Wednesday, June 22, 2011

தோளுக்கு மிஞ்சின பிள்ளை...


ராதேக்ருஷ்ணா

தோளுக்கு மிஞ்சின பிள்ளைகளை
தோழனாக நடத்தினால் பெற்றோருக்கு
மரியாதை! சிறு பிள்ளையாக
நடத்தினால் பொய் சொல்லி 
ஏமாற்றுவார்கள்! ஆகவே ஜாக்கிரதை!

வழிகாட்டுங்கள்!


ராதேக்ருஷ்ணா

ஆண் பிள்ளைகளை பொத்தி
பாதுகாத்து வளர்ப்பதனால்
அவர்கள் வெளி உலகில்
போராடத் தெரியாமல்
 திணறுகிறார்கள்! பிள்ளைகளுக்கு
சரியான வழிகாட்டுங்கள்!

வளரவிடுங்கள்...


ராதேக்ருஷ்ணா

வயது வந்த பிள்ளைகளை
தைரியமாக வெளியூர் செல்வதற்கும்
வீட்டு வேலைகளை செய்வதற்கும்
பெற்றோர் அனுமதிக்க வேண்டும்!
பிள்ளைகளை வளரவிடுங்கள்...

Tuesday, June 21, 2011

மனதை கவனி!


ராதேக்ருஷ்ணா

உன் மனதை நீதான் ஜாக்கிரதையாக 
பார்த்துக்கொள்ளவேண்டும்! வேறு
யாராலும் உன் மனதை ஒழுங்காக
கவனித்துக்கொள்ளமுடியாது! 
மனதை கவனி! ரகசியம்!

உன் பலம்!


ராதேக்ருஷ்ணா

மனம் என்பது உன்னுடைய பலம்! 
அதை பலவீனமாக்குவது நீதான்!
எந்த விஷயங்கள் எல்லாம் 
உன்னை பலவீனமாக்குகிறதோ
அதை எல்லாம் தவிர்! முடியும்!

வாழ்வின் அஸ்திவாரம்!


ராதேக்ருஷ்ணா

மனதை ஒழுங்காக வைத்திருப்பவர்கள்
நிச்சயம் வெல்வார்கள்! மனதை 
நன்றாக வைப்பதற்காகவே பக்தி!
அதனால் பக்தி என்பது
வாழ்வின் அஸ்திவாரம்!

Monday, June 20, 2011

என்ன பிரயோஜனம்?


ராதேக்ருஷ்ணா

தன் அருகில் இருக்கும்
 தெய்வத்தை விட்டு எங்கோ
ஓடி என்ன பிரயோஜனம்?
உன் அருகில் இருக்கும்
தெய்வத்தை கொண்டாட நீ
தெரிந்துகொள்ளவேண்டும்!
உன்னை மாற்றிக்கொள்...

தெளிவு தேவை!


ராதேக்ருஷ்ணா

பக்தி என்ற பெயர் கொண்டு
மக்கள் பல விஷயங்களில் 
பைத்தியம் போலே நடக்கிறார்கள்!
அதனால்தான் மற்றவர் பக்தியை 
பரிகசிக்கிறார்கள்! தெளிவு தேவை!

தயார்படுத்து!


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் வாழ்க்கை
வித்தியாசமாக செல்கிறது!
நீயோ நானோ அதை ஒன்றும்
மாற்றமுடியாது! உன்னை எல்லா
நிலைமைக்கும் தயார்படுத்து!
வாழ்ந்துகாட்டு!

குருவின் குழந்தைகள்!


ராதேக்ருஷ்ணா

சத்சங்கத்தில் யாரும் யாரையும்
அவமதிக்கக்கூடாது! எல்லோருமே
குருவின் குழந்தைகள்! சத்சங்கத்தில்
யாரும் உயர்ந்தவர்கள் இல்லை!
எல்லோருமே குழந்தைகள்!

நல்ல சிஷ்யர்...


ராதேக்ருஷ்ணா

சத்சங்கத்தில் எல்லோருமே 
சிஷ்யர்கள்தான்! ஒரு சிஷ்யர் 
இன்னொரு சிஷ்யரை
வேலை வாங்க ஒரு நாளும்
அதிகாரமில்லை! நல்ல சிஷ்யராக
இருக்கவேண்டும்! கவனி..

கைங்கர்யம்!


ராதேக்ருஷ்ணா

சத்சங்கத்தில் யாரும் யாரையும்
வேலை வாங்கக்கூடாது!
குருவிற்கு மட்டுமே சிஷ்யர்களிடம்
வேலை வாங்கும் அதிகாரம் 
உள்ளது! அதற்குப் பெயர் 
கைங்கர்யம்!

கோபமே வேண்டாம்!


ராதேக்ருஷ்ணா

ஹே மனமே! 
அவமானப்படுத்துபவர்களும்
நன்றாக இருக்க பிரார்த்தனை
செய்! மனிதர்களின் புத்தி
அவ்வளவுதான்! யார் மீதும் 
கோபமே வேண்டாம்! 
நன்மை செய்!

நிதானம்...


ராதேக்ருஷ்ணா

ஒருத்தரை அவமானப்படுத்தும்
எண்ணம் வருகிறது என்றாலே
அது அஹம்பாவத்தின் வெளிப்பாடே!
பக்தர்களிடம் ஒரு நாளும்
கோபப்படவே கூடாது! நிதானம்...

அஹம்பாவத்தை அழி!


ராதேக்ருஷ்ணா

மனிதர்களின் அஹம்பாவம் சமயத்தில்
குருவிடம் கூட அபச்சாரம்
செய்யவைக்கும்! குருவிடம் 
கோபத்தில் கூட கத்தவைக்கும்!
அஹம்பாவம் அழிந்தால் நல்லது!

உன் மனம்!


ராதேக்ருஷ்ணா

உனக்கு ஒரு நாளும் 
வெளியில் விரோதி கிடையவே 
கிடையாது! உன் மனமே உனக்கு 
ஒரே விரோதி! உன் மனம்
சரியானால் உன்னுடைய
விரோதியும் உனக்கு உதவுவார்கள்!

நிம்மதியாய் வாழ்!


ராதேக்ருஷ்ணா

தைரியமாக இரு! உன்னை 
அழிப்பதற்கு உன்னைத் 
தவிர வெளியில் யாருமே
இல்லை! அதனால் நீ 
உன்னை அழிக்காமல் இருந்தால் 
போதும்! நிம்மதியாய் வாழ்!

நீ ஒழுங்காக வாழ்!


ராதேக்ருஷ்ணா

உலகம் எப்படி வேண்டுமானாலும்
இருக்கட்டும்! நீ உன்னைப்பொறுத்தவரை
ஒழுங்காக வாழ்! உலகம்
தவறான பாதையில் போனால்
போகட்டும்! நீ சரியாக 
மட்டுமே இரு!

ரசித்து அனுபவி!


ராதேக்ருஷ்ணா

உனது திறமைகளை நீ 
வளர்த்துக்கொண்டு உன் 
வாழ்க்கையை ரசித்து அனுபவி!
அதை விட்டு அடுத்தவர் 
வாழ்க்கையை நீ வாழ
ஆசைப்பட்டால் சுகமேது?

அனுபவிக்க கற்றுக்கொள்...


ராதேக்ருஷ்ணா

உனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை
நீ அடுத்தவரோடு போட்டி 
போடுவதனால் தான் இழக்கிறாய்!
உன் வாழ்க்கையை நீ அனுபவிக்கக்
கற்றுக்கொள்ளவேண்டும்! 
ரசி! கொண்டாடு!

போட்டி இல்லை!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையை ரசி! யாரோடும்
 உனக்கு போட்டி இல்லை! ஒரு
போட்டியும் இல்லாமல் வாழப்
பழகு! கொட்டிக்கிடக்கும் 
ஆனந்தத்தை அனுபவிக்காமல்
என்ன போட்டி?
 யோசி... யோசி...

Monday, June 13, 2011

பரமபதத்து எல்லை!


ராதேக்ருஷ்ணா

ஆழ்வார் திருநகரி பரமபதத்து
எல்லை! தாமிரபரணி வைகுந்தத்தில்
ஓடும் விரஜா நதி! சுவாமி 
நம்மாழ்வார் ஸ்வயம் ராமசந்த்ரமூர்த்தி!
மோக்ஷம்!

பாக்கியசாலிகள்


ராதேக்ருஷ்ணா

சுவாமி நம்மாழ்வாரின் ஆழ்வார்
திருநகரியில் வாழும் பக்த
ஜனங்களே உங்கள் திருவடிகளில்
நான் சரணாகதி செய்கிறேன்!
உலகில் பாக்கியசாலிகள் நீங்களே!

இன்று வைகாசி விசாகம்!


ராதேக்ருஷ்ணா

இன்று வைகாசி விசாகம்!
சுவாமி நம்மாழ்வாரின் 
திருநக்ஷத்திரம்! காரியார்,
உடையநங்கை பெற்றெடுத்த
தெய்வப் பிள்ளையே! உன்னை
சரணமடைந்தோம்! காப்பாற்று!

ஆத்ம பந்து...


ராதேக்ருஷ்ணா

குருவிடம் நம்பிக்கையும் 
மரியாதையும் வைத்தவர்கள்
ஒரு நாளும் வாழ்வில் 
வீணானதில்லை! குருவை தன்
ஆத்ம பந்துவாக கொள்பவர்கள்
உலகை வெல்வார்கள்! 

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP