Tuesday, March 15, 2011

தாயை கொண்டாடுகிறான்!


ராதேக்ருஷ்ணா

உலகில பலரும் அம்மாவைக்
கொண்டாடுவதில்லை! ஆனால்
இந்த த்வாரகானாதானோ ராஜாதி
ராஜனாக இருந்தாலும் தன் தாயை
அப்படிக் கொண்டாடுகிறான்! சத்தியம்! 

நீயே அரசன்!


ராதேக்ருஷ்ணா

எல்லோரும் பகவானைக்
 கொண்டாடுவோம்! இந்த
 த்வாரகாவில் பகவான்
பக்தர்களை கொண்டாடுகிறான்!
பக்தர்களை ஆராதனை செய்யும்
த்வாரகாநாதா... நீயே அரசன்!

அன்பு நிறைந்த த்வாரகா!


ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் மிக அன்போடு 
பழகும் இந்த த்வாரகா
க்ருஷ்ண சாநித்தியத்தில் 
மிக ஜோராக சிலிர்க்கிறது!
கண்ணன் பக்தர்களை இங்கே
கொண்டாடுகிறான்! 

எத்தனை அழகு!!!


ராதேக்ருஷ்ணா

கோமதி நதி சமுத்திரத்தோடு 
சங்கமிக்கும் த்வாரகா மிக
அழகாக இருக்கிறது! 
தெருவெல்லாம் பசுக்கூட்டம்!
மக்கள் பசுக்களை தெய்வமாகக் 
கொண்டாடுகின்றனர்!

கோமதி ஸ்நானம்...


ராதேக்ருஷ்ணா

இப்பொழுது பலரும் கோமதி
நதியில் சுகமாக ஸ்நானம் 
செய்துகொண்டிருக்கிறார்கள்!
எத்தனை பேர் இந்த 
த்வாரகாதீசனிடம் எவ்வளவு 
பக்தி செய்கிறார்கள்!

க்ருஷ்ணனை தா!


ராதேக்ருஷ்ணா

கோமதி நதியின் கரையில்
இந்த த்வாரகா எத்தனை 
அழகாக இருக்கிறது! ஹே
கோமதி மாதா! உன்னை 
சரணடைந்தேன்! எனக்கு 
க்ருஷ்ணனை தா! உடனே தா!

எவ்வளவு பக்தி!!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் த்வாரகாநாதன்
வித விதமாக எங்களுக்கு
அனுக்ரஹம் செய்கின்றான்!
எத்தனை ஜனங்கள் அவன் 
மீது எவ்வளவு பக்தி 
கொண்டிருக்கிறார்கள்!

ஜொலிக்கிறான்!


ராதேக்ருஷ்ணா

இன்று த்வாரகாதீசன் நீல வண்ண 
ஆடையில் ஜொலிக்கிறான்! முத்து
மாலைகளை உடல் முழுதும் 
போட்டுக்கொண்டு அற்புத தரிசனம்
தருகிறான்! எத்தனை சுகம்!

Friday, March 11, 2011

இது சத்தியம்!


ராதேக்ருஷ்ணா

பாகவத புஸ்தகம் எங்கு
இருக்கிறதோ அங்கே நிச்சயம் 
கண்ணன் இருக்கின்றான்! எங்கே
பாகவதம் வாசிக்கிறார்களோ 
அங்கே நிச்சயம் கண்ணன் 
வருவான்! இது சத்தியம்!

மனதில் சந்தோஷம்!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொருவரும் பாகவதம் 
வாசிக்கும்போது அத்தனை 
சுகமாக இருக்கிறது! எல்லோருமே
பகவானின் குழந்தைகள் என்கிற
தைரியம் வருகிறது! 
மனதில் சந்தோஷம்!

பாகவத பாராயணம்...


ராதேக்ருஷ்ணா

இன்று காலை பாகவத பாராயணம்
 தொடங்கினோம்! சுகமாக காலை
5:30 மணிக்கு புருஷ சூக்தம் 
சொல்லி த்வாரகாதீசனை
நினைத்துக்கொண்டு பாகவதம்!

ராதிகா க்ருஷ்ண தரிசனம்!


ராதேக்ருஷ்ணா

பேட் த்வாரகாவில் அற்புதமான
க்ருஷ்ணனையும், ஆனந்தமான 
ராதிகாவையும் கண்டோம்! என்ன
தவம் செய்தோம் நாங்கள்? ஹே
க்ருஷ்ணா! காருண்யம்
தாங்கமுடியாது!

ஆஞ்சநேயரின் புத்திரன்...


ராதேக்ருஷ்ணா

பேட் த்வாரகாவில் ஆஞ்சநேயரை
அவருடைய புத்திரன் மகரத்வஜனோடு
கண்டோம்! ஆஞ்சநேயரின் வியர்வையை
ஒரு மீன் முழுங்க அதிலிருந்து
உண்டானவன் இவன்!

பேட் த்வாரகா...


ராதேக்ருஷ்ணா

நேற்று அந்திப்பொழுதில் சுகமாக
படகில் பயணம் செய்து பேட்
த்வாரகாவைக் கண்டோம்! 
மீண்டும் இரவில் படகில் 
பயணம் செய்து மீண்டும் 
த்வரகாவிற்கு வந்தோம்!

Wednesday, March 9, 2011

ஜொலிக்கின்றான்!


ராதேக்ருஷ்ணா

இன்று த்வாரகாதீசன் பச்சை
வண்ண ஆடையில் ஜொலிக்கின்றான்!
அவனுடைய அங்கங்களில் முத்து
சுகமாக விளையாடிக்கொண்டிருக்கிறது!
எத்தனை அழகு! ஆஹா!

த்வாரகாதீசனின் தரிசனம்!


ராதேக்ருஷ்ணா

இப்பொழுது நாங்கள் த்வாரகாதீசனை
தரிசிக்கப் போகிறோம்! நீங்களும் 
எங்களோடு த்வாரகாதீசனை 
தரிசிக்க வாருங்கள்! எல்லோரும் 
க்ருஷ்ணனின் குழந்தை!

த்வாரகாவில் சுகமான இரவு...


ராதேக்ருஷ்ணா

சுகமான இரவு கழிந்தது!
த்வாரகாவில் இரவு அற்புதமாக
இருக்கிறது! இன்றைய காலை
நிம்மதியாக தொடங்குகிறது!
த்வாரகாதீசா நமஸ்காரம்!

Tuesday, March 8, 2011

சோம்நாத் கோயில்...


ராதேக்ருஷ்ணா

சோம்நாத் கோயிலைப் பார்த்து
அதிசயித்தோம்! கடற்கரயில்
எத்தனை அற்புதமாக நின்று
கொண்டிருக்கிறது! பாரதத்தின் 
பெருமையை நிரூபிக்கும் ஸ்தலம்!

முக்தி த்வாரகா...


ராதேக்ருஷ்ண

பகவான் க்ருஷ்ணனின் சரண
கமலங்களை மான் என நினைத்து
 "ஜரா" என்கிற வேடுவன் அம்பு
விட்டான்! அந்த முக்தி த்வாரகா
என்கிற இடத்தைக் கண்டோம்!

ஆதிசேஷனை தரிசித்தோம்!


ராதேக்ருஷ்ணா

பலராமர் வைகுந்தத்திற்கு கிளம்பின
குகையை பார்த்தோம்! ஆனந்தமாக
ஆதிசேஷனை தரிசித்தோம்! பகவான்
வைகுந்தம் சென்ற இடத்தை பார்த்தோம்!

கிரிதாரியை கண்டோமே!


ராதேக்ருஷ்ணா

மீராவை தன்னுள் வைத்துக்கொண்ட
கிரிதர கோபாலனை, ருக்மிணியை
கல்யாணம் செய்து கொண்ட
 காதலனை, குசேலரிடம் அவல் 
வாங்கின நண்பனைக் கண்டோமே!

எத்தனை க்ருபை! ஆஹா!



ராதேக்ருஷ்ணா

த்வாரகா நாதனின் கோயிலில்
இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும்
மிக மிக சுகம்! எத்தனை க்ருபை
செய்கிறான் இந்த ராஜாதி
ராஜன்! இவனல்லவோ ப்ரஜா
ராஜன்! ஆஹா!

த்வாரகா நாதனை அனுபவித்தோம்!


ராதேக்ருஷ்ணா

ஆஹா அழகான த்வாரகா
 நாதனை முத்து மாலையில்
ரோஜா வண்ண ஆடையில்
அழகாக அனுபவித்தோம்!
வேறு என்ன வேண்டும் வாழ்வில்?
எத்தனை சுலபமானவன்!

நம்மை வெல்வோம்!


ராதேக்ருஷ்ணா

நல்லவர்கள் வாழவேண்டும்!
தீயவர்கள் திருந்தவேண்டும்!
நன்மைகள் வளரட்டும்!
தீமைகள் மாறட்டும்!
சந்தோஷமாய் வாழ்வோம்!
பக்தியோடு வாழ்வோம்!
நம்மை வெல்வோம்!

சாந்தி நிலவட்டும்!


ராதேக்ருஷ்ணா

வேற்றுமை அழியட்டும்!
ஒற்றுமை ஓங்கட்டும்!
தற்பெருமை நாசமாகட்டும்!
நாம ஜபம் வளரட்டும்!
மன சஞ்சலங்கள் இல்லாமல்
போகட்டும்! உலகில் சாந்தி
நிலவட்டும்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP