Tuesday, May 10, 2011

என்னவென்று சொல்வது???


ராதேக்ருஷ்ணா

இன்று சுகமான நாள்! 
திருக்குறுங்குடி சுந்தர 
பரிபூரண நம்பியை தரிசித்த்ன்!
நம்பியைக் கண்டவர்கள் மனம் 
படும் பாட்டை என்னவென்று 
சொல்வது???

ராமானுஜரின் வழி நட!


ராதேக்ருஷ்ணா

சுவாமி ராமானுஜர் 120 வருஷம் 
இந்த பூமியில் வாழ்ந்தார்! ஜாதி,
மதம் இவைகளைக் கடந்து
எல்லோருக்கும் நன்மை செய்த 
அற்புதமான ராமானுஜரின் வழி நட!

மந்திரம் சொன்னார்...


ராதேக்ருஷ்ணா

சுவாமி ராமானுஜர் தான்
நரகம் போனாலும் மற்றவர்கள்
மோக்ஷம் அடைந்தால் போதும் என்று
 திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் 
மேலேறி எல்லோருக்கும்
மந்திரம் சொன்னார்...

சுவாமி ராமானுஜரின் திருநக்ஷத்திரம்!


ராதேக்ருஷ்ணா

இன்று சுவாமி ராமானுஜரின்
திருநக்ஷத்திரம்! சித்திரை
 மாதத்தில் திருவாதிரை 
நக்ஷத்திரத்தில் இந்த பூமியில் 
ஆதிசேஷனே ராமானுஜராகப்
பிறந்தார்!

Saturday, May 7, 2011

குருவின் ஆசீர்வாதம்...


ராதேக்ருஷ்ணா

அக்ஷய த்ருதீயைக்கு தங்கம்
வாங்கவேண்டுமென்று எந்த 
ஞானியும் சொல்லவில்லை! 
தங்கத்தை வாங்குவதைக்
காட்டிலும் குருவின் 
ஆசீர்வாதம் விசேஷம்!

மோக்ஷ வழி திறக்கட்டும்!


ராதேக்ருஷ்ணா

அக்ஷய திருதியை அன்றுதான்
பத்ரிகாஸ்ரமம் செல்லும் வழி
திறக்கப்படும்! நமக்கும் இன்று
மோக்ஷ வழி திறக்கட்டும்! 
மனதில் நம்பிக்கை வளரட்டும்! 

அக்ஷய திருதியை!


ராதேக்ருஷ்ணா

இன்று அக்ஷய திருதியை! 
பக்தி, ஞானம், வைராக்கியம்,
ஆரோக்கியம், ஐஸ்வர்யம்
அக்ஷயமாக இருக்கட்டும்! 
சத்சங்கம் அக்ஷயமாய் 
கிடைக்கட்டும்! ஆசீர்வாதம்!

Thursday, May 5, 2011

வெறுப்பு காட்டாதே!


ராதேக்ருஷ்ணா

மனதில் யாரிடமும் வெறுப்பு
காட்டாதே! அடுத்தவரின் மீது 
நீ தவறு கூறினால், உன் மீதே நீ
 சேற்றை அள்ளிப் பூசிக்கொள்கிறாய்!
இதை என்றும் மறக்காதே!

தெய்வத்தை நம்பு!


ராதேக்ருஷ்ணா

யாரும் யாரையும் அழிக்கமுடியாது!
உன்னிடத்தில் உள்ள தெய்வம்
உன்னை ஒரு நாளும் தள்ளிவிடாது!
உன்னுள் உள்ள தெய்வத்தை நீ
திடமாக நம்பி வாழ்வை ரசி!

அவதூறு சொல்லாதீர்கள்!


ராதேக்ருஷ்ணா

உங்களுக்கு யாரையாவது 
பிடிக்கவில்லைஎன்றால் அவர்களோடு
பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்!
மற்றவரைப் பற்றி ஒரு நாளும்
அவதூறு சொல்லாதீர்கள்!
அது தவறு!

Wednesday, May 4, 2011

முறுக்கு மீசை அழகன்!


ராதேக்ருஷ்ணா

பார்த்தசாரதியின் முறுக்கு மீசைக்கு
முன் எந்த வீரன் தான் நிற்பான்?
பார்த்தசாரதியைப் பார்த்தாலே 
வாழ்க்கையை ஜெயிக்க மனதில்
பலம் வந்துவிடும்...

உன் பாதமே கதி!


ராதேக்ருஷ்ணா

பார்த்தசாரதியே சுவாமி ராமானுஜராக
காந்திமதி அம்மையாருக்கும், அசூரி
கேசவப் பெருமாளுக்கும் பிள்ளையாய்
பிறந்தார்! பார்த்தசாரதி உன்
 பாதமே கதி!

அர்ஜுனனுக்கு சாரதி...


ராதேக்ருஷ்ணா

இப்பொழுது ஸ்ரீ பார்த்தசாரதி 
பெருமாளை தரிசிக்க திருவல்லிக்கேணி
செல்கிறோம்! அர்ஜுனனுக்கு 
சாரதியான க்ருஷ்ணன் நம் 
வாழ்வையும் நடத்துவார்! நம்பு!

விட்டுத் தள்ளு!


ராதேக்ருஷ்ணா

உன்னை க்ருஷ்ணன் நன்றாக
அறிவான்! நீ ஏன் இந்த 
மனிதர்களின் வார்த்தைகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்து உன்
சந்தோஷத்தை இழக்கிறாய்?
விட்டுத் தள்ளு!

உதவுபவர்களை மறக்காதே!


ராதேக்ருஷ்ணா

பல மனிதர்கள் குறை
சொல்ல வருவார்கள்!
சில மனிதரே உனக்கு
உதவ வருவார்கள்! குறை
சொல்பவர்களிடம் மனதை
கொடுக்காதே! உதவுபவர்களை
மறக்காதே!

ஜாக்கிரதை!


ராதேக்ருஷ்ணா

மனிதர்களிடம் உன் சுய
மரியாதையை ஒரு நாளும்
விட்டுக்கொடுக்காதே! 
மனிதர்களிடம் அன்புடன் இரு!
 ஆனால் உன்னை ஏமாற்ற
 இடம் கொடுத்து விடாதே!
ஜாக்கிரதை!

Tuesday, May 3, 2011

வாழ்க்கை வாழவைக்கும்!


ராதேக்ருஷ்ணா

வாழ்வின் ஒவ்வொரு செயலையும்
ரசி! வாழ்வின் ஒவ்வொரு 
நிகழ்வையும் அனுபவி! நீ
குழந்தையாக வாழ்வை 
எதிர்கொண்டால் நிச்சயம்
வாழ்க்கை உன்னை வாழவைக்கும்!

உழைப்பை நம்பு!


ராதேக்ருஷ்ணா

வாழ்வில் அதிருஷ்டத்தை 
நம்பிக்கொண்டிருப்பவர்கள்
ஒரு நாளும் அற்புதத்தைக்
கண்டதில்லை! உழைப்பை 
நம்புபவர்கள் ஒரு நாளும் 
வாழ்வில் தோற்றதில்லை!

முன்னேற முடியும்!


ராதேக்ருஷ்ணா

மூளையை சரியாக 
உபயோகப்படுத்தினால்
நிச்சயம் யாராக இருந்தாலும்
வாழ்வில் முன்னேற முடியும்! 
மூளையை உபயோகிக்க 
பகவானின் நாமத்தை ஜபி!

என்றும் ஆரோக்யமே!


ராதேக்ருஷ்ணா

மனது நல்ல உடம்பையும்
பலகீனப்படுத்தும்! முடியாத
உடலையும் பலசாலியாக்கும்!
உன் மனதை நீ எப்பொழுதும்
சரியாக வைத்திருந்தால் 
என்றும் ஆரோக்யமே!

இன்று களைப்பா?


ராதேக்ருஷ்ணா

உடல் பலகீனமாக இருந்தாலும்,
மனதில் ஆசையும், நம்பிக்கையும் 
இருந்தால் நிச்சயம் களைப்பைத்
தாண்டி நம் வேலைகளை 
செய்யமுடியும்! இன்று களைப்பா?

மனதில்தான் ஆரம்பம்!


ராதேக்ருஷ்ணா

களைப்பு என்பது முதலில்
மனதில்தான் ஆரம்பம்! உடல்
பலமாக இருந்தாலும் மனம்
இன்னும் அதிக நேரம் 
தூங்கினால் சுகம் என்று 
நினைத்தால் உடல் எழாது!

உன்னை சரி செய்...


ராதேக்ருஷ்ணா

உன்னிடம் உள்ள குறைகளை 
கடவுளிடம் சொல்லிவிட்டு உன்னை
சரி செய்துகொண்டு நிம்மதியாய்
இருக்கப்பார்! அடுத்தவரின் 
குறைகள் கண்ணில் பட்டால் 
நீ முன்னேறமுடியாது!

சந்தேகமில்லை!


ராதேக்ருஷ்ணா

எல்லோருக்கும் கடவுள் ஒன்று
போலவேதான் அருள் செய்கிறார்!
நாம் அதை வாங்கிக்கொள்ளும்
முறையில்தான் மாற்றம் வருகிறது!
கடவுள் என்றுமே நல்லவர்தான்!
சந்தேகமில்லை!

கடவுளின் குழந்தைகள்!


ராதேக்ருஷ்ணா

நீயும் நானும் கடவுளின்
குழந்தைகள்! அதனால் நமக்குள் 
யார் பெரியவர் என்கிற 
போட்டியே கிடையாது! நீயும்
நன்றாயிரு! நானும் நன்றாய்
இருப்பேன்! ஆனந்தம்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP