Wednesday, March 9, 2011

த்வாரகாவில் சுகமான இரவு...


ராதேக்ருஷ்ணா

சுகமான இரவு கழிந்தது!
த்வாரகாவில் இரவு அற்புதமாக
இருக்கிறது! இன்றைய காலை
நிம்மதியாக தொடங்குகிறது!
த்வாரகாதீசா நமஸ்காரம்!

Tuesday, March 8, 2011

சோம்நாத் கோயில்...


ராதேக்ருஷ்ணா

சோம்நாத் கோயிலைப் பார்த்து
அதிசயித்தோம்! கடற்கரயில்
எத்தனை அற்புதமாக நின்று
கொண்டிருக்கிறது! பாரதத்தின் 
பெருமையை நிரூபிக்கும் ஸ்தலம்!

முக்தி த்வாரகா...


ராதேக்ருஷ்ண

பகவான் க்ருஷ்ணனின் சரண
கமலங்களை மான் என நினைத்து
 "ஜரா" என்கிற வேடுவன் அம்பு
விட்டான்! அந்த முக்தி த்வாரகா
என்கிற இடத்தைக் கண்டோம்!

ஆதிசேஷனை தரிசித்தோம்!


ராதேக்ருஷ்ணா

பலராமர் வைகுந்தத்திற்கு கிளம்பின
குகையை பார்த்தோம்! ஆனந்தமாக
ஆதிசேஷனை தரிசித்தோம்! பகவான்
வைகுந்தம் சென்ற இடத்தை பார்த்தோம்!

கிரிதாரியை கண்டோமே!


ராதேக்ருஷ்ணா

மீராவை தன்னுள் வைத்துக்கொண்ட
கிரிதர கோபாலனை, ருக்மிணியை
கல்யாணம் செய்து கொண்ட
 காதலனை, குசேலரிடம் அவல் 
வாங்கின நண்பனைக் கண்டோமே!

எத்தனை க்ருபை! ஆஹா!



ராதேக்ருஷ்ணா

த்வாரகா நாதனின் கோயிலில்
இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும்
மிக மிக சுகம்! எத்தனை க்ருபை
செய்கிறான் இந்த ராஜாதி
ராஜன்! இவனல்லவோ ப்ரஜா
ராஜன்! ஆஹா!

த்வாரகா நாதனை அனுபவித்தோம்!


ராதேக்ருஷ்ணா

ஆஹா அழகான த்வாரகா
 நாதனை முத்து மாலையில்
ரோஜா வண்ண ஆடையில்
அழகாக அனுபவித்தோம்!
வேறு என்ன வேண்டும் வாழ்வில்?
எத்தனை சுலபமானவன்!

நம்மை வெல்வோம்!


ராதேக்ருஷ்ணா

நல்லவர்கள் வாழவேண்டும்!
தீயவர்கள் திருந்தவேண்டும்!
நன்மைகள் வளரட்டும்!
தீமைகள் மாறட்டும்!
சந்தோஷமாய் வாழ்வோம்!
பக்தியோடு வாழ்வோம்!
நம்மை வெல்வோம்!

சாந்தி நிலவட்டும்!


ராதேக்ருஷ்ணா

வேற்றுமை அழியட்டும்!
ஒற்றுமை ஓங்கட்டும்!
தற்பெருமை நாசமாகட்டும்!
நாம ஜபம் வளரட்டும்!
மன சஞ்சலங்கள் இல்லாமல்
போகட்டும்! உலகில் சாந்தி
நிலவட்டும்!

ஆனந்தம் பொங்கட்டும்!


ராதேக்ருஷ்ணா

அஹம்பாவம் நாசமாகட்டும்! 
சுயநலம் நாசமாகட்டும்! 
பொறாமை நாசமாகட்டும்!
வெறுப்பு நாசமாகட்டும்! 
அன்பு மலரட்டும்!
 பக்தி வளரட்டும்!
ஆனந்தம் பொங்கட்டும்!

இதையே நினைத்துக்கொண்டிரு!


ராதேக்ருஷ்ணா

"நான் வாழ்வில் தோற்கமாட்டேன்!
நிச்சயம் பகவானின் அனுக்ரஹத்தால் 
வெல்வேன்! ஒரு நாளும் என் வாழ்க்கை
வீண்போகாது!" இதையே எப்பொழுதும்
நினைத்துக்கொண்டிரு!

இப்படியே சொல்லிக்கொண்டிரு!


ராதேக்ருஷ்ணா

"நான் ஜெயிப்பேன்! என் கண்ணன்
என் கூட இருக்கின்றான்! நிச்சயம்
நான் நன்றாக இருப்பேன்! நான்
எல்லா கஷ்டங்களையும் தாண்டி
 வாழ்வேன்!" இப்படியே
சொல்லிக்கொண்டிரு!

அமைதியாய் வாழவேண்டும்!


ராதேக்ருஷ்ணா

இயற்கையின் மடியில் அமைதியாய் 
வாழவேண்டும்! நம்மை நாம்
சுத்திகரித்துக்கொண்டால் நிச்சயம்
வாழ்க்கை சுகமாகவே இருக்கும்!
நாம் மாறினால் எல்லாம் மாறும்!

Friday, March 4, 2011

சுகமான நாள்!


ராதேக்ருஷ்ணா

இந்த நாள் நிச்சயம் வாழ்வில்
மிக சுகமான நாள்! நீண்ட
நாள் ஆசை! த்வாரகாவிற்கு 
கிளம்பிவிட்டோம்! கண்ணன்
 அழைத்து செல்கின்றான்!
கண்ணா கோடி நன்றி!

கண்ணின் ராஜ தர்பார்!


ராதேக்ருஷ்ணா

குசேலருக்கு க்ருஷ்ணன் பூஜை
பண்ணின த்வாரகாவிற்கு செல்கிறேன்!
நம்முடைய கண்ணின் ராஜ தர்பாருக்கு
செல்கிறோம்! க்ருஷ்ணா உன்னை 
நம்பி வருகிறோம்! சுகம்! 

த்வாரகாவிற்கு செல்கிறோம்!


ராதேக்ருஷ்ணா

இப்பொழுது நாங்கள் 
திருவனந்தபுரத்திலிருந்து
த்வாரகாவிற்கு செல்கிறோம்!
ஸ்ரீ அனந்த பத்மநாபரின் பிறந்த
ஊரிற்கு செல்கிறோம்! 
நீங்களும் வாருங்கள்... 

குழப்பிக்கொள்ளாதே!


ராதேக்ருஷ்ணா

யார் எதை சொன்னாலும் அதை
அப்படியே ஏற்றுக்கொண்டு உன்னை
நீ குழப்பிக்கொள்ளாதே! யார்
எதை சொன்னாலும் முதலில்
நன்றாக யோசித்து முடிவு 
எடு! தெளிவு வரும்!

ஜெயித்து வா!


ராதேக்ருஷ்ணா

குழப்பங்களை ஆரம்பத்திலேயே நீ
களையாவிட்டால் நிச்சயம் உன்னால் 
நிம்மதியாக வாழமுடியாது!
உன்னால் குழப்பங்களை ஜெயிக்க
முடியும்! ஜெயித்து வா!

சரி செய்து கொள்!


ராதேக்ருஷ்ணா

உன் மனதில் குழப்பங்கள்
வந்தால் அதை உடனேயே 
கவனித்து சரி செய்து கொள்!
இல்லாவிடில் குழப்பங்கள் உன்னை
வாழவிடாமல் படுத்திவிடும்!
ஜாக்கிரதை!

Wednesday, March 2, 2011

நீ எப்படி?


ராதேக்ருஷ்ணா

முயற்சி செய்யாத ஒருவர்,
திருடன், கொலைகாரரை
விட மோசமானவர்கள்! முயற்சி
செய்யாதவர் இந்த பூமியை
அழிக்கும் தீவிரவாதிகள்!
நீ எப்படி?

முயற்சி செய்...


ராதேக்ருஷ்ணா

முயல்வது உன் கடமை!
அந்தக் கடமையை நீ
செய்தால் மட்டுமே உன்னால்
உன் வாழ்வில் வெல்லமுடியும்!
முயற்சி இல்லாதவரை அவர்
வாழ்க்கையும் மதிப்பதில்லை!

முயல்வாய்!


ராதேக்ருஷ்ணா

முயற்சி இருந்தால் யார்
வேண்டுமானாலும் வாழ்வில்
பெரிய இடத்தை அடைய முடியும்! 
முயற்சி உள்ளவர்களுக்கே
கடவுளின் ஆசீர்வாதமும்
கிடைக்கிறது! முயல்வாய்!

க்ருஷ்ணன் மதிக்கிறான்!


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கையை க்ருஷ்ணன்
மதிக்கிறான்! அதனால் நீ
வாழ்ந்துதான் ஆகவேண்டும்!
உன் வாழ்க்கையை நீ வாழ
யாருடைய அனுமதியும் வேண்டாம்!
தைரியமாக வாழ்!

உன் வாழ்க்கையின் அர்த்தம்!


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கைக்கு என்று 
ஒரு அர்த்தம் உண்டு! அது
மற்றவருக்கு புரியாது! ஆனால் நீ 
அதை புரிந்துகொள்ளவேண்டும்!
உன் வாழ்க்கை சுவை மிகுந்தது!
அதிசியமானது!

வாழ்!


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்வைக் கண்டு நீயே
பயந்தால் என்ன செய்ய
முடியும்? உன் வாழ்வை
பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள
உடனே முயற்சி செய்!
உன் வாழ்வு மிகச்
சிறந்தது! வாழ்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP