எல்லா சமயத்திலும் 
உனக்கு என்றும் எங்கும் 
உதவி நிச்சயம்!

சரியா?


ராதேக்ருஷ்ணா!

உதவியை தேடி நீ செல்ல 
வேண்டாம்! உன்னை தேடி 
வரும் உதவிகளை நீ 
ஒதுக்காமல் இருந்தாலே போதும்!
உனக்கு உதவி செய்ய பலர் 
காத்திருக்கிறார்கள்! சரியா?

வாங்கிக்கொள்!


ராதேக்ருஷ்ணா!

நிச்சயம் உனக்கு எல்லோரும் 
உதவி செய்வார்கள்! நீ உன் 
அஹம்பாவத்தை விட்டு அன்போடு 
பழகினால் நிச்சயம் உன்னால் 
எல்லோரிடமும் உதவி பெற 
முடியும்! வாங்கிக்கொள்!

Tuesday, November 1, 2011

செய்! செய்!


ராதேக்ருஷ்ணா

உன்னை நீ ஆசைகளிடம் 
இருந்து விடுதலை செய்துவிட்டு,
க்ருஷ்ணனிடம் உன் மனதை 
வசப்படுத்திவிட்டால் நிச்சயம் 
நீ உலகை வசம் செய்ய 
முடியும்! செய்! செய்!

உன்னிடத்தில் உண்டு...


ராதேக்ருஷ்ணா

மனதை திடமாக நிதானமாக 
தெளிவாக வைத்துக்கொள்! உன்னால் 
நிச்சயம் இது முடியும்! உலகை 
வசம் செய்யும் ஆற்றல் உன்னிடத்தில் 
பூரணமாக உண்டு...

உன் சிந்தனைகள்!


ராதேக்ருஷ்ணா

நீ உன்னுடைய சிந்தனைகளை 
சரியான வழியில் எடுத்து 
சென்றால் நிச்சயம் நீ உலகில் 
எல்லோரையும் ஜெயிக்கமுடியும்!
உன் சிந்தனைகளே உன் வழியாகும்!

Thursday, October 27, 2011

தீபம் ஏற்றி வைப்போம்!


ராதேக்ருஷ்ணா

ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வில் 
அன்பெனும் தீபத்தை நிறைய 
ஏற்றி வைப்போம்! அன்பெனும் 
ஒளியிலே இந்த உலகங்கள் 
திளைத்து ஆனந்த கூத்தாடட்டும்...

பூரணமாக கிடைக்கட்டும்!


ராதேக்ருஷ்ணா

இந்த தீபாவளியில் முதியோருக்கு 
மரியாதையும், அரவணைப்பும், அன்பும், 
ஆதரவும் பூரணமாக கிடைக்கட்டும்!
அவர்கள் தானே நமக்கு 
தீபாவளியை தந்தார்!

ஒழுங்காக ஜபிப்போம்!


ராதேக்ருஷ்ணா

இந்துக்களுக்கு வீரம் வரும் 
தீபாவளியாகட்டும்! பாரத 
தேசத்திற்கு தொல்லைகள் நீங்கும் 
தீபாவளியாகட்டும்! எல்லோரும் 
இதற்காக ஒழுங்காக ஜபிப்போம்!

Tuesday, October 25, 2011

திருவனந்தபுரத்திற்கு வாருங்கள்!


ராதேக்ருஷ்ணா

இன்று முதல் ஸ்ரீ பத்மநாபர் 
ஒவ்வொரு வாகனத்தில் கோயிலில் 
பக்த ஜனங்களுக்கு காட்சி 
கொடுப்பார்! நீங்களும் எங்கள் 
திருவனந்தபுரத்திற்கு வாருங்கள்!

அருள் தரும் தீபாவளி!


ராதேக்ருஷ்ணா

இன்று இரவு தீபாவளி! உன்னுள் 
இருக்கும் நரகாசுரன் என்னும் 
அஹம்பாவம் அழியட்டும்! உன்னுள் 
உன்னதமான ஞான ஒளி பரவட்டும்!
இது அருள் தரும் தீபாவளி!

அனந்தபுரத்தில் கொண்டாட்டம்!


ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ அனந்த பத்மநாப 
சுவாமியின் கோயிலில் உற்சவம் 
ஆரம்பம்! கருடக் கொடியை
 பத்மநாபரின் கோயிலில் ஏற்றியாகிவிட்டது! 
அனந்தபுரத்தில் கொண்டாட்டம்!

Saturday, October 22, 2011

நிம்மதியான வழி!


ராதேக்ருஷ்ணா!

யார் எப்படி இருந்தால் உனக்கென்ன?
நீ எல்லோரிடமும் ஒரே மாதிரியாகப் 
பழகு! அப்படி இருந்தால் எல்லோருக்கும் 
உன்னை நிச்சயமாகப் பிடிக்கும்!
நிம்மதியான வழி!

எதையும் எதிர்பார்க்கதே!


ராதேக்ருஷ்ணா!

மனிதர்களிடம் மனதை தந்தால் 
கஷ்டம்தான்! யாரிடமும் எதையும் 
எதிர்பார்க்கதே! எல்லோரிடமும் 
பழகு! அனால் அவர்கள் இப்படி 
இருக்கவேண்டும் என்று ஏங்காதே!

நீ அமைதியாக இருக்கிறாயா??


ராதேக்ருஷ்ணா

மனதிலே பரபரப்பு இருந்தால் 
நிம்மதி இருக்காது! ஆசைகள் 
அதிகமாக அதிகமாக பரபரப்பு 
அதிகமாகும்! நீ அமைதியாக 
இருக்கிறாயா?? உன்னைக் கேள்!

Tuesday, October 18, 2011

செலவும் வரவும்...


ராதேக்ருஷ்ணா!

ஒவ்வொரு நியாயமான செலவும் 
உண்மையான வரவே! செலவே 
இல்லாத வாழ்க்கை யாருக்கும் 
இல்லை! வரவே இல்லாத 
மனிதரும் இல்லை! செலவும் 
வரவும் இரு பக்கங்கள்!

திருத்திக்கொள்!


ராதேக்ருஷ்ணா!

எதற்கு எவ்வளவு செலவு 
செய்யலாம் என்பதை நீ 
தான் முடிவு செய்யவேண்டும்!
அடுத்தவர் சொல்வதைக் கொண்டு 
பைத்தியம் போல் செலவு 
செய்யாதே! திருத்திக்கொள்!

பொறாமைப் படாதே!


ராதேக்ருஷ்ணா!

செலவு என்றுமே உண்டு! 
நியாயமான வழியில் உன் 
வரவை பெருக்கிக்கொள்! அல்லது 
உன் செலவை குறைத்துக்கொள்!
அடுத்தவரைப் பார்த்து பொறாமைப் 
படாதே! மாற்றிக்கொள்!

Thursday, October 6, 2011

ஜெய் வாக் தேவி!


ராதேக்ருஷ்ணா!


கலைமகளே...என்றும் க்ருஷ்ணன் 
ஆசைப்படும்படியான படிப்பை எங்கள் 
பிள்ளைகள் படித்து மிக சிறந்த 
இடத்தை அடைய என்றும் அனுக்ரஹம்    
செய்! ஜெய் வாக் தேவி!

கலைவாணியே... ஆசி கூறு!


ராதேக்ருஷ்ணா!


கலைவாணியே...வால்மீகியின் நாவில் 
அமர்ந்து அவரை ஆதி கவியாக்கின 
தேவியே...எங்கள் குழந்தைகள் 
கல்வியில் மேலும் மேலும் வளர 
பரிபூரண ஆசி கூறு!

சரஸ்வதி தேவியே...


ராதேக்ருஷ்ணா!


சரஸ்வதி தேவியே...எங்கள் 
குழந்தைகள் கல்வியில் சிறந்து 
விளங்க ஆசீர்வாதம் செய்! எங்கள் 
பிள்ளைகள் தொலைகாட்சியிலிருந்து
 மீண்டு வெளியில் வர ஆசி கொடு!

Tuesday, October 4, 2011

தெய்வம் உதவுகிறது!


ராதேக்ருஷ்ணா


நம்மை வாழவைக்க தெய்வம் 
பலவிதங்களில் உதவுகிறது! நாம் 
தான் எதையோ, யாரையோ 
 நினைத்துக்கொண்டு  தேவை 
இல்லாமல் வாழ்வை
 படுத்திக்கொள்கிறோம்...

ஒரு லாபமும் இல்லை!


ராதேக்ருஷ்ணா!


எல்லோருக்கும் உதவ யாரையாவது 
க்ருஷ்ணன் வைத்திருக்கிறான்! அதை
 நினைத்து ஆனந்தப்படுவதுதான் 
அழகு! அதை விட்டு அழுவதினால் 
ஒரு லாபமும் இல்லை!

கவலை ஏன்?


ராதேக்ருஷ்ணா


எல்லோரும் அனாதைகள் தான்!
எனக்கு யாரும் இல்லை என்று 
அழுகிறவர்கள் தெய்வத்தையும்,
 தெய்வத்தின் கருணையையும் 
அவமதிப்பவர்கள்! தெய்வம் 
இருக்க கவலை ஏன்?

Saturday, October 1, 2011

தெய்வம் தந்த சொத்து!


ராதேக்ருஷ்ணா!


வியாதி வராமல் உடலை 
பாதுகாக்க வேண்டியது 
நம் அனைவரின் கடமை!
உடல் என்பது தெய்வம் 
தந்த சொத்து! அதை 
அவமதிப்பவர் மனிதரில்லை...

வீண் வசனம்!


ராதேக்ருஷ்ணா!


வியாதி வந்து எல்லோரையும் 
கஷ்டப்படுத்தி, தானும் அழுவதனால் 
ஒரு பிரயோஜனமும் இல்லை! 
என்னால் எல்லோருக்கும் கஷ்டம் 
என்பதெல்லாம் வீண் வசனம்!
தண்டம்...

என்ன லாபம்?


ராதேக்ருஷ்ணா!


எல்லோரும் அவரவர் உடலை 
ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள 
வேண்டும்! இல்லையென்றால் 
அடுத்தவருக்கும் சேர்த்து கஷ்டம்!
வியாதி வந்தால் யாருக்கு 
என்ன லாபம்?

Friday, September 30, 2011

முயன்று வெல்!


ராதேக்ருஷ்ணா


நீ சில விஷயங்களை உன் 
வாழ்வில் இழந்திருக்கிறாய்!
அதனால் நீ முட்டாள் என்றோ 
அல்லது தோற்கத்தான் உன்னால் 
முடியும் என்றோ அர்த்தமில்லை!
முயன்று வெல்!

ஜெயித்தே ஆகவேண்டும்...


ராதேக்ருஷ்ணா


எதையெல்லாம் இழந்தாயோ 
அதையெல்லாம்
உன் மூலதனமாக வைத்து 
இன்று முதல் புது வாழ்வை 
தொடங்கு! நிச்சயம் நீ வாழ்வில் 
ஜெயித்தே ஆகவேண்டும்...

இழந்த அனுபவங்கள்!


ராதேக்ருஷ்ணா

இதுவரை இழந்ததை நீ 
நினைத்திருந்தால் நிச்சயம் 
உன்னால் வாழ்வில் வெல்லமுடியாது!
இழந்த அனுபவங்களை மட்டும் 
நினைவில் வைத்தால் ஜெயிப்பாய்!

Friday, September 23, 2011

உன்னால் முடியும்!


ராதேக்ருஷ்ணா

உன்னால் ஜெயிக்கமுடியாது என்று 
ஜோஸ்யக்காரன் சொன்னாலும் 
நம்பாதே! நீ பிறந்த நேரம் 
சரியில்லை என்று யார் 
சொன்னாலும் நம்பாதே! 
உன்னால் முடியும்!
 சத்தியம்!

விடா முயற்சி...


ராதேக்ருஷ்ணா!


உலகில் பெரிய காரியத்தை 
சாதித்தவறேல்லாம் அவதார 
புருஷர்கள் இல்லை! விடா 
முயற்சி உடையவர்கள் மட்டுமே 
இன்று வரை சாதனை 
செய்துள்ளார்கள்...

உடனே செய்...


ராதேக்ருஷ்ணா

உன்னால் முடியாத காரியம் 
என்று எதுவுமில்லை! உனக்குப் 
பிடித்த காரியங்களை உன்னால் 
செய்யமுடியுமென்றால் உன்னால் 
எல்லாவற்றையும் செய்யமுடியும்!
உடனே செய்...

Tuesday, September 20, 2011

ஒவ்வொரு மனிதரின் உரிமை!

ராதேக்ருஷ்ணா!

பிடிவாதம் கொண்ட மனிதரிடம்
இருந்து தன்னைக் காத்துக்கொள்வது
ஒவ்வொரு மனிதரின் உரிமை!
 நல்ல பாம்பொடும் வாழமுடியும்!
அஹம்பாவ மனிதரிடம் கஷ்டம்!

கடவுளின் கட்டளை!

ராதேக்ருஷ்ணா!

குரு யாரைக்கண்டும்
பயப்படுவதில்லை!
குரு மனிதரின் கெட்ட
 எண்ணங்களிலிருந்து தன்னை
காப்பதற்காக மனிதரிடம் இருந்து
விலகுகிறார்! கடவுளின் கட்டளை!

யாரறிவார்?

ராதேக்ருஷ்ணா!

ஒவ்வொரு மனிதரும் அவரவர்
மனோ தர்மப்படி குருவைப்
பார்க்கிறார்கள்! சிலருக்கு குரு
பயந்தவராய் தெரிவார்! சிலருக்கு
தெய்வமாய் தெரிவார்! யாரறிவார்?

Saturday, September 17, 2011

விரோதியாகப் பார்!


ராதேக்ருஷ்ணா

வியாதிகளைப் பாராட்டினால் அது 
உன்னுடனேயே தங்கிவிடும்! நீ 
வியாதிகளை விரோதியாகப் பார்!
அவை உன்னிடம் நடுங்கவேண்டும்! 
நீ நடுங்கக்கூடாது! புரிந்ததா??

என்னை விட்டுப் போ!


ராதேக்ருஷ்ணா

வியாதியே என்னை விட்டுப் போ!
வியாதியே உனக்கு இங்கே இடமில்லை!
வியாதியே நானும் என் உடலும் 
க்ருஷ்ணனின் சொத்து! அதனால் 
இங்கிருந்து சென்றால் உனக்கு நல்லது!

க்ருஷ்ணனை நம்பு!


ராதேக்ருஷ்ணா


உடலுக்கு வியாதிகள் வருவது 
சகஜம்! உன் மனதை நீ 
திடமாக வைக்க,உன் வியாதிகள் 
உன்னை விட்டு சத்தியமாக ஓடிவிடும்! 
க்ருஷ்ணனை பூரணமாக நம்பு!

Wednesday, September 14, 2011

நரகமா? ப்ரசாதமா?


ராதேக்ருஷ்ணா


குடும்பம் என்பது நல்லது!
ஆனால் அதை நாம் எப்படி 
வைத்துக்கொள்கிறோம் என்பது 
நம்மிடம் தான் இருக்கிறது!
உன் குடும்பம் நரகமா?
ப்ரசாதமா? யோசி...

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP