Tuesday, July 24, 2012

பூமிப் பிராட்டியின் அவதாரம்!

ராதேக்ருஷ்ணா!
 
பூமிப் பிராட்டியே ஆண்டாளாக
நமக்காக அவதரித்தாள்! அவள்
பிறந்ததால் நாமும் திருப்பாவையை
அனுபவிக்கிறோம்! கலியுக
மக்களை காக்க வந்த தேவி!

திருவாடிப்பூரம்!

ராதேக்ருஷ்ணா!
 
இன்று திருவாடிப்பூரம்! நம்
ஆண்டாள் அவதரித்த உன்னத
தினம்! இன்று ஸ்ரீ வில்லிபுத்தூரில்
தேரோட்டம்! நிறைய பக்தர்கள்
இப்பொழுது அங்கே  ஜபிக்கிரர்கள்!

Monday, July 23, 2012

வாரீர் இப்பொழுதே!


ராதேக்ருஷ்ணா!

திருவனந்தபுரத்திற்கு சமமான ஒரு 
திவ்யதேசம் உண்டோ இந்த உலகில்?
பத்மநாபனுக்கு சமமான தெய்வம் 
உண்டோ இந்த கலியுகத்தில்?
வாரீர் இப்பொழுதே!

அழகாக ஜொலிக்கிறான்...


ராதேக்ருஷ்ணா!

எத்தனை அழகாக ஜொலிக்கிறான் 
என்னுடைய காதலன் ஸ்ரீ அனந்த 
பத்மநாபன்! ஒவ்வொரு முறை 
அவனை தரிசிக்கும்போதும் அவன் 
புதியதாகவே இருக்கிறான்...

ஸ்ரீ அனந்த பத்மநாபனை தரிசித்துவிட்டேன்...


ராதேக்ருஷ்ணா!

எல்லா இடர்களையும் களையும் 
ஸ்ரீ அனந்த பத்மநாபனின் 
உன்னதமான திருவனந்தபுரத்தில் 
இப்போது இருக்கிறேன்! என் 
பத்மநாபனை தரிசித்துவிட்டேன்...

Sunday, July 22, 2012

ஆண்டாள் புறப்பாடு...


ராதேக்ருஷ்ணா!

கருடாழ்வார் இங்கு தான் தவமிருந்து,
வைகுண்ட லோகத்தில் பெருமாளோடு 
இருக்கும் பாக்கியம் அடைந்தார்! 
நாங்கள் உள்ளே செல்லும் 
சமயம் ஆண்டாள் புறப்பாடு...

வானமாமலையே வாழ்க!


ராதேக்ருஷ்ணா!


ஊர்வசியும், திலோத்தமையும் சாமரம் 
வீச, ஸ்ரீ தேவி,பூ தேவியோடு தோதாத்ரி 
நாதன் அமர்ந்திருக்கோம் காட்சி மனதை 
                       வருடும்! வானமாமலையே வாழ்க!

தோதாத்ரி!


ராதேக்ருஷ்ணா!


இப்பொழுதுதான் வானமாமலை திவ்யதேசத்தை 
நன்றாக சேவித்தோம்! தோதாத்ரி நாதன் வீற்றிருக்கும் 
அழகே தனி தான்! சுயம்பு மூர்த்தி தோதாத்ரி!

Saturday, July 21, 2012

நாமத்தை நம்பு!

ராதேக்ருஷ்ணா!

நாவில் நாம ஜபம் இருக்கும்வரை
நீ நிச்சயம் வாழ்வில் வெல்வாய்!
நாம ஜபம் உனக்கு உற்ற சகா!
ஒரு நாளும் இந்த சகா உன்னை
கைவிடார்! நாமத்தை நம்பு!

ஜபம் செய்!

ராதேக்ருஷ்ணா!

மனதில் சமாதானம்! செய்யும்
காரியத்தில் நிதானம்! யோசிப்பதில்
ஒரு திடம்! இவையெல்லாம் நாம ஜபம்
செய்யும்போது தானாக நமக்கு 
வந்துவிடும்! ஜபம் செய்!

Friday, July 20, 2012

ஸ்ரீ வில்லிபுத்தூரே நீ வாழ்க...

ராதேக்ருஷ்ணா!
 
ஸ்ரீ வில்லிபுத்தூரே நீ வாழ்க...
கோவிந்தன் வாழும் ஊரே
நீ வாழ்க...எங்கள் பெரியாழ்வாரின்
ஊரே நீ வாழ்க...திருமுக்குளம்
உள்ள ஊரே நீ வாழ்க...

கலியுக கோபி

ராதேக்ருஷ்ணா!
 
தமிழ் தெரியாத எத்தனை
ஜனங்கள் இன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
ஆண்டாளை அனுபவிக்க
வந்திருக்கிறார்கள்!ஆண்டாள்...
சத்தியமாய் கலியுக கோபிதான்!!

சுகமாய் இருக்கிறேன்!

ராதேக்ருஷ்ணா!
 
இன்று இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூரில்
சுகமாய் இருக்கிறேன்! காலையில்
ஆண்டாளையும், ரங்க மன்னாரையும்
ஆனந்தமாய் தொழுதேன்! கோதை
பிறந்த ஊர் அழகு...

Thursday, July 19, 2012

கண்டு கொள்வதில்லை!


ராதேக்ருஷ்ணா!

அடுத்தவரை குறை கூறும் பலர்,
தன் வீட்டில் உள்ள குறைகளைப் 
பற்றி ஒரு நாளும் கண்டு 
கொள்வதில்லை! தன் குறையைப் 
பற்றி வாயை திறப்பதே இல்லை...

Wednesday, July 18, 2012

ஆனந்தம் கிடைக்கட்டும்...


ராதேக்ருஷ்ணா!

என்னை நம்புவருக்கு நல்ல 
வாழ்க்கை அமையட்டும்! என்னிடம் 
அன்பு செலுத்துபவருக்கு வாழ்க்கை 
உயரட்டும்! என்னோடு இருப்பவருக்கு 
ஆனந்தம் கிடைக்கட்டும்...க்ருஷ்ணா...

சுகம் தருவாய்!


ராதேக்ருஷ்ணா!

என்னை அவமானப் படுத்துபுவர்ருக்கு 
நிறைய நாம ஜபம் வரட்டும்! என்னை 
வெறுப்பவருக்கு நல்ல நிம்மதி 
கிடைக்கட்டும்! க்ருஷ்ணா நீ 
தான் சுகம் தருவாய்!

அருள் செய்வாய் நீ!


ராதேக்ருஷ்ணா!

என்னை தூற்றுபவருக்கு நல்ல 
பக்தி உண்டாகட்டும்! என்னை 
விரோதிப்பவருக்கு நல்ல ஞானம் 
உண்டாகட்டும்! க்ருஷ்ணா...
எல்லோரும் நன்றாக இருக்க 
அருள் செய்வாய் நீ!

Tuesday, July 17, 2012

க்ருஷ்ண தாசன்!


ராதேக்ருஷ்ணா!

என் குருவை ஒரு நாளும் 
நான் மறக்க மாட்டேன்! என் 
சிஷ்யர்களையும் ஒரு நாளும் 
நான் மறக்கமாட்டேன்! நான் 
அன்பிற்காக வாழும் ஒரு 
க்ருஷ்ண தாசன்! க்ருஷ்ணா...

நிறைய லாபம்...


ராதேக்ருஷ்ணா!

குருவை மறக்க முடியுமா? 
குருவை மறப்பவர் உண்டோ?
எப்பொழுதுமே குரு நம் நலம் 
விரும்பி! நாம் குருவை நினைப்பதால் 
நமக்கு தான் நிறைய லாபம்...

குழந்தையாக பழகுகிறார்!


ராதேக்ருஷ்ணா!

குரு என்றுமே குழந்தையாகத் தான் 
நம்மிடம் பழகுகிறார்! ஆனால் நாம் 
தான் பல சமயத்தில் பெரிய மனிதர் 
என்று நம்மை நினைத்துக்கொள்கிறோம்...

Monday, July 16, 2012

அன்பாக இருப்பாய்!

ராதேக்ருஷ்ணா!

குரு உனக்கு நல்ல தூக்கம்
தருகிறார்! குரு உனக்கு நல்ல
தைரியம் தருகிறார்! குரு உனக்கு நல்ல நிம்மதி தருகிறார்! நீ குருவிடம் அன்பாக இருப்பாய்!

ஜெயித்தே தீருவாய்...

ராதேக்ருஷ்ணா!
 
குரு ஒரு நாளும் உன்னை
நஷ்டப்பட விடமாட்டார்! உன்
குரு தான் நஷ்டப்பட்டாலும்,
உன்னை நஷ்டம் அடையவே
விடமாட்டார்! நீ வாழ்வில்
ஜெயித்தே தீருவாய்...

நீ நஷ்டப்படமாட்டாய்!

ராதேக்ருஷ்ணா!
 
குருவால் நஷ்டப்பட்டவர் எவருமில்லை! குருவால் லாபம் அடைந்தவர் மட்டுமே
இந்த உலகில் என்றும் உண்டு! உன் குரு உனக்கு லாபம் மட்டுமே! நீ நஷ்டப்படமாட்டாய்!

Saturday, July 14, 2012

குருவை நம்பு!


ராதேக்ருஷ்ணா!

குரு என்பவர் நல்ல மனிதர்!
அன்பின் உருவம்! குரு என்பவர் 
உனக்கு ஒரு நல்ல வழிகாட்டி!
குரு என்பவர் உன் குடும்பத்திற்கு 
ஒரு நல்ல காவலன்! குருவை நம்பு!

குரு சொல்படி கேள்!


ராதேக்ருஷ்ணா!

குரு என்பவர் தானும் கடவுளை 
அனுபவித்துக்கொண்டு, உன்னையும் 
கடவுளை அழகாக அனுபவிக்க 
சொல்லிக்கொடுப்பவர்! அதனால் 
நீ அவர் சொல்படி கேட்பது நல்லதே!!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP