Friday, November 2, 2012

அழகாக இருக்கும்!

ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனின் பாதங்கள் தாமரை 
போலே சிவந்திருக்கும்! க்ருஷ்ணனின் 
திருவடிகள் மிக அழகாக இருக்கும்!
விரல் நகங்கள் மென்மையாக சிவந்திருக்கும்!

Thursday, November 1, 2012

கண்ணாரக் கண்டனர்!


ராதேக்ருஷ்ணா!

மழைக்காக தான் முதாலாழ்வார்கள் 
மூவரும் திருக்கோவலூரில் ஒரு ரிஷியின் 
ஆசிரமத்தில் ஒதுங்கினர்! அப்பொழுதுதான் 
பகவானைக் கண்ணாரக் கண்டனர்!

மழைக்கு ஜெய்!


ராதேக்ருஷ்ணா!

கொட்டும் மழையில் தான் 
பகவான் க்ருஷ்ணன் கோவர்தன 
மலையை தூக்கி கோபர்கள்,
கோபிகைகள், மாடுகள், ஆடுகள் 
எல்லாவற்றையும் ரக்ஷித்தான்!
 மழைக்கு ஜெய்!

தெய்வீகமானது...


ராதேக்ருஷ்ணா!

மழை தெய்வீகமானது, மழையைப் 
பார்த்தே ஸ்ரீ ஜெயதேவர் அஷ்டபதியை 
ஆரம்பித்தார்! மழையில் தான் சுதாமாவும் 
க்ருஷ்ணனும் காட்டில் அலைந்தனர்!

Wednesday, October 31, 2012

மனதின் ஆரோக்கியம்!


ராதேக்ருஷ்ணா!

உன் மனதை நீ ஆரோக்கியமாக 
வைத்திருப்பதே உனக்கு நல்லது!
உன் மனதின் ஆரோக்கியத்தை 
பொருத்தே உனது வாழ்க்கையின் 
ஆனந்தமும், உடலின் ஆரோக்கியமும்!

அமைதி கிடைக்கும்!


ராதேக்ருஷ்ணா!

உன் மனதை நீ சமாதானமாக 
வைத்துக்கொண்டே ஆகவேண்டும்!
 அதற்க்கு நீ விடாமல் நாம ஜபம் 
செய்தே ஆகவேண்டும்! நிச்சயம் 
அமைதி கிடைக்கும்! கலங்காதே!

சுகமாய் இரு!

ராதேக்ருஷ்ணா!

மனதுக்கும் உடலுக்கும் நிறைய 
சம்மந்தம் உண்டு! நம் மனதின் 
பயமும், கோபமும், கவலையும் 
நம் உடல் நலத்தை நிச்சயம் 
பாதிக்கும்! மனதே சுகமாய் இரு!

Tuesday, October 30, 2012

நாராயண நாமம்...


ராதேக்ருஷ்ணா!

திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்
 " இந்த மனித உடம்பில் பிறந்து,
நிறைய தவறுகளை செய்து நான் 
படாத பாடு பட்டேன்! நாராயண
 நாமம் என்னை காத்தது!"

மோக்ஷம் உண்டு...


ராதேக்ருஷ்ணா!

திருப்பாணாழ்வார் சொல்கிறார் 
" ஸ்ரீ ரங்க நாதன் இடையில் 
கட்டி இருக்கும் அழகான 
பீதாம்பரத்தை நினைதிருந்தாலே 
நமக்கு நிச்சயம் மோக்ஷம் உண்டு"

Monday, October 29, 2012

யோசிப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

அஹம்பாவம் ஒரு நாளும் 
நல்லது செய்யாது! விநயம் 
ஒரு நாளும் கெடுதல் தராது!
 சத் சங்கம் ஒரு நாளும் உனக்கு 
கஷ்டம் தராது! தீர்கமாய் யோசிப்பாய்!

சத்சங்கத்தில் இருப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

பக்தி செய்வதால் உனக்கு 
நஷ்டமில்லை! நாம் ஜபம் 
சொல்வதில் ஒரு கஷ்டமுமில்லை!
 குரு சொல்படி நடந்தால் ஒரு 
தொல்லையுமில்லை! சத்சங்கத்தில் இருப்பாய்!

பக்தி செய்வாய்!


ராதேக்ருஷ்ணா!

கஷ்டம் வருவது தெய்வதினால் 
அல்ல! பிரச்னை தருவது கடவுளின் 
வேலையுமல்ல! நம்மை அழவைப்பதில் 
தெய்வத்திற்கு ஆசையுமில்லை!
 பக்தி செய்வாய்!

Sunday, October 28, 2012

தெளிவாகு!


ராதேக்ருஷ்ணா!

காவி கட்டுபவர் எல்லாம் 
சன்யாசியுமல்ல! கோயிலுக்கு போகாதவர் 
எல்லாம் நாஸ்தீகனுமல்ல! கண்களில் 
அழுகை வருபவரெல்லாம் பக்தருமல்ல!
 தெளிவாகு!

கெட்டவர் அல்ல...


ராதேக்ருஷ்ணா!

கோபப்படுபவர் எல்லாம் கெட்டவர் 
அல்ல! அமைதியாய் இருப்பவர் எல்லாம் 
நல்லவரல்ல! திட்டுபவர் எல்லாம் விரோதியுமல்ல! 
கொஞ்சுபவர் எல்லாம் வேண்டியவருமல்ல!

தெரிந்து கொள்!


ராதேக்ருஷ்ணா!

அழுபவர் எல்லாம் கோழையுமல்ல!
சிரிப்பவர் எல்லாம் தைரியசாலியுமல்ல!
தோர்ப்பவர் எல்லாம் முட்டாளல்ல!
ஜெயிப்பவர் எல்லாம் புத்திசாலியல்ல!
தெரிந்து கொள்!

Saturday, October 27, 2012

வாயினால் பாடி...மனிதனால் சிந்திக்க...


ராதேக்ருஷ்ணா!

ஸ்ரீமதி ஆண்டாள் சொல்கிறார் 
"க்ருஷ்ண நாமத்தை வாயினால் 
சொல்லி, மனிதனால் அவனையே 
நினைத்தால் பாவங்கள் எல்லாம் 
தீயில் பஞ்சு போலே உடனே அழியும்"

என் அரங்கன்!


ராதேக்ருஷ்ணா!

ஸ்ரீ திருப்பாணாழ்வார் சொல்கிறார்" 
அமுதனான ஸ்ரீ ரங்கத்தில் இருக்கும் 
என் அரங்கனாதனைக் கண்ட கண்கள் 
வேறு எதையும் ரசித்து அனுபவிக்காது"

சுகம்..


ராதேக்ருஷ்ணா!

குலசேகர ஆழ்வார் சொல்கிறார் 
"ஹே மனமே ! ஸ்ரீ ஹரியின் 
திருவடிகளை நினைப்பது போலே 
சுகம் தரும் வேறு ஒரு விஷயம் 
இந்த உலகில் எதுவுமில்லை!"

Friday, October 26, 2012

நல்ல ரிஷியே!


ராதேக்ருஷ்ணா!

மான் மீது ஆசை வைத்து 
மானாக பிறந்து 3 ஜன்மா 
கழிந்து மோக்ஷம் அடைந்தாலும்,
 ஜட பரதர் நல்ல ரிஷியே! யாவரையும் 
மதிக்க தெரிந்து கொள்!

க்ருஷ்ண பக்தை !


ராதேக்ருஷ்ணா!

5 கணவரோடு வாழ்ந்தாலும் 
திரௌபதி பதிவிரதை தான்!
 அவள் காமத்துக்காக 5 பேரை 
கல்யாணாம் செய்யவில்லை! திரௌபதி 
அற்புதமான க்ருஷ்ண பக்தை !

தவறாக நினைக்ககூடாது!


ராதேக்ருஷ்ணா!

கோபக்காரராக இருந்தாலும் துர்வாசர் 
ரிஷி தான்! பெண்ணிடம் மயங்கினாலும் 
விஸ்வாமித்திரர் பிரம்ம ரிஷி தான்! நாம் 
அவர்களை தவறாக நினைக்ககூடாது!

Thursday, October 25, 2012

விஜயம் உண்டாகட்டும்!


ராதேக்ருஷ்ணா!

இந்த விஜய தசமிக்கு எல்லோருக்கும் 
விஜயம் உண்டாகட்டும்! மனதில் 
நிரந்தரமான நம்பிக்கை வரட்டும்!
வென்று காட்டும் வைராக்கியம் 
உடனே வந்து சேரட்டும்!

Wednesday, October 24, 2012

போற்றி போற்றி!

ராதேக்ருஷ்ணா!

இன்று பூததாழ்வாரின் திருநக்ஷத்திரம்!
 ஐப்பசி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில்,
திருக்கடல் மலை திவ்ய தேசத்தில்
அவதரித்தார்! போற்றி போற்றி!

விஜய தசமி!

ராதேக்ருஷ்ணா!

இன்று விஜய தசமி!
 நாம் நன்றாக வாழ்வில்
வெற்றி பெற நமக்கு
கிடைத்த பொன்னால் இது!
 என்றும் குருவை மறவாமல்
இருந்து வாழ்வில் ஜெயித்து கட்டுவாய்!

Tuesday, October 23, 2012

வேட்டையாடுவாய்!


ராதேக்ருஷ்ணா!

ஹே பத்மநாபா! உனது அருளுக்காக 
ஏங்கும் எங்களிடம் தேவை இல்லாத
 அசுர குணங்கள் பல கோடி 
இருக்கிறது! அவற்றை எல்லாம் 
இப்பொழுதே வேட்டையாடுவாய்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP