Wednesday, June 13, 2012

நீ சுகமாய் இருப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

பத்மநாபா...நீ நன்றாய் இரு!
நிம்மதியாய் தூங்கு! வேளா 
வேளைக்கு சமத்தாக சாப்பிடு!
உன் சொத்தை ஆதிசேஷன் 
பார்த்துக்கொள்வார்! நீ 
சுகமாய் இருப்பாய்!

என் பத்மநாபன் உண்டு!


ராதேக்ருஷ்ணா!

ஆகாயத்தில் நான் பறந்தாலும் என் 
பத்மநாபன் என்னோடு உண்டு! பூமியில் 
நான் நடந்தாலும் என் பத்மநாபன் 
என்னோடு உண்டு! கடலில் நான் 
மூழ்கினாலும் அவன் உண்டு!

Saturday, June 9, 2012

தாமரை மாலையில் நரசிம்மர்...


ராதேக்ருஷ்ணா!

இன்றும் ஸ்ரீ பத்மநாபரின் கோயிலில்,
நரசிம்மரின் கோபத்தை தணிக்க 
அவர் சந்நிதியின் முன் ராமாயணம் 
வாசிக்கிறார்கள்! இன்று தாமரை 
மாலையில் நரசிம்மர் ஜோர்!

வீர கர்ஜனை!


ராதேக்ருஷ்ணா!

பல சமயத்தில் பத்மநாப சுவாமி 
கோயிலில் ராத்திரியில் சிங்கத்தின் 
கர்ஜனையை காவல் காரர்கள் 
கேட்டிருக்கிறார்கள்! நரசிம்மரின் 
வீர கர்ஜனை அது!

சக்தி வாய்ந்த நரசிம்ஹர்!


ராதேக்ருஷ்ணா!

திருவனந்தபுரம் கோயிலில் உள்ள 
நரசிம்ஹ மூர்த்தி மிகவும் சக்தி 
வாய்ந்தவர்! மகாராஜா சுவாதி 
திருநாளுக்கு தீர்த்தத்தில் தந்த 
விஷத்தை மாற்றினார்!

Thursday, May 31, 2012

க்ருஷ்ண ப்ரசாதம்!

ராதேக்ருஷ்ணா!

ஒவ்வொரு நாளும் க்ருஷ்ண ப்ரசாதம்!
ஒவ்வொரு ப்ரசாதமும் வித விதமாக 
இருக்கிறது! ஆனால் எல்லா ப்ரசாதமும் 
உனக்கு நல்லதையே செய்கிறது....அனுபவி!

Friday, May 18, 2012

கருணைக் கடல் அன்னை!


ராதேக்ருஷ்ணா!

அலர்மேல் மங்கை தாயாரைப் போல் 
சுலபமாக தரிசனம் தர இவ்வுலகில் 
வேறு யார் தான் உண்டு? தன்
 குழந்தைகளின் மேல் தாயாரின் 
கருணை சொல்லவே முடியாது!

திருமலைக்கு சொந்தக்காரர்!


ராதேக்ருஷ்ணா!

திருமலைக்கு சொந்தக்காரரான வராஹரின் 
அற்புத நிதானமும், விசேஷ மகிமையும் 
என்னை மோஹிக்க செய்கிறது! எத்தனை 
அமைதியான திருமுக மண்டலம்...

விசேஷ அனுபவம்!

ராதேக்ருஷ்ணா!

திருமலையில் ஸ்ரீநிவாசரை தரிசிப்பதே 
ஒரு விசேஷ அனுபவம்! அவர் 
எப்போது தரிசனம் தருவார் 
என்பது அவருக்கு மட்டுமே 
தெரிந்த ரஹசியம்...சுகம்!

Monday, April 30, 2012

நிம்மதி...

ராதேக்ருஷ்ணா!

அடுத்தவரின் சொத்து நமக்கு
 ஒரு நாளும் வேண்டவே
வேண்டாம்! நமக்கு கிடைப்பதைக் கொண்டு 
நாம் வாழ்ந்தால்
மட்டுமே நாம் இங்கே
நிம்மதியாக இருக்க முடியும்!

Thursday, April 26, 2012

ஸ்ரீரங்கநாயகி...


ராதேக்ருஷ்ணா!

ஸ்ரீரங்கநாயகி...உன்னை நம்பியே 
அடியேன் இந்த ஏமாற்று 
மனிதருக்கு நடுவில் காலத்தை 
கழிக்கின்றேன்! எல்லோரும் நலமாய்
இருக்க உன் திருவடியில் விழுகின்றேன்!

ராஜாதி ராஜன்!


ராதேக்ருஷ்ணா!

ஸ்ரீரங்கநாதா...நிஜமாகவே நீர் 
ராஜாதி ராஜன்தான்! உம்முடைய 
திருவடி நிழலில் எனக்கு ஒரு இடம் 
தா! உனது கருணை மட்டுமே 
எனக்கு சமாதானம்!

ராமானுஜா...


ராதேக்ருஷ்ணா!


ராமானுஜா...நீர் மிகவும் பெரியவர்!
அதனால் தான் இன்று உமது 
தானான திருமேனி தரிசனத்தை 
அடியேனுக்கு ஸ்ரீரங்கத்தில் 
அற்புதமாக தந்தீர்...

Thursday, April 19, 2012

நீயே காப்பாற்று!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணா...இந்த வாழ்வில் 
எல்லோரும் நன்றாய் இருக்க 
ஓடிக்கொண்டிருக்கிறேன்! மனைவி 
குழந்தை குடும்பம் சத்சங்கம் 
சிஷ்யர்கள் எல்லோரையும் 
நீயே காப்பாற்று!

உழன்றுகொண்டிருக்கிறேன்!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணா நான் இந்த உலகில் 
வந்த காரணம் உன்னை 
அனுபவிக்கவே! ஆனால் நான் 
உன்னை அனுபவிக்காமல் சம்சார 
சாகரத்தில் உழன்றுகொண்டிருக்கிறேன்! 
காப்பாய்...

க்ருஷ்ணா...காப்பாற்று!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணா...நான் உன்னை மட்டுமே 
நம்பி இருக்கிறேன்! இந்த சந்தேக 
மனிதர்களுக்கு நடுவில் நான் படும் 
பாடு உனக்கு நன்றாய் தெரியும்!
என்னை உடனே காப்பாற்று!

Friday, April 6, 2012


ராதேக்ருஷ்ணா!

இன்று இரவு 8 மணிக்கு 
ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி 
வேட்டையாட வருகிறார்! பக்த 
ஜனங்கள் எல்லோரும் கட்டாயம் 
வரவேண்டும்! இது 
கோபாலவள்ளியின் உத்தரவு!

ஸ்ரீ பத்மநாபரின் வேட்டை!


ராதேக்ருஷ்ணா!

பத்மநாபனுடைய திருவடி நிழலில் 
சௌக்கியமாக இருக்கிறேன்! 
எனக்கு என்ன குறை? வாழ்வில் 
பத்மநாபன் மட்டுமே எனக்கு கதி! 
இன்று ஸ்ரீ பத்மநாபரின் வேட்டை!

Friday, March 30, 2012

அவமானப்படுவர்!


ராதேக்ருஷ்ணா

அடுத்தவரை அவமானப்படுத்துபவர் ஒரு நாள் 
நிச்சயம் இந்த உலகத்தில் பலரிடம் இருந்து 
அவமானப்படுவர்! என்ன கொடுக்கிறோமோ 
அதுவே நமக்கு கிடைக்கும்!

தர்மம் வெல்லும்!


ராதேக்ருஷ்ணா

சிலருக்கு அடுத்தவரை கஷ்டப்படுத்துவதில் 
அலாதி இன்பம்! ஆனால் அது 
அவர்களையே படுத்தும் என்பது 
பின்னாளில் நிச்சயமாகப் புரியும்!
தர்மம் வெல்லும்!


ராக்ஷசரின் செய்கைகள்!


ராதேக்ருஷ்ணா

அடுத்தவரை மனிதராக மதிக்காதவர்கள் 
நிச்சயம் வாழ்வில் படாத பாடு படுவர்!
மனிதரை இம்சிப்பதும் அவமதிப்பதும் 
ராக்ஷசரின் செய்கைகள்!

Friday, March 23, 2012

கோடி நமஸ்காரம்!

ராதேக்ருஷ்ணா!

த்யாகராஜரின் தெலுங்கு
கீர்த்தனைகள் கேட்டாலே
மனது உருகும்! ராமனை
தனது மொழியில் எத்தனை
அழகாக அனுபவித்து இருக்கிறார்!
கோடி நமஸ்காரம்!

ராதேக்ருஷ்ணா!

இன்று உகாதி! தெலுங்கு
மற்றும் கன்னடம் பேசும்
மக்களுக்கு புத்தாண்டு! பல
பக்தர்கள் இந்த 2 மொழிகளிலும்
நிறைய பக்திப்பாடல்கள்
பாடி இருக்கிறார்கள்...

அடுத்தவரை தாழ்வாக நினைக்காதே!

ராதேக்ருஷ்ணா!

எப்பொழுதும் அடுத்தவரை தாழ்வாக நினைப்பவர்கள் நிச்சயம் தான் இறுதி காலத்தில் அடுத்தவரின்
தயவோடு மட்டுமே வாழ
வேண்டிய நிலை வரும்!

சுயநலத்தின் வெளிப்பாடு!

ராதேக்ருஷ்ணா!

தன்னை மட்டுமே எல்லோரும்
கொண்டாடவேண்டும் என்று
நினைப்பவர்கள் எப்பொழுதும்
அடுத்தவருக்கு துக்கத்தை
மட்டுமே தருகிறார்கள்!
சுயநலத்தின் வெளிப்பாடு!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP