Sunday, August 19, 2012

மலை அருவி!


ராதேக்ருஷ்ணா!

மலையிலிருந்து விழும் அருவி 
சுத்தமான மூலிகை தண்ணீர்!
நிஜமாகவே இயற்க்கை தரும் 
எல்லாமே மிக உயர்ந்தது தான்!
இயற்கை அன்னையே நீ 
என்றும் வாழ்க!

Saturday, August 18, 2012

மழை...


ராதேக்ருஷ்ணா!

வான் தரும் மழைக்கு ஈடு 
இந்த உலகில் வேறு ஒன்றுமில்லை! 
சுத்தமான நீர் என்பது மேகத்தில் 
உள்ள நீரே! க்ருஷ்ணனின் ஆசை
 நம் மீது துளித் துளியாய்!

வினோதம்!


ராதேக்ருஷ்ணா!

காடுப்பூக்களுக்கு மணமில்லை! ஆனால் 
அழகுக்கு குறைவில்லை! இது போலே
 தான் மனிதர்களில் சிலர்! நல்ல 
அழகில்லை! ஆனால் அற்புதமான 
குணம் உண்டு! வினோதம்!

சற்று கேட்போம்!


ராதேக்ருஷ்ணா!

மலையும், அருவியும், மழையும், காடும்,
சில் வண்டுகளின் சப்தமும் நமக்கு 
க்ருஷ்ணனின் எல்லையில்லா கருணையை 
நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கின்றன!
 சற்று கேட்போம்!

Friday, August 17, 2012

நிம்மதி தந்தாள்!


ராதேக்ருஷ்ணா!

கார் மேகம் போல் கருணை 
மழை பொழியும் காள மேகப் 
பெருமாளை கண்ணாரக் கண்டோம்!
என் மனதை மோகனவல்லி தயார் 
அமைதியாக்கி நல்ல நிம்மதி தந்தாள்!

மார்க்க பந்து!!


ராதேக்ருஷ்ணா!

இன்று வாழ்க்கைக்கும், மோக்ஷத்திர்க்கும் 
வழி துணையாய் வரும் மார்க்க பந்து 
பெருமாளை திருமோகூர் திவ்ய தேசத்தில் 
அருமையாய் சேவித்தோம்! எத்தனை ஜோர்!

Thursday, August 16, 2012

வெட்கம்!


ராதேக்ருஷ்ணா!

இந்த தேசம் நல்லது தான்!
நாம் தான் சரியில்லை! நாம் 
இந்த தேசத்தால் பயன் 
பெறுகிறோம்! இந்த தேசம் 
தான் நம்மால் ஒரு பயனும் 
அடையவில்லை...வெட்கம்!

குப்பை போடாதே!


ராதேக்ருஷ்ணா!

நிஜமாகவே நீ இந்த பாரத 
தேசத்தை மதிக்கிறாய் என்றால்,
இனியும் கண்ட இடங்களில் குப்பை 
போடாதே! இந்த தேசத்தை ஒரு
 நாளும் கேவலமாய் பேசாதே!

சுதந்திர தினம்!


ராதேக்ருஷ்ணா!

இன்று சுதந்திர தினம்! நிஜமாகவே 
நீ நமது சுதந்திர நாளை கொண்டாடினாயா?
அனுபவித்தாயா? நீ என்ன செய்துவிட்டாய் 
இந்த பாரத பூமிக்கு? யோசி!

Tuesday, August 14, 2012

விட்டலனின் வாசனை!


ராதேக்ருஷ்ணா!

விட்டலனின் மீது என்ன 
அற்புதமான வாசனை! அவனை 
தொட்டவுடன் என் கைகளில் 
எத்தனை மணம்...இன்னும் 
என் மனத்திலும், மூக்கிலும் 
ஜோராக வாசனை வருகிறது!

என்று தொடுவேன்?


ராதேக்ருஷ்ணா!

விட்டலா...திரும்பவும் நான் 
எப்பொழுது உன்னைக் காண்பேன்?
என்று இந்த கையால் உன்னை 
தொடுவேன்? என்று என் வாயார 
உன் நாமத்தை சொல்லி 
பண்டரிபுரத்தில் ஆடுவேன்?

அருமையான தரிசனம்!


ராதேக்ருஷ்ணா!

விட்டலனிட்ம் மனமார பிரார்த்தனை 
செய்ததற்கு பகவான் அருமையான 
தரிசனம் தந்தான்! அவனுடைய எல்லையில்லாத 
கருணையை அனுபவித்தேன்! விட்டலா!

Monday, August 13, 2012

பிரார்த்தனை செய்யுங்கள்!


ராதேக்ருஷ்ணா!

சந்த்ரபாகாவில் துளி கூட ஜலமில்லை!
மனது கனத்தது! எல்லோரும் நன்றாக 
பிரார்த்தனை செய்யுங்கள்! எல்லோரும் 
வாழ உலகினில் வேண்டிய மழை பெய்யட்டும்!

என்ன செய்யட்டும் நான்?


ராதேக்ருஷ்ணா!

ஹே விட்டலா! உன்னை தொட்டவுடன் 
எத்தனை வாசனை எங்கள் கைகளில்!
அம்மம்மா!!!!ஐயோ...உன் திருமேனியின் 
மணம் என்னை மயக்குகிறதே! என்ன 
செய்யட்டும் நான் இங்கே?

கருணைக்கு அளவுண்டோ?


ராதேக்ருஷ்ணா!

நேற்று எங்களுக்கு பாண்டுரங்கன் 
நன்றாக தரிசனம் தந்தான்! அவன் 
எங்களைப் பார்த்ததில் மிகவும் 
சந்தோஷப்பட்டான் விட்டாலன்! அவன் 
கருணைக்கு அளவுண்டோ இங்கே?

Sunday, August 12, 2012

ஆசீர்வாதம் செய்!


ராதேக்ருஷ்ணா!

ருக்குமாய்...உன் விட்டலனை 
பார்க்க எங்களுக்கு அனுமதி தா!
உன்னை நம்பித்தான் நாங்கள் 
எல்லோரும் பண்டரிபுரத்திர்க்கு வருகிறோம்!
எங்களுக்கு ஆசீர்வாதம் செய்!

விட்டலனின் திருவடி...


ராதேக்ருஷ்ணா!

விட்டலனின் திருவடியை பார்க்கப்போகிறோம்!
அவனின் திருவடியை பிடிக்கப்போகிறோம்!
அவனை திருடி வீட்டிற்கு கொண்டுவரப்போகிறோம்!
வா விட்டலனை கொள்ளையடிப்போம்...

காண கண் கோடி வேண்டும்!


ராதேக்ருஷ்ணா!

பாண்டுரங்கனை காண செல்கிறோம்!
நீங்களும் எங்களோடு வாருங்கள்!
நமது விட்டலனை பார்க்க காண கண் 
கோடி வேண்டும்! விட்டலா எங்களுக்கு 
நல்ல தரிசனம் தா...

Saturday, August 11, 2012

கோவிந்தா கோவிந்தா...


ராதேக்ருஷ்ணா!

மழை பெய்கிறது! ஜனங்கள் 
கோவிந்தா கோவிந்தா என்று 
சொல்லுகிறார்கள்! பானையோ 
5 மாடி 10 மாடி உயரத்தில் 
இருக்கிறது! உடைக்க 
வட்டமாய் ஏறுகிறார்கள்..

உரியடி கொண்டாடுகிறார்கள்!


ராதேக்ருஷ்ணா!

மகாராஷ்ட்ராவில் அத்தனை பேரும் 
ஆனந்தமாக உரியடி கொண்டாடுகிறார்கள்!
கோவிந்தா என்று வாயார அழைத்து 
தயிர் பானையை உடைத்து ஆடுகிறார்கள்...

ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!

ராதேக்ருஷ்ணா!

இன்று இரவு த்வாரகா நாதனுக்கு 
ஜன்மாஷ்டமி! இரவு 11 30 மணி 
அளவில் நமது தூர்தர்ஷன் 
தொலைக்காட்சியில் இரவு கண்டு 
மகிழ்வீர்! ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!

Friday, August 10, 2012

வாரீர் கோபியரே!


ராதேக்ருஷ்ணா!

இன்று நம் க்ருஷ்ணனின் பிறந்தநாள்!
நாம் ஆனந்தமாய் கொண்டாடுவோம்!
நாம் அனைவரும் எல்லாவற்றையும் 
மறந்து அவனோடு ஆடிப் பாடி 
மகிழ்வோம்! வாரீர் கோபியரே!

ஆவலோடு காத்திருக்கிறான்!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனுக்கு என்ன வண்ணத்தில் 
வஸ்திரம் வாங்கினாய்? க்ருஷ்ணனுக்கு 
என்ன பக்ஷணம் எல்லாம் தரப்போகிறாய்?
அவன் ஆவலோடு உனக்காகக் 
காத்திருக்கிறான்! நீயும்தானே?

கோகுலாஷ்டமி!


ராதேக்ருஷ்ணா!

இன்று கோகுலாஷ்டமி! மனது 
நிறைய உன் க்ருஷ்ணனை வா 
என்று அழை! இன்று இரவு 
அவன் உன் வீட்டிற்கு  ரஹசியமாய் 
வரப்போகிறான்! வரவேற்க தயாராகு!

Thursday, August 9, 2012

க்ருஷ்ணனை விடாதே!


ராதேக்ருஷ்ணா!

உன் வீட்டில் க்ருஷ்ணனை பிடித்து 
வைத்துக்கொள்! அவனை விடாதே!
அவனுக்கு நீ  தாசநாக/தாசியாக 
மாறிவிடு! அவனுக்கு கைங்கர்யம் 
செய்து வாழ்வை அனுபவி!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP