Thursday, August 30, 2012

நிம்மதி பெறுவோம்!


ராதேக்ருஷ்ணா!

மஹாபலி சக்ரவர்த்தி பகவானுக்கு 
எல்லாவற்றையும் தானம் தந்ததால் 
நல்ல கதி அடைந்தான்! நாமும் 
நம்மை இன்று வாமனனுக்கு 
தந்து நிம்மதி பெறுவோம்!

வாமன மூர்த்தியின் திருநக்ஷத்திரம்!


ராதேக்ருஷ்ணா!

வாமன மூர்த்தியின் தந்தை 
ஸ்ரீ கச்யப மகரிஷி! தாயார் 
ஸ்ரீமதி அதிதி தேவி! பகவானின் 
திருநக்ஷத்திரம் திருவோணம்!
வாமனனே கண்ணனாக வந்தான்!

நீங்காத செல்வம் நிறையும்!


ராதேக்ருஷ்ணா!

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் 
பாடினால் நிச்சயம் நீங்காத 
செல்வம் நிறையும்! வாமன 
மூர்த்தியை நினைத்து நாம ஜபம் 
செய்தால் நல்ல மழை பொழியும்!

Wednesday, August 29, 2012

ஏன் கலங்குகிறாய்?


ராதேக்ருஷ்ணா!

உன்னோடு உன் குரு இருக்கும்போது 
நீ ஏன் கலங்குகிறாய்? உன் குரு 
உனக்காக நாம ஜபம் செய்கிறார்!
நீ நம்பிக்கையோடு வாழ்வாய்!
நிச்சயம் வாழ்வில் வெல்வாய்!

குருவிடம் நம்பிக்கை!


ராதேக்ருஷ்ணா!

என் குரு என்னும் பலம் என்னிடம் 
என்றுமுண்டு! அந்த பலத்தைக் கொண்டு 
நான் யமதர்ம ராஜனையும் ஜெயிப்பேன்!
இது ஆணவமல்ல! என் குருவிடம் 
எனக்குள்ள நம்பிக்கை!

குரு என்னும் விளக்கு...


ராதேக்ருஷ்ணா!

குரு என்னும் விளக்கு உன்னிடம் 
இருக்கிறது! அதைக் கொண்டு நீ 
அறியாமை என்னும் இருளை அழித்து 
வாழ்வில் க்ருஷ்ணனை அனுபவிப்பாய்!
உன்னோடு உன் க்ருஷ்ணன் என்றுமுண்டு!

Tuesday, August 28, 2012

மிக அவசியம்!


ராதேக்ருஷ்ணா!

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது 
மிக சுலபம்! அதன் ஆரோக்கியத்தை 
கெடுப்பது தான் கடினம்! ஆரோக்கியம் உன் 
வாழ்க்கைக்கு மிக மிக அவசியம்!

உயர்ந்த சொத்து!


ராதேக்ருஷ்ணா!

உன் உடல் என்னும் சொத்தை 
நீ ஜாக்கிரதையாக பார்த்துக்கொண்டாலே,
பாதிக்கு பாதி செலவு நன்றாக 
குறைந்து விடும்! உன் உடலை 
போலே உயர்ந்த சொத்தில்லை!

ஜாக்கிரதை!


ராதேக்ருஷ்ணா!

சிலர் ஆரம்பத்தில் நன்றாக
பழகுவார்கள்! திடீரென்று தான் 
பழகினவரைப் பற்றியே தவறாக 
பேசுவார்கள்! மிகவும் மோசமான 
குணம் இது! ஜாக்கிரதை!

Sunday, August 26, 2012

நாம ஜபம் செய்...


ராதேக்ருஷ்ணா!

உடல் நம்மை பல சந்தர்ப்பங்களில் 
படாத பாடு படுத்தி விடும்! மனமும் 
அதனோடு சேர்ந்து நம்மை 
கஷ்டப்படுத்தும்! நிறைய நாம 
ஜபம் செய்து வருவாய்!

நன்றியே கிடையாது!


ராதேக்ருஷ்ணா!

நாம் உடலை கொண்டாடுகிறோம்!
ஆனால் அதற்கு நன்றியே கிடையாது!
ஏனெனில் அது சிந்திப்பதில்லை! அது 
நம்மை வியாதியோடு சேர்ந்து 
கொண்டு நம்மை படுத்தும்!

Saturday, August 25, 2012

நிதானம்!


ராதேக்ருஷ்ணா!

மனதை ஒரு நிதானத்தில் 
வைத்தால் நாம் உலகையே 
வசப்படுத்தலாம்! நாம் இந்த 
உலகிற்கு அடிமைபட்டவர் 
அல்ல! அதனால் இந்த 
உலகை வெல்ல முடியும்!

க்ருஷ்ண நாமம்!


ராதேக்ருஷ்ணா!

மனதில் துன்பம் வரும்போதெல்லாம் 
உடனே வேகமாக க்ருஷ்ண நாமத்தை 
ஜபிப்பாய்! அவனைத் தவிர நம் துன்பத்தை 
வேறு யார் நம் துன்பத்தை களைவர்?

சாந்தம்...


ராதேக்ருஷ்ணா!

மனதை எப்போதும் சாந்தமாக 
வைத்துக்கொள்! உன் சமாதானம் 
உன்னிடமே உள்ளது! உன் நிம்மதி 
உனக்குள்ளே தான் இருக்கிறது!
உன்னை க்ருஷ்ணனிடம் தந்துவிடுவாய்!

Friday, August 24, 2012

வெறுப்படையாதே!


ராதேக்ருஷ்ணா!

மனிதர்களைக் கண்டு நீ 
வெறுப்படைந்தால் நிச்சயம் 
உனக்குத்தான் கவலை! யாரும் 
நீ சொல்வதை கேட்கப்போவதில்லை!
அவரவர் இஷ்டமே அவரவருக்கு முக்கியம்!

அப்படியே ஏற்றுக்கொள்...


ராதேக்ருஷ்ணா!

யாரிடமும் நாம் வெறுப்பைக்
காட்டக்கூடாது! மனிதர்கள் 
ஒவ்வொருவரும் ஒரு விதம்!
யார் எந்த சமயத்தில் எப்படி 
இருக்கிறார்களோ நீ 
அப்படியே ஏற்றுக்கொள்...

சௌக்கியமாய் சேவித்தோம்!


ராதேக்ருஷ்ணா!

நேற்று மாலை திருநீர்மலை 
நீர் வண்ண பெருமாளை 
சௌக்கியமாய் சேவித்தோம்! அவர் 
எங்களை நினைக்கும்போதெல்லாம் 
எங்களை உடனே அழைக்கிறார்!
என்னே கருணை!

Wednesday, August 22, 2012

உய்ய வந்த பெருமாள்!


ராதேக்ருஷ்ணா!

உய்ய வந்த பெருமாள் எங்களுக்கு 
விசேஷமாய் காட்சி தந்தார்!
எங்களை ஏகாந்தமாக தரிசிக்க 
வைத்தார்! எங்களை உய்விக்க 
வந்த பெருமாள் இவர்தான்...

Tuesday, August 21, 2012

சொல்வாய் அப்பனே!!


ராதேக்ருஷ்ணா!
குருவாயூரப்பா...நான் இந்த குருவாயூரில் 
உன்னுடைய தாசனாக, குழந்தையாக 
அலைந்து கொண்டு பாகவதம் வாசிக்கும் 
நாள் என்று வரும்? சொல்வாய் அப்பனே!!

குருவாயூரப்பா...அருள் செய்வாய்!


ராதேக்ருஷ்ணா!

குருவாயூரப்பா...உன்னுடைய பூந்தானம் 
போல் அடியேன் பாகவதம் வாசிக்க 
வேண்டும்! உனது நாராயண பட்டத்ரி 
போல் நாராயணீயம் ஜபிக்க 
வேண்டும்! அருள் செய்வாய்!

பலருக்கும் குழந்தை!


ராதேக்ருஷ்ணா!

குருவாயூரப்பனை பார்த்துவிட்டேன்! 
அவனை காத்திருந்து தரிசித்தோம்! 
எத்தனை ஜனங்கள் அவனிடம் 
பக்தியோடு இருக்கிறார்கள்! இவன்
 பலருக்கும் குழந்தை தான்!

Monday, August 20, 2012

குருவாயூரப்பா...


ராதேக்ருஷ்ணா!

குருவாயூரப்பா...உனது திருவடியை 
கதி என்று நம்பி வந்திருக்கிறோம்!
எனக்கு ஒன்றுமே தெரியாது!
உன்னை அனுபவிக்க எங்களுக்கு 
நல்ல பக்தியை தாடா...

விசேஷ கிருபை...


ராதேக்ருஷ்ணா!

குருவாயூரப்பனை தொழ நாங்கள் 
காத்திருக்கிறோம்! அவன் தன்னுடைய 
விசேஷ கிருபையால் மட்டுமே நாங்கள் 
அவனை தரிசிக்க வந்திருக்கிறோம்!
இது சத்தியம்!

உத்தமமான அனுக்ரஹம்!


ராதேக்ருஷ்ணா!

குருவாயூருக்கு வந்து விட்டேன்! 
குருவாயூரப்பன் எங்களை அவனுடைய 
ஊருக்கு அழைத்துவிட்டான்! எல்லாம் 
அவனுடைய உத்தமமான 
அனுக்ஹத்தினால் மட்டுமே...

Sunday, August 19, 2012

எத்தனை அதிசயங்கள்!


ராதேக்ருஷ்ணா!

ஒரே பூமியில் ஒரு பக்கம் 
குளிரான மலை பிரதேசம்!
இன்னொரு புறம் சுட்டெரிக்கும் 
பாலைவனம்! இறைவனின் படைப்பில் 
எத்தனை எத்தனை அதிசயங்கள்!
வெகு ஜோர்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP