Thursday, August 9, 2012

க்ருஷ்ணன் பிறக்கப் போகிறான்...


ராதேக்ருஷ்ணா!

நாளை மதுராவில் கூட்டம் அலைமோதும்!
பிருந்தாவனத்தில் ஜனங்கள் நாட்டியமாடுவார்கள்!
தேவர்கள் பூமிக்கு வருவார்கள்!
க்ருஷ்ணன் பிறக்கப் போகிறான்...

கோகுலாஷ்டமி நெருங்குகிறது!


ராதேக்ருஷ்ணா!

கோகுலாஷ்டமி நெருங்குகிறது! எல்லோரும் 
க்ருஷ்ணனை வரவேற்க தயாராகி விட்டார்கள்!
நாமும் அவனை நம் வீட்டிற்கு ஆசையோடு 
அழைப்போம்! ஆனந்தமாய் அனுபவி!

Wednesday, August 8, 2012

காலமே நீ வாழ்க!


ராதேக்ருஷ்ணா!

மனதின் ஒவ்வொரு பதிவிற்கும் 
ஒரு விசேஷ அர்த்தமும், அவசியமும் 
இருக்கிறது! காலம் நமக்கு அதை 
புரியவைக்கிறது! காலமே நீ வாழ்க!
உன் பதில் அற்புதம்!

பதிவு செய்கிறது!


ராதேக்ருஷ்ணா!

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் 
நம் மனதில் நிறைய விஷயங்களை 
பதிவு செய்கிறது! நாம் அந்தப் 
பதிவுகளை எதிர்காலத்தில் 
உபயோகப்படுத்தவே...

மாற்றிவிடுகிறது...


ராதேக்ருஷ்ணா!

சத்ரபதி சிவாஜியின் மகாராஷ்டிரத்தில் 
இருக்கிறேன்! வாழ்க்கை சில மணி 
நேரங்களில் நமது சிந்தனை, செயல்கள் 
எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது...

Tuesday, August 7, 2012

கடமைப்பட்டிருக்கிறேன்!

ராதேக்ருஷ்ணா!
 
எனது நலம் விரும்புவர்கள்
இவ்வுலகில் பல கோடி!
ஒவ்வொருவருக்கும் நான் மிகவும்
கடமைப்பட்டிருக்கிறேன்! குரு
எனது முதல் நலம் விரும்பி!
அடுத்தது க்ருஷ்ணன்!

நலம் விரும்பி!

ராதேக்ருஷ்ணா!
 
நலம் தரும் சொல்லை உனக்கு
சொல்லுபவரே உனது நலம்
விரும்பி! உள்ளத்தில் நிஜமான
அன்போடு உனக்கு நல்லதை
சொல்லுபவரே உனது
உண்மையான நலம் விரும்பி!

மனதின் மயக்கம்...

ராதேக்ருஷ்ணா!
 
சுற்றி இருப்பவர்கள் நம் மீது
அக்கறை கொண்டவர்கள் தான்!
ஆனாலும் சமயத்தில் நமக்கு அவர்கள்
அறிவுரை சொன்னால் பிடிப்பதில்லை!
இது மனதின் மயக்கம்...

Monday, August 6, 2012

ஆரோக்கியமாய் இரு...


ராதேக்ருஷ்ணா!

நீ ஆரோக்கியமாய் இருந்தால் 
யாருடைய தயவும் உனக்கு ஒரு 
நாளும் வேண்டாம்! உலகில் அடுத்தவர் 
தயவில் வாழ்வது போலே ஒரு 
கொடுமை வேறு எதுவுமில்லை...

கவனமாய் இரு!


ராதேக்ருஷ்ணா!

உலகில் மிக அவசியமானது ஆரோக்கியம்! 
நாம் ஆரோக்கியமாக இருந்தால் தான் 
உலகில் நமக்கு மரியாதை! இன்றைய 
ஆரோக்கியம் நாளைய லாபம்! 
கவனமாய் இரு!

அக்கறை வேண்டும்!


ராதேக்ருஷ்ணா!

உடலில் எல்லோருக்கும் ஆசை 
இருக்கிறது! அனால் அக்கறையில்லை!
உன் உடல் மீது உனக்கு அக்கறை 
வேண்டும்! உன் உடலை நீ 
கவனிக்காவிடில் வேறு யார் 
தான் கவனிப்பார்!

Sunday, August 5, 2012

அவன் கொடுத்ததே...

ராதேக்ருஷ்ணா!
 
நான் பகவானுக்கு என்னைக்
கொடுத்துவிட்டேன் என்கிற எண்ணமே
ஒரு அஹம்பாவம்தான்! நாம் என்ன
கொடுப்பது? இந்த உடல், மனம்,
வாழ்க்கை எல்லாம் அவன்
கொடுத்ததே...

கோயிலாக மாறியது!

ராதேக்ருஷ்ணா!

என் மனமென்னும் கோயிலில்
க்ருஷ்ணன் இருப்பதால் என்
வாழ்வு நல்லபடியாய் செல்கிறது!
அவன் விரும்பி என் மனதில்
இருப்பதால், அது கோயிலாக
மாறியது! க்ருஷ்ணா...

சரணாகதியே உபாயம்!

ராதேக்ருஷ்ணா!

மனதிலே மாற்றம் கொண்டு
வர சுலபமான ஒரே வழி
பகவான் க்ருஷ்ணனிடம்
சரணாகதி செய்வதே!
அப்பொழுது நம் மனதை அவன்
பார்த்துக்கொள்வான்! கொடுப்பாய்!

Saturday, August 4, 2012

சரியாவாய் !

ராதேக்ருஷ்ணா!
 
நல்லதை நினைப்பவருக்கு எல்லா
கஷ்டங்களிலும் நிச்சயம் உதவ
தெய்வம் வரும்! தவறான
எண்ணங்களே நம் வாழ்வில் தெய்வ
அருளை தடுக்கிறது! சரியாவாய் !

நல்லதை நினை...

ராதேக்ருஷ்ணா!
 
நல்லதை நினைப்பதே மனதிற்கு
இதம் தரும்! நல்லது தான் நடக்கும்
என்ற எண்ணம் இருந்தால் நிச்சயம்
நாம் எல்லா பிரச்சனைகளையும்
 சமாளிப்போம்...

Friday, August 3, 2012

கண்ணாரக் கண்டேன்!

ராதேக்ருஷ்ணா!
 
காத்திருந்து கஜேந்த்ர வரதனை
நான் திருவல்லிக்கேணியில் கண்ணாரக்
கண்டேன்! வா என்று அழைத்து எனக்கு
விசேஷ கிருபை செய்தார் நரசிம்மர்!
இன்று நல்ல நாள்!

வேதவல்லி தயார்!

ராதேக்ருஷ்ணா!
 
ஜொலிக்கிறாள் வேதவல்லி தயார்!
அமைதியான திருமுக மண்டலத்தோடு
தன் குழந்தைகளை அவள்
அணுக்ரஹிக்கும் அழகே அழகு!
என்னை ரக்ஷிக்கும் நாயகி அவள்!

பார்த்தசாரதியை பார்த்தேன்!

ராதேக்ருஷ்ணா!
 
நேற்று நினைத்தேன்! இன்று
பார்த்தசாரதியை பார்த்தேன்!
என் மீசை அழகன் அவன்
நினைக்கும் போதெல்லாம் என்னை
அழைக்கிறான்! பார்த்தசாரதியின்
கருணைக்கு எல்லையில்லை!

Thursday, August 2, 2012

ராமானுஜரை தந்தார்!

ராதேக்ருஷ்ணா!

5 வயதிலேயே ஆக்கியாழ்வான்
என்னும் பெரிய பண்டிதரை ராஜ
சபையில் வென்றவர் சுவாமி
ஆளவந்தார்! இவர் வைஷ்ணவ
சித்தந்ததிர்க்கு ராமானுஜரை தந்தார்!

யாமுனாச்சார்யன்...

ராதேக்ருஷ்ணா!
 
யாமுனாச்சார்யன் என்பதே
ஆளவந்தாரின் இயற்பெயர்!
ஒரு ராணி ராஜ சபையில்
இவரின் மேதா விலாசத்தைக்
கண்டு இவரை "ஆளவந்தீரோ"
என்று அழைத்தார்!

ஆடி உத்திராடம்!

 ராதேக்ருஷ்ணா!
இன்று ஆடி உத்திராட நக்ஷத்திரம்!
சுவாமி ஆளவந்தார் அவதரித்த
நன்னாள் இன்று! வீரநாராயணபுரத்தில்
 அவர் நாதமுனிகளின் பேரராய் பிறந்தார்!

Wednesday, August 1, 2012

பயணம் செய்!


ராதேக்ருஷ்ணா!

ஒவ்வொரு பயணமும் எனக்கு 
நிறைய நல்ல விஷயங்களை 
சொல்லிக் கொடுக்கிறது! என் 
வாழ்வில் பயணங்களே என்னை 
நிறைய பக்குவப்படுத்தி 
இருக்கிறது! பயணம் செய்!

திருவனந்தபுரம் வாழ்க...


ராதேக்ருஷ்ணா!

தினமும் இந்த சமயத்தில் 
பத்மநாபனின் கோயிலில் இருப்பேன்! 
பக்தர்களோடு என் பத்மநாபனை 
பார்ப்பதே சுகமான அனுபவம்! 
திருவனந்தபுரம் வாழ்க...

யாரைப் பார்ப்பேன்?


ராதேக்ருஷ்ணா!

திருவனந்தபுரம் என்னும் உன்னத 
பூலோக வைகுண்டத்தில் இருந்து 
கிளம்பிவ்ட்டேன்! 10 நாள் என் 
பத்மநாபனின் திருமுகத்தைக் கண்டேன்!
நாளை யாரைப் பார்ப்பேன்?

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP