Tuesday, March 8, 2011

ஆனந்தம் பொங்கட்டும்!


ராதேக்ருஷ்ணா

அஹம்பாவம் நாசமாகட்டும்! 
சுயநலம் நாசமாகட்டும்! 
பொறாமை நாசமாகட்டும்!
வெறுப்பு நாசமாகட்டும்! 
அன்பு மலரட்டும்!
 பக்தி வளரட்டும்!
ஆனந்தம் பொங்கட்டும்!

இதையே நினைத்துக்கொண்டிரு!


ராதேக்ருஷ்ணா

"நான் வாழ்வில் தோற்கமாட்டேன்!
நிச்சயம் பகவானின் அனுக்ரஹத்தால் 
வெல்வேன்! ஒரு நாளும் என் வாழ்க்கை
வீண்போகாது!" இதையே எப்பொழுதும்
நினைத்துக்கொண்டிரு!

இப்படியே சொல்லிக்கொண்டிரு!


ராதேக்ருஷ்ணா

"நான் ஜெயிப்பேன்! என் கண்ணன்
என் கூட இருக்கின்றான்! நிச்சயம்
நான் நன்றாக இருப்பேன்! நான்
எல்லா கஷ்டங்களையும் தாண்டி
 வாழ்வேன்!" இப்படியே
சொல்லிக்கொண்டிரு!

அமைதியாய் வாழவேண்டும்!


ராதேக்ருஷ்ணா

இயற்கையின் மடியில் அமைதியாய் 
வாழவேண்டும்! நம்மை நாம்
சுத்திகரித்துக்கொண்டால் நிச்சயம்
வாழ்க்கை சுகமாகவே இருக்கும்!
நாம் மாறினால் எல்லாம் மாறும்!

Friday, March 4, 2011

சுகமான நாள்!


ராதேக்ருஷ்ணா

இந்த நாள் நிச்சயம் வாழ்வில்
மிக சுகமான நாள்! நீண்ட
நாள் ஆசை! த்வாரகாவிற்கு 
கிளம்பிவிட்டோம்! கண்ணன்
 அழைத்து செல்கின்றான்!
கண்ணா கோடி நன்றி!

கண்ணின் ராஜ தர்பார்!


ராதேக்ருஷ்ணா

குசேலருக்கு க்ருஷ்ணன் பூஜை
பண்ணின த்வாரகாவிற்கு செல்கிறேன்!
நம்முடைய கண்ணின் ராஜ தர்பாருக்கு
செல்கிறோம்! க்ருஷ்ணா உன்னை 
நம்பி வருகிறோம்! சுகம்! 

த்வாரகாவிற்கு செல்கிறோம்!


ராதேக்ருஷ்ணா

இப்பொழுது நாங்கள் 
திருவனந்தபுரத்திலிருந்து
த்வாரகாவிற்கு செல்கிறோம்!
ஸ்ரீ அனந்த பத்மநாபரின் பிறந்த
ஊரிற்கு செல்கிறோம்! 
நீங்களும் வாருங்கள்... 

குழப்பிக்கொள்ளாதே!


ராதேக்ருஷ்ணா

யார் எதை சொன்னாலும் அதை
அப்படியே ஏற்றுக்கொண்டு உன்னை
நீ குழப்பிக்கொள்ளாதே! யார்
எதை சொன்னாலும் முதலில்
நன்றாக யோசித்து முடிவு 
எடு! தெளிவு வரும்!

ஜெயித்து வா!


ராதேக்ருஷ்ணா

குழப்பங்களை ஆரம்பத்திலேயே நீ
களையாவிட்டால் நிச்சயம் உன்னால் 
நிம்மதியாக வாழமுடியாது!
உன்னால் குழப்பங்களை ஜெயிக்க
முடியும்! ஜெயித்து வா!

சரி செய்து கொள்!


ராதேக்ருஷ்ணா

உன் மனதில் குழப்பங்கள்
வந்தால் அதை உடனேயே 
கவனித்து சரி செய்து கொள்!
இல்லாவிடில் குழப்பங்கள் உன்னை
வாழவிடாமல் படுத்திவிடும்!
ஜாக்கிரதை!

Wednesday, March 2, 2011

நீ எப்படி?


ராதேக்ருஷ்ணா

முயற்சி செய்யாத ஒருவர்,
திருடன், கொலைகாரரை
விட மோசமானவர்கள்! முயற்சி
செய்யாதவர் இந்த பூமியை
அழிக்கும் தீவிரவாதிகள்!
நீ எப்படி?

முயற்சி செய்...


ராதேக்ருஷ்ணா

முயல்வது உன் கடமை!
அந்தக் கடமையை நீ
செய்தால் மட்டுமே உன்னால்
உன் வாழ்வில் வெல்லமுடியும்!
முயற்சி இல்லாதவரை அவர்
வாழ்க்கையும் மதிப்பதில்லை!

முயல்வாய்!


ராதேக்ருஷ்ணா

முயற்சி இருந்தால் யார்
வேண்டுமானாலும் வாழ்வில்
பெரிய இடத்தை அடைய முடியும்! 
முயற்சி உள்ளவர்களுக்கே
கடவுளின் ஆசீர்வாதமும்
கிடைக்கிறது! முயல்வாய்!

க்ருஷ்ணன் மதிக்கிறான்!


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கையை க்ருஷ்ணன்
மதிக்கிறான்! அதனால் நீ
வாழ்ந்துதான் ஆகவேண்டும்!
உன் வாழ்க்கையை நீ வாழ
யாருடைய அனுமதியும் வேண்டாம்!
தைரியமாக வாழ்!

உன் வாழ்க்கையின் அர்த்தம்!


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கைக்கு என்று 
ஒரு அர்த்தம் உண்டு! அது
மற்றவருக்கு புரியாது! ஆனால் நீ 
அதை புரிந்துகொள்ளவேண்டும்!
உன் வாழ்க்கை சுவை மிகுந்தது!
அதிசியமானது!

வாழ்!


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்வைக் கண்டு நீயே
பயந்தால் என்ன செய்ய
முடியும்? உன் வாழ்வை
பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள
உடனே முயற்சி செய்!
உன் வாழ்வு மிகச்
சிறந்தது! வாழ்!

Tuesday, March 1, 2011

திடமான மனது!


ராதேக்ருஷ்ணா

மனதினால் நாம் மிகப்பெரிய 
காரியங்களை சாதிக்க முடியும்!
ஆனால் அதற்கு மனது என்றுமே 
திடமாக இருக்க வேண்டும்!
மனதே நீ தைரியமாக இரு!

முயற்சி செய்...


ராதேக்ருஷ்ணா

மனிதருக்கு எப்பொழுதும் 
தெய்வத்தின் அணுக்ரஹம் 
பூரணமாக உண்டு! மனிதர்கள்
முயற்சி செய்தால் தான் அதை
பூரணமாக அனுபவிக்க முடியும்!
முயற்சி...

சக்தியை சேமி!


ராதேக்ருஷ்ணா

மனிதருக்கு அபரிமிதமான சக்தி
உண்டு! மனதின் சஞ்சலங்களால் 
தான் நம்முடைய சக்தி முழுவதும்
விரையமாகிறது! சக்தியை சேமி!
உபயோகப்படுத்து!

கதி இல்லை!


ராதேக்ருஷ்ணா

நான் ஒன்றும் பெரிய பக்தன்
இல்லை! நான் ஒன்றும் பெரிய
ஞானி இல்லை! நான் நல்லவன்
இல்லை! ஹே வரதா...உன்னை
தவிர எனக்கு யாரும் கதி 
இல்லை! காப்பாற்று!

வரதராஜனே துணை!


ராதேக்ருஷ்ணா

வாழ்வே மாயம்! அதில்
வரதராஜனே நமக்கு துணை!
வரதராஜனை நம்பினவர்கள்
இன்று வரை வாழ்வில் 
தோற்றதில்லை! ஹே வரதராஜா!
எங்களை காப்பாற்று!

காப்பாற்று வரதா!


ராதேக்ருஷ்ணா

இந்த நாள் வரம் பெரும் 
நாள்! நாங்கள் காஞ்சிபுரம்
ஸ்ரீ வரதராஜ பெருமாளை 
தரிசிக்கப்போகிறோம்! எங்களை
சம்சாரக் கடலிலிருந்து 
காப்பாற்று வரதா!

நிம்மதி உண்டு!


ராதேக்ருஷ்ணா

மனமிருந்தால் மார்கம் உண்டு!
தைரியமிருந்தால் சக்தி உண்டு!
நம்பிக்கை இருந்தால் வெற்றி 
உண்டு! பக்தி இருந்தால் சுகம்
உண்டு! நாம ஜபம் இருந்தால்
நிம்மதி உண்டு!

வழி நடத்து!


ராதேக்ருஷ்ணா

மனித மனது இது வரை
நினைத்ததை நடத்தி
காட்டியிருக்கிறது! அதனால்
நீ சரியாக நினைத்தால்
எல்லாம் சரியாக இருக்கும்!
மனதை வழி நடத்து!

வாழ்வை நேசி!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையை நீ உயர்ந்த 
எண்ணத்தோடு அணுகினால்,
அது உனக்கு அமுத சுரபியாக
எல்லா நலன்களையும் நிச்சயமாகத்
தரும்! வாழ்வை நேசி! 
ரசி! அனுபவி!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP