Saturday, September 8, 2012

க்ருஷ்ணனுக்காக அர்ப்பணிப்போம்!


ராதேக்ருஷ்ணா!

பழைய பாவங்களை கழிப்போம்!
புதிய வாழ்க்கையை தொடங்குவோம்!
இந்த க்ருஷ்ண ஜெயந்தியில் 
நாம் நம் வாழ்வை க்ருஷ்ணனுக்காக 
அர்ப்பணிப்போம்! வென்று கட்டுவோம்!

கொண்டாடி மகிழ்வோம்!


ராதேக்ருஷ்ணா!

ராதே க்ருஷ்ணா சத் சங்கத்தின் 
17வது வருஷ ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தி 
மஹோத்சவத்தில் கட்டாயம் கலந்து 
கொள்ளுங்கள்! வாருங்கள் எல்லோரும் 
கொண்டாடி மகிழ்வோம்!

ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தி மகோத்சவம்!


ராதேக்ருஷ்ணா!

திருமந்திர நகரில் நடக்கும் 
ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தி 
மகோத்சவத்திர்க்கு உங்கள் குடும்பத்தோடு 
வாருங்கள்! க்ருஷ்ணனின் அருளில் 
நனையுங்கள்! வாழ்க்கை மாறும்!

Friday, September 7, 2012

ஆகாயத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன்!


ராதேக்ருஷ்ணா!

எங்களுக்கு தெரிந்த முறையில் 
நாங்கள் பிரார்தித்துவிட்டோம்! இனி 
மழை தருவது உன் கையில்!
உன் கருணையை எதிர்பார்த்து 
ஆகாயத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

மழை தா!


ராதேக்ருஷ்ணா!

விக்ஞானம் என்னவோ சொல்கிறது!
படித்தவர்கள் ஏதேதோ சொல்கிறார்கள்!
நாங்கள் உன்னைத் தவிர ஏதும் 
அறியாத குழந்தைகள்! எங்களுக்கு 
மழை வேண்டும்...தா!

க்ருஷ்ணா.... மழை வேண்டும்!


ராதேக்ருஷ்ணா!

மழை வேண்டும்! க்ருஷ்ணா....
மழை வேண்டும்! நாங்கள் 
உன்னையே நம்புகின்றோம்! தயவு 
செய்து மழை பொழிவாய்!
நாங்கள் உனது திருவடியில் 
சரணாகதி செய்துவிட்டோம்!

Thursday, September 6, 2012

மோக்ஷம் தரும்!


ராதேக்ருஷ்ணா!

நீ செய்யும் ஒவ்வொரு 
நாம ஜபமும் உனக்கும்,
உன் குடும்பத்தாருக்கும்,
உன் வம்சத்திற்கும், என்றும் 
நன்மை செய்யும்! மோக்ஷம் 
தரும்! இந்த உலகில் 
சௌக்கியங்கள் தரும்!

வீண் போவதில்லை!


ராதேக்ருஷ்ணா!

காத்திருப்பவர்கள் வீண் போவதில்லை!
பக்தி செய்பவர்கள் தோற்பதில்லை!
நாம ஜபம் செய்பவர்கள் அழிவதில்லை!
குரு சொல்படி நடப்பவர் நஷ்டமடைவதில்லை!

Tuesday, September 4, 2012

க்ருஷ்ணனை பார்ப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

பக்தி என்பது வாழ்க்கையை அனுபவிப்பதற்கே!
நீ எல்லா விதத்திலும் க்ருஷ்ணன் உன்னிடம்
 திருப்தி அடையுமாறு வாழ்ந்து வா!
நிச்சயம் க்ருஷ்ணனை பார்ப்பாய்!

அஞ்சாதே!


ராதேக்ருஷ்ணா!

பொது வாழ்க்கையில் பல தரப்பட்ட 
மனிதர்களை நாம் சந்திக்கிறோம்!
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்!
நாம் எதற்கும் அஞ்சாமல் நம் 
வாழ்வை வாழவேண்டும்!

சிறந்த தீர்வு!


ராதேக்ருஷ்ணா!

கஷ்டத்திலும், பிரச்சனைகளிலும் யார் 
விடாமல் நாம ஜபம் செய்கிறார்களோ,
அவர்கள் வாழ்வு நிச்சயம் பிரகாசிக்கும்!
நாம ஜபம் மிக சிறந்த ஒரு தீர்வு!

Friday, August 31, 2012

தெளிவான தைரியம் ...


ராதேக்ருஷ்ணா!

பயந்தவன் வாழ்வில் ஜெயித்ததில்லை!
அசட்டு தைரியமும் வாழ்க்கைக்கு 
நல்லதல்ல! தெளிவான தைரியம் 
உன்னை வாழவைக்கும்! க்ருஷ்ணனின் 
திருவடியை பிடி!

அழுதது போதும்!


ராதேக்ருஷ்ணா!

பயந்து பயந்து நீ குழம்பியது 
போதும்! பயந்து பயந்து நீ 
அழுதது போதும்! இனி தைரியம் 
மட்டும் வாழ்வாய் இருக்கட்டும்!
தைரியம் உன்னோடு வாழட்டும்!

பயப்படாதே!


ராதேக்ருஷ்ணா!

பயப்படாதே! உன்னை வெல்ல 
உலகில் யாருமில்லை! உன்னை 
அழிக்க யாருமில்லை! உன்னை 
அவமானப்படுத்த யாருமில்லை!
எல்லாம் உன் மனதின் பயமே!
பயத்தை அழி!

Thursday, August 30, 2012

நிம்மதி பெறுவோம்!


ராதேக்ருஷ்ணா!

மஹாபலி சக்ரவர்த்தி பகவானுக்கு 
எல்லாவற்றையும் தானம் தந்ததால் 
நல்ல கதி அடைந்தான்! நாமும் 
நம்மை இன்று வாமனனுக்கு 
தந்து நிம்மதி பெறுவோம்!

வாமன மூர்த்தியின் திருநக்ஷத்திரம்!


ராதேக்ருஷ்ணா!

வாமன மூர்த்தியின் தந்தை 
ஸ்ரீ கச்யப மகரிஷி! தாயார் 
ஸ்ரீமதி அதிதி தேவி! பகவானின் 
திருநக்ஷத்திரம் திருவோணம்!
வாமனனே கண்ணனாக வந்தான்!

நீங்காத செல்வம் நிறையும்!


ராதேக்ருஷ்ணா!

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் 
பாடினால் நிச்சயம் நீங்காத 
செல்வம் நிறையும்! வாமன 
மூர்த்தியை நினைத்து நாம ஜபம் 
செய்தால் நல்ல மழை பொழியும்!

Wednesday, August 29, 2012

ஏன் கலங்குகிறாய்?


ராதேக்ருஷ்ணா!

உன்னோடு உன் குரு இருக்கும்போது 
நீ ஏன் கலங்குகிறாய்? உன் குரு 
உனக்காக நாம ஜபம் செய்கிறார்!
நீ நம்பிக்கையோடு வாழ்வாய்!
நிச்சயம் வாழ்வில் வெல்வாய்!

குருவிடம் நம்பிக்கை!


ராதேக்ருஷ்ணா!

என் குரு என்னும் பலம் என்னிடம் 
என்றுமுண்டு! அந்த பலத்தைக் கொண்டு 
நான் யமதர்ம ராஜனையும் ஜெயிப்பேன்!
இது ஆணவமல்ல! என் குருவிடம் 
எனக்குள்ள நம்பிக்கை!

குரு என்னும் விளக்கு...


ராதேக்ருஷ்ணா!

குரு என்னும் விளக்கு உன்னிடம் 
இருக்கிறது! அதைக் கொண்டு நீ 
அறியாமை என்னும் இருளை அழித்து 
வாழ்வில் க்ருஷ்ணனை அனுபவிப்பாய்!
உன்னோடு உன் க்ருஷ்ணன் என்றுமுண்டு!

Tuesday, August 28, 2012

மிக அவசியம்!


ராதேக்ருஷ்ணா!

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது 
மிக சுலபம்! அதன் ஆரோக்கியத்தை 
கெடுப்பது தான் கடினம்! ஆரோக்கியம் உன் 
வாழ்க்கைக்கு மிக மிக அவசியம்!

உயர்ந்த சொத்து!


ராதேக்ருஷ்ணா!

உன் உடல் என்னும் சொத்தை 
நீ ஜாக்கிரதையாக பார்த்துக்கொண்டாலே,
பாதிக்கு பாதி செலவு நன்றாக 
குறைந்து விடும்! உன் உடலை 
போலே உயர்ந்த சொத்தில்லை!

ஜாக்கிரதை!


ராதேக்ருஷ்ணா!

சிலர் ஆரம்பத்தில் நன்றாக
பழகுவார்கள்! திடீரென்று தான் 
பழகினவரைப் பற்றியே தவறாக 
பேசுவார்கள்! மிகவும் மோசமான 
குணம் இது! ஜாக்கிரதை!

Sunday, August 26, 2012

நாம ஜபம் செய்...


ராதேக்ருஷ்ணா!

உடல் நம்மை பல சந்தர்ப்பங்களில் 
படாத பாடு படுத்தி விடும்! மனமும் 
அதனோடு சேர்ந்து நம்மை 
கஷ்டப்படுத்தும்! நிறைய நாம 
ஜபம் செய்து வருவாய்!

நன்றியே கிடையாது!


ராதேக்ருஷ்ணா!

நாம் உடலை கொண்டாடுகிறோம்!
ஆனால் அதற்கு நன்றியே கிடையாது!
ஏனெனில் அது சிந்திப்பதில்லை! அது 
நம்மை வியாதியோடு சேர்ந்து 
கொண்டு நம்மை படுத்தும்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP