Wednesday, October 17, 2012

வா போவோம்!


ராதேக்ருஷ்ணா!

இப்பொழுது ஸ்ரீ பத்மநாபர்,
நரசிம்மரோடும், க்ருஷ்ணனோடும் 
உற்சவத்திற்கு தயாராகி விட்டார்!
பக்தர்கள் பகவானுக்காக காத்திருக்கிறார்கள்!
 வா போவோம்!

நவ வித பக்தி!


ராதேக்ருஷ்ணா!

இந்த நவராத்திரியில் ப்ரஹ்லாதன் 
சொன்ன ஸ்ரவணம், கீர்த்தனம்,
ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம்,
வந்தனம், தாஸ்யம், சக்யம், ஆத்ம 
நிவேதனம் ஆகியவை செய்வோம்!

நவராத்திரி ஆரம்பம்...


ராதேக்ருஷ்ணா!

நவராத்திரி ஆரம்பம்...ஒவ்வொரு 
நாளும் நம் வீட்டில் தெய்வ லீலை 
வித விதமாய் நடக்கட்டும்! நமது 
இதயத்தில் ஜகன் மாதாவின் 
அருள் நிறையட்டும்!

Monday, October 15, 2012

உனக்கு நஷ்டம்!


ராதேக்ருஷ்ணா!

குரு ஒவ்வொருவருக்கும் அனுக்ரஹம்   
மட்டுமே செய்கிறார்! உனக்கு 
கிடைக்கும் அனுக்ரஹம் நிச்சயம் 
மற்றவருக்கு இல்லை! உன் குருவை 
நீ உணராவிட்டால் உனக்கு நஷ்டம்!

அற்புதமான க்ருபை...


ராதேக்ருஷ்ணா!

மற்ற சிஷ்யருக்கு குரு செய்யும் 
அனுக்ரஹம் மட்டுமே உனக்கு 
தெரிகிறது! குரு உனக்கு செய்யும் 
அற்புதமான க்ருபையை நீ ஒரு 
நாளும் கவனிப்பதே இல்லை!

சிஷ்யராக இல்லை!


ராதேக்ருஷ்ணா!

உன் குரு உன்னை விட 
மற்றவருக்கு அதிக முக்கியத்துவம் 
கொடுக்கிறார் என்கிற புத்தி 
உனக்கு இருந்தால், இன்னும் 
நீ உன் குருவிற்கு சிஷ்யராக 
இல்லை என்று அர்த்தம்!

Sunday, October 14, 2012

நீயாச்சு நானாச்சு...


ராதேக்ருஷ்ணா!

வைகுண்டபதி...இன்று திருமந்திர 
நகருக்கு என்னால் வர முடியவில்லை!
 ஆனால் நிச்சயம் நீ என்னோடு  இங்கே 
இருக்கிறாய்! நீயாச்சு நானாச்சு பார்க்கலாம்!

ஏன் ஒதுக்கி வைத்தாய்?


ராதேக்ருஷ்ணா!

ஹே...வைகுண்டபதி...என்னை 
மட்டும் ஏன் இங்கே ஒதுக்கி 
வைத்தாய்? நான் உன்னுடைய 
5 கருட சேவைக்கு வராமல் இங்கே
இருக்கிறேனே? நான் உன் 
பக்தனல்லவா? சொல்...

5 கருட சேவை!


ராதேக்ருஷ்ணா!

இதோ தூத்துக்குடியில் நம் 
வைகுண்டபதி பெருமாள்,5 
கருட சேவைக்கு தயாராகிறார்!
பக்தர்கள் எல்லோரும் வைகுண்டபதியோடு 
ஊர்வலம் செல்ல காத்திருக்கிறார்!

Saturday, October 13, 2012

க்ருஷ்ணனிடம் திருப்பு!


ராதேக்ருஷ்ணா!

நாம் நம் மனதை வியாதியிடமிருந்து 
திருப்பிக்கொண்டே இருக்கவேண்டும்!
 அப்பொழுதுதான் நம் வியாதிகள் 
சீக்கிரம் சரியாகும்! மனதை 
க்ருஷ்ணனிடம் திருப்பு!

Thursday, October 11, 2012

உயர்ந்து காட்டுவாய்!


ராதேக்ருஷ்ணா!

உன்னை ஒதுக்கினவர் முன் 
நீ ஜெயிக்கவேண்டும்! உன் 
புலம்பலைப் பற்றி யாருக்கும் 
கவலை இல்லை! ஒதுக்கினவர் 
உன்னை நெருங்கி வரும்படி 
நீ உயர்ந்து காட்டுவாய்!

யோசி!


ராதேக்ருஷ்ணா!

நாம் மற்றவரை ஒதுக்கும்போது 
நாம் பலமானவராய் உணர்கிறோம்!
அதுவே மற்றவர் நம்மை ஒதுக்கும்போது 
பலவீனமாய் உணர்கிறோம்! ஏன் 
என்று கண்டுபிடி ? யோசி!

Wednesday, October 10, 2012

ஜெயிப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

மனதை எப்போதும் சந்தோஷமாக 
வைத்திருப்பாய்! வாழ்வில் கஷ்டங்கள்,
வியாதிகள், பிரச்சனைகள் எல்லாம் 
வரும்! ஆனால் சந்தோஷமாய் 
இருந்தால் நீ ஜெயிப்பாய்!

விசித்திரமான வஸ்து!


ராதேக்ருஷ்ணா!

மனது ஒரு விசித்திரமான வஸ்து!
 அதற்க்கு பிடிக்கிற ஒன்றை அது 
நினைக்கும்போது பெரிய கஷ்டங்களையும்,
 வியாதிகளையும் கூட அது மறந்துவிடும்!

வியாதி சரியாகும்!


ராதேக்ருஷ்ணா!

வியாதி இருக்கும்போது மனதை 
மற்ற விஷயங்களில் திருப்பு!
 அப்பொழுது வியாதியின் படுத்தல் 
உனக்கு குறைவாய் தெரியும்!
 சீக்கிரம் வியாதி சரியாகும்!

மனதை மாற்றவேண்டும்!


ராதேக்ருஷ்ணா!

உடலில் வியாதி வரும்போது 
நமக்கு தெரியாமலேயே மனது 
நம் உடலின் தொந்தரவை 
நினைக்கும்! அந்த சமயத்தில் நாம் 
மனதை மாற்றவேண்டும்!

Tuesday, October 9, 2012

கடவுளாய் தெரிவர்!


ராதேக்ருஷ்ணா!

வலி நம்மை எளியவரிடம் 
கூட பணிவாக பழக வைக்கிறது!
உடலில் வலி இருக்கும்போது 
நமக்கு உதவுபவர் வேலைக்காரரை 
இருப்பினும் கடவுளாய் தெரிவர்!

வலி!


ராதேக்ருஷ்ணா!

வலியே நீ ஒழிக! வலிக்கு 
சமமான விரோதி உலகில் 
வேறு யாருமே இல்லை! வலி 
தான் எனக்கு தெரிந்து ஒரு 
மனிதனின் அஹம்பாவதை 
சரியாய் அடக்குகிறது!

புரியாத புதிர்!


ராதேக்ருஷ்ணா!

வலி அதிசயமானது! வலி 
புரியாத புதிர்! வலி உடலின் 
மகத்துவத்தை புரியவைக்கிறது!
வலி நம் மனதில் அடுத்தவரின் 
கஷ்டத்தை புரியவைக்கிறது!

Monday, October 8, 2012

அளவுகோல்...


ராதேக்ருஷ்ணா!

வியாதி நமது நலம் விரும்பிகளின் 
பிரார்த்தனையின் ஆழத்தை நமக்கு 
காட்டுகிறது! வியாதி நம்மை சுத்திகரிக்க 
ஒரு அளவுகோல்! பக்குவப்படுவாய்!

வியாதி!


ராதேக்ருஷ்ணா!

வியாதி நம் அஹம்பாவதை அழிக்கிறது!
வியாதி நமக்கு உடலின் ஆரோக்கியத்தின் 
மகிமையை புரியவைக்கிறது! வியாதி 
நமக்கு வாழும் முறையை சொல்கிறது!

வரமா அல்லது சாபமா?


ராதேக்ருஷ்ணா!

வியாதி வரமா அல்லது சாபமா?
வியாதியை மற்றவர் சாபமாக நினைப்பார்!
பக்தரோ வியாதியை பகவானின் 
விசேஷமான வரமாகக் கருதுவர்!

Saturday, October 6, 2012

க்ருஷ்ணன் கவனிப்பான்!


ராதேக்ருஷ்ணா!

குழந்தைகளின் தேவையை மற்றவர் 
கவனிப்பார்! அது போலே நீ குழந்தையாய் 
இருந்துவிட்டால் உன் தேவைகளை 
க்ருஷ்ணன் நன்றாக கவனிப்பான்!
 ஜாலியாய் இரு!

என்றும் ஆனந்தம்!


ராதேக்ருஷ்ணா!

நீ குழந்தையாய் இருக்கும் வரை 
என்றுமே ஆனந்தம் தான்! பொறுப்பாய் 
இரு! ஆனால் எல்லாவற்றையும் நீ தான் 
நடத்துகிறாய் என்று நினைத்து விடாதே!

சுகமாய் அனுபவி!


ராதேக்ருஷ்ணா!

நீ என்றும் குழந்தை என்பதை 
மட்டுமே நினைவில் கொள்! உன் 
உடலுக்கு தான் வயதாகிறதே 
ஒழியே உனக்கு அல்ல! குழந்தையாய் 
வாழ்வை சுகமாய் அனுபவி!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP