Saturday, June 11, 2011

இழிவு படுத்தாதே!


ராதேக்ருஷ்ணா

மற்றவரை இழிவாக நடத்துவது
 மிக சுலபம்! ஆனால் நிச்சயம் 
அது உன் வாழ்வை பாதிக்கும்!
நீ யார் மற்றவரை இழிவுபடுத்திப்
பேச? நீ ஒழுங்கோ?

மரியாதை வேண்டும்!


ராதேக்ருஷ்ணா

பெரியவர்களிடம் மரியாதையாக
பேசவேண்டும்! ஒரு நாளும் 
பெரியவர்களை அவமரியாதையாகப்
பேசக்கூடாது! மரியாதையாக
நடக்கவேண்டியது தர்மம்...

விசேஷ கருணை!


ராதேக்ருஷ்ணா

குழந்தைகள் தெய்வத்தின் விசேஷ 
கருணை! அதனால் ஒரு நாளும்
குழந்தைகளை கெட்ட வார்த்தையால்
திட்டவேகூடாது! உங்கள் 
குழந்தைகளை அனுபவியுங்கள்!

Friday, June 10, 2011

நல்லதை விதை!


ராதேக்ருஷ்ணா

குழந்தைகள் மனதில் நாம்
என்ன விதைக்கிறோமோ 
அதுதான் அவர்களின் எதிர்காலம்!
நாம் என்ன விதைக்கிறோமோ 
அதையேதான் அறுவடை செய்கிறோம்!
நல்லதை விதை!

நம் நடவடிக்கை...


ராதேக்ருஷ்ணா

குழந்தைகள் குழந்தைகளாக 
இருக்கவேண்டுமென்றால் 
பெரியவர்கள் பெரியவர்களாக
இருக்கவேண்டும்! நம்
நடவடிக்கை குழந்தைகளுக்கு
பாடமாக இருக்கவேண்டும்!

பகவானின் வீடு!


ராதேக்ருஷ்ணா

கோயில் என்பது பகவானின் வீடு!
அந்த வீட்டிற்கு செல்லும்போது 
அன்போடும், ஆசையோடும்
செல்லவேண்டும்! பகவானின்
வீட்டை நாம் சுத்தமாக
வைக்கவேண்டும்! சரியா...

பகவான் ழைக்கிறார்!


ராதேக்ருஷ்ணா

தெய்வம் அழைக்காமல் கோயிலுக்கு
யாராலும் செல்ல முடியாது!
நாம் நம்முடைய முயற்சியால்
கோயிலுக்கு செல்லவில்லை! 
பகவான் நம்மை அழைக்கிறார்!
சத்தியம்!

ஆழ்வார் அழைக்கிறார்..


ராதேக்ருஷ்ணா

வைகாசி மாதத்தில் ஆழ்வார்
 திருநகரிக்கு செல்வதே பரம
சுகம்! நாங்கள் இப்பொழுது
ஆழ்வாரை தரிசிக்கக் 
கிளம்பிக்கொண்டிருக்கிறோம்!
அவர் அழைக்கிறார்..

Thursday, June 9, 2011

எழுவாய்!


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய சோம்பேறித்தனம் 
உனக்கு முதல் விரோதி! அதை
முதலில் புரிந்துகொள்! 
சோம்பேறித்தனத்தை ஒழித்துவிட்டால்
உன்னை வெல்ல உலகில்
யாருமில்லை! எழுவாய்!

உன்னை மாற்றிக்கொள்!


ராதேக்ருஷ்ணா

சோம்பேறித்தனத்தைப் போல் ஒரு
பாவம் இன்று வரை உலகில் 
இல்லை! சோம்பேறிகளினால்
தான் பல குடும்பங்களில் இன்றும்
பிரச்சனைகள் வருகிறது!
உன்னை மாற்றிக்கொள்!


ராதேக்ருஷ்ணா

சோம்பேறித்தனம் ஒழியவேண்டும்!
அப்பொழுதுதான் வாழ்க்கை 
முன்னேறும்! சோம்பேறித்தனத்தால்
இதுவரை வாழ்க்கையை இழந்தவர்கள்
பல கோடி பேர்! ஜாக்கிரதை!

Saturday, June 4, 2011

ராக்ஷசர்கள்!


ராதேக்ருஷ்ணா

சோம்பேறியை கடவுளுக்கும்
பிடிக்காது! சோம்பேறி தானும்
அழிகிறான்! அடுத்தவர்களையும்
அழிக்கிறான்! சோம்பேறிகள் 
உலகின் ராக்ஷசர்கள்! 
சோம்பேறியை ஒதுக்கு...

முயற்சி செய்...


ராதேக்ருஷ்ணா

கடவுளின் ஆசீர்வாதம் இருந்தாலும்
முயற்சி செய்யாதவர் வாழ்வில்
ஆனந்தத்தை அனுபவிக்கமுடியாது!
முயற்சி இல்லாதவன் நிச்சயம்
நடைபிணமே!

சோம்பேறித்தனம்...


ராதேக்ருஷ்ணா

உலகின் பல கொடுமைகளுக்கு
காரணம் சோம்பேறித்தனமே!
மனிதனுக்கு சோம்பேறித்தனம் 
வந்துவிட்டால் அவனை அழிக்க
வேறு யாருமே முயற்சி 
செய்யவேண்டாம்!

Friday, June 3, 2011

நல்லதே செய்கிறார்!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணன் எப்பொழுதும் உனக்கு
எது நல்லதோ அதை மட்டுமே
செய்கிறார்! அதனால் நிச்சயம்
நீ உன் வாழ்வில் மிகப் பெரிய 
இடத்தை அடைவாய்! 
கவலையே வேண்டாம்!

சந்தோஷமாய் இரு...


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனை நம்பியவர்கள் ஒரு
நாளும் வீண் போனதில்லை! 
க்ருஷ்ணன் என்னும் கருந்தெய்வம்
நிச்சயம் உனக்கு துணை
இருக்கிறது! நிம்மதியாய்
சந்தோஷமாய் இரு...

க்ருஷ்ணனை நம்பு!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனை நம்பு! எப்பொழுதும்
 நீ க்ருஷ்ணா என்று ஜபித்துக்
கொண்டிரு! நிச்சயம் வாழ்வின்
மகிமை உனக்குப் புரியும்! உன்
வாழ்க்கை மிக மிக அருமையானது!

Wednesday, June 1, 2011

மறைமுக உதவி!


ராதேக்ருஷ்ணா

உலகம் உன்னை கேவலப்படுத்தும்போது
தைரியமாக இரு! உலகம் உனக்கு 
மறைமுகமாக உதவி செய்கிறது!
ஒவ்வொரு அவமரியாதையும் 
உனக்கு நல்லதே! யோசி!

பெருமைக்கு மயங்காதே!


ராதேக்ருஷ்ணா!

உன்னை எல்லோரும் கொண்டாடும்போது
ஜாக்கிரதையாக இரு! பெருமைக்கு
மயங்கினவர்கள் இன்றுவரை வாழ்வில்
பெரிய காரியங்களை செய்ததில்லை!
இதை மறக்காதே!

புத்தி மாறும்!


ராதேக்ருஷ்ணா

சமயத்தில் புத்தி சோம்பேறியாக
இருக்க உன்னை தூண்டும்!
அந்த சமயத்தில் உன் 
பொறுப்புகளையும் லட்சியங்களையும்
நினைத்துக்கொள்! உடனேயே
உன் புத்தி மாறும்!

ஆனந்தமாய் சிரி!


ராதேக்ருஷ்ணா

உன் க்ருஷ்ணனுக்கு உன்னிடம் 
முழு உரிமை உண்டு! அவன்
உனக்கு என்றுமே நல்லது
மட்டுமே செய்கிறான்! அதனால்
நீ எப்பொழுதும் நிம்மதியாக 
இருக்கலாம்! ஆனந்தமாய் சிரி!

ஆசை வைக்காதே!


ராதேக்ருஷ்ணா

உனது என்று உன்னிடம் 
இருப்பது என்றுமே க்ருஷ்ணந்தான்!
அதனால் மற்ற எந்தப் பொருளிலும் 
ஒரு எல்லைக்கு மேல் ஆசை 
வைக்காதே! ஆசை வைத்தால்
துன்பம்தான்!

நன்றாக இரு!


ராதேக்ருஷ்ணா

எதையாவது யோசித்துக்கொண்டு
மனதை குழப்பிக்கொள்ளாதே! 
சரியாக யோசித்து உன் வாழ்வை
சந்தோஷமாக வைத்துக்கொள்! 
நீ நன்றாக இருக்கவேண்டும்!

என்ன யோசித்துக்கொண்டிருக்கிறாய்?


ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் எதையாவது 
யோசித்துக்கொண்டே இருப்பார்கள்!
என்ன யோசிக்கிறார்கள் என்பது
அவர்களுக்கே வெளிச்சம்! நீ
இப்பொழுது என்ன 
யோசித்துக்கொண்டிருக்கிறாய்?

மனதை படுத்தாதே!


ராதேக்ருஷ்ணா

மனிதர்களின் அவமரியாதைஎல்லாம் 
ஒரு விஷயமல்ல! அதற்கெல்லாம்
மனதை போட்டு குழப்பிக்கொண்டால்
பிறகு என்னதான் நீ செய்யமுடியும்!
மனதை படுத்தாதே!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP