Monday, July 12, 2010

நல்லதை நினைக்க பழகு!

ராதேக்ருஷ்ணா

மனதை நல்ல விஷயங்களில்
நீ தான் ஈடுபடுத்த வேண்டும்!
ஒரு முறை நீ உன் மனதை 
நல்லதாக நினைக்க 
பழக்கிவிட்டால், பிறகு 
அது நன்மை செய்யும்!

மனதின் பழக்கைத்தை மாற்றிக்கொள்!

ராதேக்ருஷ்ணா

மனது எப்பொழுதுமே 
கெட்ட விஷயங்களையும், 
விபரீதங்களையும்
நன்றாக நினைக்கும்! நீ
அதை அப்படித்தான் பழக்கி
வைத்திருக்கிறாய்! 
மாற்றிக்கொள்!

சத்தியமாக உணரலாம்!

ராதேக்ருஷ்ணா

மனதில் திடமாக நம்பிக்கை
வைத்து, உடல் நலமாக
இருக்கிறது என்று நினை!
சத்தியமாக உன் மனதின் 
தாக்கத்தை உன் உடலில் 
உணரலாம்! முயற்சி!

உன் மனதை பலமாக்கு!

ராதேக்ருஷ்ணா

உடலைக்காட்டிலும் மனம்
பலமுடையது! உன் உடலை
பலமாக்க உன் மனதால்
மட்டுமே முடியும்! க்ருஷ்ணனை
திடமாக பிடித்துக்கொண்டு 
உன் மனதை பலமாக்கு!

மனதின் பலம்!

ராதேக்ருஷ்ணா

உடல் பலவீனமாக இருந்தாலும்,
மனம் தைரியமாக இருந்தால்
உலகையே வெல்லலாம்! 
உடலால் சாதிக்க முடியாததை
மனதின் பலத்தால் சாதிக்கலாம்!

Friday, July 9, 2010

நம்பிக்கை வைத்துப்பார்!

ராதேக்ருஷ்ணா

நம்பிக்கைமேல் உனக்கு 
நம்பிக்கை இருந்தாலே  
போதும்! அது உன்னை
 மிக உயர்ந்த இடத்திற்கு 
அழைத்து செல்லும்! 
நம்பிக்கை வைத்துப்பார்!
அதுவே சுகம்!

நம்பிக்கையால் செய்யலாம்!

ராதேக்ருஷ்ணா

பணத்தினாலும், பதவியினாலும்,
உதவியினாலும் செய்ய முடியாததை
நம்பிக்கையால் செய்யலாம்! 
எல்லோரும் கூட இருந்தாலும்,
உனக்கு நம்பிக்கைதான் பலம்!

க்ருஷ்ணனுக்கு பிரியமானவர்கள்!

ராதேக்ருஷ்ணா

மனதில் நம்பிக்கையை தவிர 
எதற்கும் இடம் தராதே! 
தேவையற்ற எண்ணங்களே 
வாழ்க்கைக்கு விரோதிகள்!
நம்பிக்கை உள்ளவர்கள் 
க்ருஷ்ணனுக்கு பிரியமானவர்கள்!

க்ருஷ்ண நம்பிக்கை வீண் போகாது!

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணநிடத்தில் பரிபூரணமாக
நம்பிக்கை வை! அவனை 
நம்பினவர்கள் என்றுமே
வீண் போகமாட்டார்கள்!
நிம்மதியாக இரு! நீ
அமோகமாக வாழ்வாய்!

க்ருஷ்ண நாம மகிமை!

ராதேக்ருஷ்ணா

காசு பணத்தினால் யாரும்
நம்பிக்கையை வாங்க முடியாது! 
க்ருஷ்ண நாமஜபத்தினால்
நிச்சயம் நம்பிக்கை நன்றாக
வரும்! அமைதியாக 
ப்ரார்த்தனை செய்!

க்ருஷ்ணன் உன்னோடு இருக்கிறான்!

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையின் எந்த சந்தர்ப்பத்திலும்
நம்பிக்கையை இழக்காதே!
க்ருஷ்ணன் இருக்கும்போது 
உனக்கு என்ன கவலை?
எது வந்தாலும் க்ருஷ்ணன்
உன்னோடு இருக்கிறான்!

Wednesday, July 7, 2010

நல்லதை நினை!

ராதேக்ருஷ்ணா

நினைவுகள் சரியாக இருந்தால்
வாழ்க்கை நன்றாக இருக்கும்!
நினைவுகள் சரியாக இருக்க, 
விடாமல் க்ருஷ்ண நாம ஜபம்
செய்! நீயே வித்தியாசத்தைக்
காண்பாய் !

க்ருஷ்ணனிடம் நம்பிக்கையோடு இரு!

ராதேக்ருஷ்ணா

மனதில் எந்த விதமான
சந்தேகத்திற்கும் இடம் தராதே! 
எப்பொழுதும் க்ருஷ்ணனிடம் 
நம்பிக்கையோடு இரு! 
நிச்சயம் அவன் உன்னை
காப்பாற்றியே தீருவான்!

வெற்றி பெறுவாய்!

ராதேக்ருஷ்ணா

ஒரு நாள் உனது தேவையற்ற
எண்ணங்களுக்கு விடுமுறை 
கொடுத்துப்ப் பார்! நிச்சயம்
பெரிய மாற்றத்தை உன் 
வாழ்க்கையில் நீ காண்பாய்!
வெற்றி பெறுவாய்!

Tuesday, July 6, 2010

க்ருஷ்ணன் ஆசிர்வதிக்கிறான்!

ராதேக்ருஷ்ணா

காயம் இல்லாத மனது என்று
யாருக்குமில்லை! நாமஜபத்தினால்
உன் மனதின் காயங்களை 
மறந்துவிடு! உன் காயங்கள்
ஆற க்ருஷ்ணன் 
ஆசிர்வதிக்கிறான்!

மனமுடைந்து போகாதே!

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் தோல்விகளை 
மட்டுமே அனுபவித்தவர்கள்
யாருமில்லை! தோல்விகளே 
தெரியாதவர்களும் யாருமில்லை!
அதனால் மனமுடைந்து 
போகாதே! நீ ஜெயிப்பாய்!

இன்று உன் கையில்!

ராதேக்ருஷ்ணா
வாழ்க்கை என்னும் பாடம் 
உனக்கு பல விஷயங்களை
சொல்லி தருகிறது! நீ அதை
அப்படியே ஏற்றுக்கொண்டு 
வாழ்ந்தால் சந்தோஷமாய்
வாழலாம்! இன்று உன் கையில்!

தோல்விகளில் கிடைத்த பாடம்!

ராதேக்ருஷ்ணா
தோல்விகளையே நினைத்திருந்தால்
வாழ்க்கை வெறுத்துவிடும்!
தோல்விகளில் கிடைத்த
பாடத்தை நினைவில் கொண்டால் 
அது உனக்கு வெற்றியை
தரும்! முயற்சி செய்!

துன்பம் மட்டும் நினைவில் கொள்ளாதே !

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் நீ சந்தோஷமே 
அனுபவிக்கவில்லை என்று
நினைக்காதே! நீ உன் 
வாழ்வின் துன்பங்களை மட்டுமே 
நினைவில் வைத்திருப்பதால் 
அப்படி தோன்றுகிறது!

நாம ஜபம் செய்! கர்மவினைகளை மாற்று!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு
கவலை மனதில் இருக்கத்தான் 
செய்கிறது! அதெல்லாம் முந்தின
ஜன்மாவின் கர்ம வினைகள்தான்!
இப்பொழுது நாம ஜபம் செய்!
அவை மாறும்!

வாயார பாடி மனதார விட்டலனை சிந்திப்பாய் !

ராதேக்ருஷ்ணா
இனிய மழைக்காலத்தில்
பண்டரிபுரத்தில், விட்டலனை
தரிசிப்பதே  பரம சுகம்!
வாயார விட்டலனை பாடு!
மனதார அவன் ரூபத்தை
நினை! ஆனந்தம்!

கூர்ம தாசரைப்போல் பக்தி செய் !

ராதேக்ருஷ்ணா

கை காலில்லாத கூர்ம தாசரைப்போல்
நீ பக்தி செய்வாய் ! அப்பொழுது
உன்னைத் தேடி விட்டலன்
வருவான்!உடலில் ஊனம்
இருக்கலாம்! மனதில் 
ஊனமிருக்கக்கூடாது!

எப்பொழுது ஒளிப்பாய்?

ராதேக்ருஷ்ணா
சாவ்தா மாலியின் தோட்டத்திற்கு
போய், அவரின் இதயத்தில்
ஒளிந்து கொண்ட திருடன்
விட்டலனை நினை! நீ
எப்பொழுது உன் இதயத்தில் 
விட்டலனை ஒளிப்பாய்?

பார்த்தாலே புண்ணியம்!

ராதேக்ருஷ்ணா

நாமதேவரின் திருநாமத்தோடு,
ஞாநேஸ்வரின் அணுக்ஹத்தோடு
விட்டலன் சந்நிதியில் ஆடிப்பாடி
அவனிடத்தில் பக்தி செய்பவர்களைப்
பார்த்தாலே புண்ணியம்!

ஹே விட்டலா என்னையும் கூப்பிடு!

ராதேக்ருஷ்ணா

சந்திரபாகா நதியில் நீராடி,
புண்டலீகனின் ஆசிர்வாதத்தோடு
பாண்டுரங்கனை தரிசனம் 
செய்பவர்கள் பரம 
பாக்கியவான்கள்! ஹே விட்டலா
என்னையும் கூப்பிடு!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP