Monday, August 9, 2010

உன் மனதிடம் சொல்...

ராதேக்ருஷ்ணா

உன் மனதிடம் சொல்,
"நான் நன்றாக இருப்பேன்!
க்ருஷ்ணன் என்னை 
சௌக்கியமாக வைப்பான்!
இப்பொழுதும் நான் 
நன்றாகவே இருக்கிறேன்!
எனக்கு கவலை இல்லை!"...
உணர்வாய்!

பூரணமான நம்பிக்கையோடு இரு!

ராதேக்ருஷ்ணா!

மனதில் அதைரியத்திற்கும்
அவநம்பிக்கைக்கும் ஒரு
நாளும் இடமே தராதே!
எப்பொழுதும் எதுவந்தாலும்
பூரணமான நம்பிக்கையோடு 
இரு! வாழ்ந்து காட்டுவாய்!

நீயே உணர்வாய்!

ராதேக்ருஷ்ண

வாயினால் பாடி மனிதனால்
சிந்திக்க எல்லா பாவமும்
போகும்! நம்பிக்கை இல்லையா?
பரீட்சை செய்து பார்!
ஆண்டாள் வாக்கு பொய்யல்ல!
நீயே உணர்வாய்! சத்தியமாக!

ஆண்டாள் சொல் படி பக்தி செய்!

ராதேக்ருஷ்ணா

உலகையே ஆள்பவன் பகவான்
க்ருஷ்ணன்! அவனையே ஆள்பவள்
நம் ஆண்டாள்! நாமும் அவளை
ஆளலாம்! எப்படி தெரியுமா?
அவள் சொன்னது போல் பக்தி
செய்தால்... செய்வாயா?

ஸ்ரீவில்லிபுத்தூரில் 5 கருட சேவை!

ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் 
5 கருட சேவை! வா! 
நாமும் போய் பார்க்கலாம்!
ஆண்டாளின் அவதார பூமியில்
ஆடி பாடி மகிழலாம் வா!
குழந்தையாக வா! 
செல்வோமே!

உறுதி கொள்!

ராதேக்ருஷ்ணா

இன்று சந்தோஷமாகவே
 இருப்பேன் என்று உறுதி 
கொள்! நீ ஏன் அழ 
வேண்டும்? நீ ஆனந்தமாக
 வாழ பிறந்திருக்கிறாய்!
இதை என்றும் மறக்கவே
மறக்காதே!

நன்றாக சிரி!


ராதேக்ருஷ்ணா

உன் கவலைகளை யோசித்து
யோசித்து, உன் மனம் 
வெறுத்துப்போனதுதான் மிச்சம்!
கவலைகளை க்ருஷ்ணன்
திருவடியில்  இறக்கி 
வைத்துவிட்டு நன்றாக சிரி!

இன்று நல்லபடியாக வாழ்!

ராதேக்ருஷ்ணா

எல்லாவற்றையும் மறந்துவிடு!
ஒவ்வொரு நாளும் நீ புதியதாய்
பிறக்கிறாய்! ஆமாம்! தூக்கம்
என்பது கிட்டத்தட்ட மரணமே!
அதனால் இன்று நல்லபடியாக வாழ்!

Friday, August 6, 2010

உன் மனதை கேவலப்படுத்தாதே!

ராதேக்ருஷ்ணா

உன் மனதை நீ சரியாக 
கொண்டுசெல்! அதை வேறு
யாரும் சரி செய்ய முடியாது!
உன் மனதை நீ மதிக்க 
கற்றுக்கொள்! அதை
கேவலப்படுத்தாதே! 
நாமஜபம் செய்!

வெற்றியின் பாதையில் பயணம் செய்!

ராதேக்ருஷ்ணா

உன் மனதின் காயங்களையும்,
வலிகளையும் மூலதனமாக
வைத்துக்கொண்டு, வெற்றியின்
பாதையில் விடாது பயணம்
செய்துகொண்டே இரு! ஒரு
நாள் வெற்றி அடைவாய்!

Thursday, August 5, 2010

நல்லவைகளை மட்டுமே யோசி!

ராதேக்ருஷ்ணா

உன் நினைவுகளே உன் 
வாழ்க்கை! உன் நினைவுகளே
 உன் எதிர்காலம்! உன்
நினைவுகளே உன் ஆனந்தம்!
அதனால் எப்பொழுதும் நீ 
நல்லவைகளை மட்டுமே 
யோசி! நீ வெல்வாய்!

சரியான நினைவுகள்!

ராதேக்ருஷ்ணா

நினைவுகளில் தடுமாற்றம் 
இருந்தால் வாழ்க்கையும்
 தடுமாறும்! நினைவுகள் 
சரியாக இருந்தால் 
வாழ்க்கை மிக நன்றாக
இருக்கும்! இன்றிலிருந்து 
முயற்சி செய்!

உன் நினைவுகளை கவனி!


ராதேக்ருஷ்ணா

நினைவுகளில் அதிக கவனம்
செலுத்து! எப்பொழுதெல்லாம் 
உன் நினைவுகள் தவறாக 
செல்கிறதோ, அப்பொழுதெல்லாம்
உடனே நாம ஜபம் செய்து
அதை மாற்றிவிடு!

Wednesday, August 4, 2010

சுகித்திரு!

ராதேக்ருஷ்ணா

உன்னுடைய நல்லவைகளை
க்ருஷ்ணன் சரியாக 
பார்த்துக்கொள்கிறான்! நீ
பயப்படாதே! நீ குழம்பாதே!
நீ கலங்காதே! நீ நடுங்காதே!
நீ அழாதே! சுகித்திரு!

நல்லவைகளை தள்ளிவிடாதே!

ராதேக்ருஷ்ணா

நீ நினைப்பதெல்லாம் நல்லது
இல்லை! நீ கெடுதல் என்று
நினைப்பதெல்லாம் கெடுதலும்
இல்லை! புரிந்து கொள்ள
முயற்சி செய்! வரும் 
நல்லவைகளை தள்ளிவிடாதே!

நல்லது மட்டுமே...

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நிகழ்ச்சியும் உன் 
நன்மைக்காகவே நடக்கிறது!
நீ ஏற்றுக்கொள்கிறாயோ 
இல்லையோ நிச்சயம் நல்லது 
மட்டுமே உனக்கு நடந்தது!
நடக்கிறது! நடக்கும்!

Monday, August 2, 2010

சத்சங்கம் உன் வாழ்க்கை!

ராதேக்ருஷ்ணா

சத்சங்கத்தை மதிப்பவர்கள்
என்றுமே க்ருஷ்ணனுக்கு
பிரியமானவர்கள்! சத்சங்கத்தை
உதாசீனம் செய்வது 
தற்கொலைக்கு சமம்!
சத்சங்கம் உன் வாழ்க்கை!

சத்சங்கத்தின் பிரயோஜனம்!

ராதேக்ருஷ்ணா

சத்சங்கம் உனக்கு என்றும்
நல்லதே செய்யும்! உன்னால்
சத்சங்கத்திற்கு பிரயோஜனம்
என்று தப்பு கணக்கு போடாதே!
சத்சங்கத்தினால் உனக்கு 
தான் பிரயோஜனம்!

சத்சங்கத்தை கொண்டாடு!

ராதேக்ருஷ்ணா

சத்சங்கம் என்பது ஒரு
குடும்பம்! சத்சங்கத்தில் 
இருப்பது பெரிய பாக்கியம்!
சத்சங்கம் நிச்சயம் 
வாழ்க்கையை உயர்த்தும்! 
சத்சங்கத்தை கொண்டாடு!

கோப குழந்தைகளின் பாக்கியம்!

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனின் தோழர்களான
கோப குழந்தைகள் தான்
உலகில் பாக்கியம் செய்த 
நண்பர்கள்! அவர்கள்
க்ருஷ்ணனை அடிக்கவும்,
அணைக்கவும் உரிமை 
பெற்றவர்கள்..

க்ருஷ்ணன் ஆலோசனை சொல்லவேண்டுமா?

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ண தோழமையில் ஒரு
இனிமையான சுகம் உண்டு!
உத்தவர் க்ருஷ்ணனை 
தோழனாக கொண்டதனால்,
க்ருஷ்ணன் அவரிடம் 
ஆலோசனை கேட்டான்!
உனக்கும் சொல்லவேண்டுமா?

க்ருஷ்ணனை தோழனாக்கு!

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணன் தான் உலகின்
மிக சிறந்த உயிர் தோழன்!
நீ உன் க்ருஷ்ணனை தோழனாக
வைத்துக்கொண்டால்  உனக்கும்
அர்ஜுனன் போல் தேரோட்டுவான்!
க்ருஷ்ணனை தோழனாக்கு!

உன்னோடு க்ருஷ்ணன்; க்ருஷ்ணனோடு நீ!

ராதேக்ருஷ்ணா

உன் மனதில் க்ருஷ்ணன்;
க்ருஷ்ணன் மனதில் நீ!
உன்  வாயில் க்ருஷ்ண 
நாம ஜபம்; க்ருஷ்ணன் 
வாயில் உன் பெயர் !
உன்னோடு க்ருஷ்ணன்;
க்ருஷ்ணனோடு நீ!
சுகம்...

குறைவில்லை! கஷ்டமில்லை!

ராதேக்ருஷ்ணா

யார் மனது க்ருஷ்ணனிடம்
இருக்கிறதோ, அவர்களுக்கு
ஒரு நாளும் ஒரு குறைவில்லை!
க்ருஷ்ணன் மனதில் யார்
இருக்கிறார்களோ அவர்களுக்கு
ஒரு நாளும் கஷ்டமில்லை!

ஆஹா...அற்புதம்!

ராதேக்ருஷ்ணா

கனவுகள் மெய்ப்பட வேண்டுமென்றால்,
உன் நினைவுகள் க்ருஷ்ணனை
சுற்றி வரவேண்டும்! உன் மனது
அவனை சுற்ற, அவன் உன்னையே
சுற்றி சுற்றி வருவான்!
ஆஹா...அற்புதம்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP