Wednesday, March 23, 2011

திருநாவாய் திவ்யதேசம்!


ராதேக்ருஷ்ணா

திருநாவாய் திவ்யதேசத்தில் 
யோகிகள் பூஜித்த முகுந்தனை
ஆனந்தமாக தரிசனம் செய்தோம்!
பாரத புழா கரையில் உள்ளது
இந்த திவ்யதேசம்!

திருவித்துவக்கோடு...


ராதேக்ருஷ்ணா

திருவித்துவக்கோடு பகவானை 
ஆனந்தமாக தரிசனம் செய்தோம்!
எங்கு போய் உய்கேன் என்று ஸ்ரீ
குலசேகர ஆழ்வார் புலம்பின
திவ்ய தேசத்தை அனுபவித்தோம்!

குருவாயூரப்பா! சொல்லப்பா!


ராதேக்ருஷ்ணா

குருவாயூரப்பா! நன்றாக 
தூங்கினாயா? காலையில் 
வயிறு நிறைய சாப்பிட்டாயா?
உனக்கு பிடித்த பக்தர்களை
நிர்மால்ய தரிசனத்தில் 
கண்டாயா? சொல்லப்பா!

Tuesday, March 22, 2011

உத்தரவு போடுங்கள்!


ராதேக்ருஷ்ணா

குலசேகரா! உங்களுக்கு பகவானை
நன்றாகத் தெரியும்! இந்த
ஜீவர்களை எல்லாம் நல வழிப்
படுத்த சொல்லி தயவு செய்து
பகவானுக்கு உத்தரவு போடுங்கள்!

நிர்மலமான ஹ்ருதயம்...


ராதேக்ருஷ்ணா

ராஜாவாக இருந்தும் மண்ணாசை,
பெண்ணாசை இரண்டையும்
அலட்சியமாக உதறித்தள்ளிய
குலசேகரா! உங்களைப்போல்
எனக்கும் நிர்மலமான 
ஹ்ருதயம் தாருங்கள்!  

திருவஞ்சிக்களம்!


ராதேக்ருஷ்ணா

இன்று இப்பொழுது திருவஞ்சிக்களம்
செல்கின்றோம்! ஸ்ரீ குலசேகர ஆழ்வார்
அவதரித்த புண்ணிய ஸ்தலம் இது!
எத்தனையோ நாள் ஏங்கின
ஒரு விஷயம் இது!

Monday, March 21, 2011

திருமூழிக்களத்து அப்பன்!


ராதேக்ருஷ்ணா

லக்ஷ்மணன் பரதனை தவறாக
நினைத்ததற்கு வருந்தி 
திருமூழிக்களத்து அப்பனை 
ஆராதித்து தன் தவற்றுக்கு
 மன்னிப்பு கேட்டு
நிம்மதி அடைந்தான்!

திருமூழிக்களத்து பெருமாள்!


ராதேக்ருஷ்ணா

ஹாரித மஹரிஷிக்கு காட்சி 
கொடுத்து மோக்ஷ ரஹஸ்யத்தை  
நான்கு வர்ணத்தாரும் அடையும்
ரஹஸியத்தை சொன்னவர் இந்த
திருமூழிக்களத்து பெருமாள்!

லக்ஷ்மணன் ஆராதனை செய்த பெருமாள்!


ராதேக்ருஷ்ணா

இப்பொழுதுதான் லக்ஷ்மணன் 
ஆராதனை செய்த திருமூழிக்களம் 
பகவானை தரிசனம் செய்துவிட்டு
வந்தோம்! எத்தனை அற்புதமான
கோயில்! மூர்த்தி மிக அழகு! 

க்ருஷ்ணனிடம் மட்டுமே மயங்கு!


ராதேக்ருஷ்ணா

மனமே நீ மனிதர்களிடம்
மயங்கி ஏன் உன்னை பாடாய்
படுத்திக்கொள்கிறாய்? மனமே
நீ க்ருஷ்ணனிடம் மட்டுமே
மயங்கினால் உனக்கு ஒரு 
நாளும் துக்கம் என்பதில்லை!

தெய்வத்தை நம்புவது நல்லது!


ராதேக்ருஷ்ணா

நீ மனிதர்களை நம்பி
ஏமாந்தால் அதற்கு தெய்வம்
என்ன செய்ய முடியும்? 
தெய்வமா உன்னை மனிதர்களை
நம்பச் சொல்லியது? தெய்வத்தை
நம்புவது நல்லது!

க்ருஷ்ணனை நம்பு!


ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் ஆசை வயப்பட்டவர்கள்!
மனிதர்கள் சந்தப்பவாதிகள்!
அதனால் மனிதர்களை நம்பி உன் 
வாழ்க்கையை வீணடித்துவிடாதே!
க்ருஷ்ணனை நம்பு!

த்ருஷ்டி சுத்தவேண்டும்!


ராதேக்ருஷ்ணா

ஹே ராதா! உன்னையும் 
கண்ணனையும் நிற்க வைத்து
த்ருஷ்டி சுத்தவேண்டும்! நீங்கள்
இருவரும் நன்றாக இருக்கவேண்டும்!
நாங்கள் உங்கள் அடிமைகள் அல்லவா!

வா... உடனே.. வா...

ராதேக்ருஷ்ணா

ஹே க்ருஷ்ணா! என் மீது 
வண்ணப்பொடிகளை தூவு!
நான் அதற்காக 
காத்துக்கொண்டிருக்கிறேன்!
வா... உடனே.. வா...ராதிகா
மாதா! உன்  கண்ணனிடம் 
சீக்கிரம் சொல்!

க்ருஷ்ணா! வரம் தா!


ராதேக்ருஷ்ணா

இன்று ஹோலி பண்டிகை!
 நம்முடைய அஹம்பாவத்தை
அழித்து நாம் வாழ்வில் பக்தி
செய்யவே ஹோலி பண்டிகை!
க்ருஷ்ணா! உன் இஷ்டப்படி
வாழ வரம் தா!

செல்லக்குட்டி!


ராதேக்ருஷ்ணா

இப்பொழுதுதான் நாங்கள் 
த்வாரகாவில் நகர சங்கீர்த்தனம் 
செய்து விட்டு வந்தோம்! 
கோயிலில் த்வாரகாதீசன் 
ரொம்பவே அழகாக இருக்கிறான்! 
அவன் செல்லக்குட்டி!

சௌக்கியமாயிறு !


ராதேக்ருஷ்ணா

ஹே த்வாரகாநாதா! நீ
நன்றாக இருக்க வேண்டும்!
நீ எப்பொழுதும் ஆனந்தமாக
இருக்கவேண்டும்! எங்களைப்
பற்றி எல்லாம் நீ கவலைப்
படாதே! நீ சௌக்கியமாயிறு !

சீக்கிரம் கூப்பிடு!


ராதேக்ருஷ்ணா

த்வாரகாநாதா!  இன்று இரவு
நான் உன் ராஜதானியை விட்டு
கிளம்புகிறேன்! சீக்கிரம் என்னை 
திரும்பவும் உன்னுடைய ராஜதானிக்கு
கூப்பிடு! சரியா?

Thursday, March 17, 2011

ஏனடா வரவழைத்தாய்?


ராதேக்ருஷ்ணா

ஏனடா என்னை த்வாரகைக்கு
வரவழைத்தாய்?என்னை இந்தப்
 பாடுபடுத்தவா? உன் மனம் ஏன்
என்னிடத்தில் லயப்படுவதில்லை?
நான் என்ன குற்றம் செய்தேன்? வா...

என்னோடு வந்துவிடு!


ராதேக்ருஷ்ணா

என் த்வாரகாதீசா! உன்னை
விட்டு நாளை கிளம்புகிறேன்!
நீயும் என்னோடு வந்துவிடு!
என்னை விட்டு நீ எப்படி 
இருப்பாய்? உன்னால் முடியுமா?
என்னாலும் முடியாது....

நான் அடிமை!


ராதேக்ருஷ்ணா

எத்தனை பாமர ஜனங்கள்
த்வாரகாதீசனை ரசிக்க
ஆசையோடு வருகிறார்கள்!
என் த்வாரகானாதனை 
கொண்டாடுபவர்களுக்கு நான்
அடிமை! இது சத்தியம்!

Wednesday, March 16, 2011

த்வாரகாவில் ஹோலி!


ராதேக்ருஷ்ணா

த்வாரகானாதன் இன்று தன் 
வலது கையில் ஹோலி
 தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் 
பீச்சாங்குழலையும், இடுப்பில் 
ஹோலி வண்ணப்பொடியையும்
வைத்திருந்தான்!

வண்ணப்பொடி தூவினான்!


ராதேக்ருஷ்ணா

த்வாரகானாதன் இன்று வெள்ளை
ஆடை உடுத்திக்கொண்டு, தன் பக்த 
ஜனங்களோடு சுகமாக ஹோலி 
விளையாடினான்! அவன் எல்லோர் 
மீதும் வண்ணப்பொடி தூவினானே!

கற்றுக்கொள்ளவேண்டும்!


ராதேக்ருஷ்ணா

பக்தி எப்படி செய்யவேண்டும்
என்பதை த்வாரகா ஜனங்களிடமிருந்து
நாம் கற்றுக்கொள்ளவேண்டும்!
இவர்கள் த்வாரகானாதனை
அனுபவிப்பதே தனி அழகுதான்!

Tuesday, March 15, 2011

உள்ளம் கவர் கள்வன்!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் த்வாரகாதீசன்
வித விதமாய் லீலை செய்கிறான்!
அவனுடைய லீலையில் நான் என்னை
இழந்துகொண்டிருக்கிறேன்! உள்ளம்
கவர் கள்வன் இந்த ராஜன்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP