Wednesday, May 4, 2011

முறுக்கு மீசை அழகன்!


ராதேக்ருஷ்ணா

பார்த்தசாரதியின் முறுக்கு மீசைக்கு
முன் எந்த வீரன் தான் நிற்பான்?
பார்த்தசாரதியைப் பார்த்தாலே 
வாழ்க்கையை ஜெயிக்க மனதில்
பலம் வந்துவிடும்...

உன் பாதமே கதி!


ராதேக்ருஷ்ணா

பார்த்தசாரதியே சுவாமி ராமானுஜராக
காந்திமதி அம்மையாருக்கும், அசூரி
கேசவப் பெருமாளுக்கும் பிள்ளையாய்
பிறந்தார்! பார்த்தசாரதி உன்
 பாதமே கதி!

அர்ஜுனனுக்கு சாரதி...


ராதேக்ருஷ்ணா

இப்பொழுது ஸ்ரீ பார்த்தசாரதி 
பெருமாளை தரிசிக்க திருவல்லிக்கேணி
செல்கிறோம்! அர்ஜுனனுக்கு 
சாரதியான க்ருஷ்ணன் நம் 
வாழ்வையும் நடத்துவார்! நம்பு!

விட்டுத் தள்ளு!


ராதேக்ருஷ்ணா

உன்னை க்ருஷ்ணன் நன்றாக
அறிவான்! நீ ஏன் இந்த 
மனிதர்களின் வார்த்தைகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்து உன்
சந்தோஷத்தை இழக்கிறாய்?
விட்டுத் தள்ளு!

உதவுபவர்களை மறக்காதே!


ராதேக்ருஷ்ணா

பல மனிதர்கள் குறை
சொல்ல வருவார்கள்!
சில மனிதரே உனக்கு
உதவ வருவார்கள்! குறை
சொல்பவர்களிடம் மனதை
கொடுக்காதே! உதவுபவர்களை
மறக்காதே!

ஜாக்கிரதை!


ராதேக்ருஷ்ணா

மனிதர்களிடம் உன் சுய
மரியாதையை ஒரு நாளும்
விட்டுக்கொடுக்காதே! 
மனிதர்களிடம் அன்புடன் இரு!
 ஆனால் உன்னை ஏமாற்ற
 இடம் கொடுத்து விடாதே!
ஜாக்கிரதை!

Tuesday, May 3, 2011

வாழ்க்கை வாழவைக்கும்!


ராதேக்ருஷ்ணா

வாழ்வின் ஒவ்வொரு செயலையும்
ரசி! வாழ்வின் ஒவ்வொரு 
நிகழ்வையும் அனுபவி! நீ
குழந்தையாக வாழ்வை 
எதிர்கொண்டால் நிச்சயம்
வாழ்க்கை உன்னை வாழவைக்கும்!

உழைப்பை நம்பு!


ராதேக்ருஷ்ணா

வாழ்வில் அதிருஷ்டத்தை 
நம்பிக்கொண்டிருப்பவர்கள்
ஒரு நாளும் அற்புதத்தைக்
கண்டதில்லை! உழைப்பை 
நம்புபவர்கள் ஒரு நாளும் 
வாழ்வில் தோற்றதில்லை!

முன்னேற முடியும்!


ராதேக்ருஷ்ணா

மூளையை சரியாக 
உபயோகப்படுத்தினால்
நிச்சயம் யாராக இருந்தாலும்
வாழ்வில் முன்னேற முடியும்! 
மூளையை உபயோகிக்க 
பகவானின் நாமத்தை ஜபி!

என்றும் ஆரோக்யமே!


ராதேக்ருஷ்ணா

மனது நல்ல உடம்பையும்
பலகீனப்படுத்தும்! முடியாத
உடலையும் பலசாலியாக்கும்!
உன் மனதை நீ எப்பொழுதும்
சரியாக வைத்திருந்தால் 
என்றும் ஆரோக்யமே!

இன்று களைப்பா?


ராதேக்ருஷ்ணா

உடல் பலகீனமாக இருந்தாலும்,
மனதில் ஆசையும், நம்பிக்கையும் 
இருந்தால் நிச்சயம் களைப்பைத்
தாண்டி நம் வேலைகளை 
செய்யமுடியும்! இன்று களைப்பா?

மனதில்தான் ஆரம்பம்!


ராதேக்ருஷ்ணா

களைப்பு என்பது முதலில்
மனதில்தான் ஆரம்பம்! உடல்
பலமாக இருந்தாலும் மனம்
இன்னும் அதிக நேரம் 
தூங்கினால் சுகம் என்று 
நினைத்தால் உடல் எழாது!

உன்னை சரி செய்...


ராதேக்ருஷ்ணா

உன்னிடம் உள்ள குறைகளை 
கடவுளிடம் சொல்லிவிட்டு உன்னை
சரி செய்துகொண்டு நிம்மதியாய்
இருக்கப்பார்! அடுத்தவரின் 
குறைகள் கண்ணில் பட்டால் 
நீ முன்னேறமுடியாது!

சந்தேகமில்லை!


ராதேக்ருஷ்ணா

எல்லோருக்கும் கடவுள் ஒன்று
போலவேதான் அருள் செய்கிறார்!
நாம் அதை வாங்கிக்கொள்ளும்
முறையில்தான் மாற்றம் வருகிறது!
கடவுள் என்றுமே நல்லவர்தான்!
சந்தேகமில்லை!

கடவுளின் குழந்தைகள்!


ராதேக்ருஷ்ணா

நீயும் நானும் கடவுளின்
குழந்தைகள்! அதனால் நமக்குள் 
யார் பெரியவர் என்கிற 
போட்டியே கிடையாது! நீயும்
நன்றாயிரு! நானும் நன்றாய்
இருப்பேன்! ஆனந்தம்!

Friday, April 29, 2011

எல்லாம் மாறும்!


ராதேக்ருஷ்ணா

நிச்சயம் நீ வெல்வாய்! இதில்
உனக்கு ஒருநாளும் சந்தேகமே 
வரக்கூடாது! சந்தேகம் 
வரும்போதெல்லாம் விடாமல்
நாமஜபம் செய்! எல்லாம் 
மாறும்! கவலைப்படாதே!

பிரகாசம் அடையும்!


ராதேக்ருஷ்ணா

உன் ஆழ் மனதில் பதிந்துள்ள
தேவையற்ற சிந்தனைகளை
ஒவ்வொன்றாக களைந்துகொண்டே
வந்தால் நிச்சயம் உன் மனம்
பிரகாசம் அடையும்! முயற்சி
செய் முடியும்!

அனைவரும் நலமே!


ராதேக்ருஷ்ணா

எல்லாம் வல்ல இறைவனின் 
அருளால் நாம் அனைவரும்
நலமே! நம்முடைய கேட்ட
குணங்கள், செயல்கள், 
எண்ணங்கள் மாற நாம்
நிம்மதியாய் மட்டுமே 
இருப்போம்! இது சத்தியம்!

Thursday, April 28, 2011

சவால்களை வெல்...


ராதேக்ருஷ்ணா

எல்லா சவால்களையும் சந்தித்து,
சமாளித்து, வெல்வதுதான் சுகம்!
சவால்களே இல்லையென்றால் 
வாழ்வில் ஒரு நாளும் முன்னேற்றமோ,
சுகமோ இருக்கவே இருக்காது!

சவாலை சமாளி!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு கஷ்டமான சூழ்நிலையிலும்
நீ வளருகின்றாய்! ஒவ்வொரு புதிய
சவாலும் உன்னை இன்னும்
பக்குவப்படுத்துகிறது! எதற்கும்
கலங்காதே! சவாலை சமாளி!

கணக்கு பண்ணிப் பார்!


ராதேக்ருஷ்ணா

உன் சுயநலத்தினால் நீ
எத்தனை தடவை எத்தனை
அசிங்கமான காரியங்கள்
உலகில் செய்திருக்கிறாய் 
என்பதை கணக்கு பண்ணிப்
பார்! உன்னை நீ சரி செய்!

சுயநலத்தின் எல்லை...


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய சுயநலத்தின் எல்லையை
நீ தெரிந்துகொள்! உன் சுயநலத்தின்
காரணமாக நீ எத்தனை தடவை
பயங்கரமாக நடந்துகொண்டிருக்கிறாய் 
என்று நினை! 

சுயநலவாதிகள்!


ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் சுயநலவாதிகள்!
தங்களுடைய காரியம் நடக்க
என்னவேண்டுமானாலும் 
சொல்வார்கள்; செய்வார்கள்! 
நீ தான் உன்னை 
காத்துக்கொள்ளவேண்டும்!
வேறு வழி இல்லை!

Tuesday, April 26, 2011

நீ பெரிய மனிதரில்லை!


ராதேக்ருஷ்ணா

பக்தி செய்வதினால் நீ 
உலகில் பெரிய மனிதரில்லை! 
நீ குழந்தையாய் குதூகலமாய்
எப்பொழுதும் சந்தோஷமாக 
இருப்பதற்காகவே பக்தி 
செய்கிறாய்!

எளிமையான பக்தி...


ராதேக்ருஷ்ணா

எளிமையான பக்தி செய்!
பக்தி என்பது உன்னை 
நிம்மதியாக வைப்பதற்காகவே!
பக்தி என்று உன் கற்பனை
உலகில் சஞ்சரிக்காதே!
கடவுளை நம்பினால் பக்தி!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP