Amudha Vedham
The Divine Krishna Tonic For The Soul !
Wednesday, October 31, 2012
மனதின் ஆரோக்கியம்!
ராதேக்ருஷ்ணா!
உன் மனதை நீ ஆரோக்கியமாக
வைத்திருப்பதே உனக்கு நல்லது!
உன் மனதின் ஆரோக்கியத்தை
பொருத்தே உனது வாழ்க்கையின்
ஆனந்தமும், உடலின் ஆரோக்கியமும்!
அமைதி கிடைக்கும்!
ராதேக்ருஷ்ணா!
உன் மனதை நீ சமாதானமாக
வைத்துக்கொண்டே ஆகவேண்டும்!
அதற்க்கு நீ விடாமல் நாம ஜபம்
செய்தே ஆகவேண்டும்! நிச்சயம்
அமைதி கிடைக்கும்! கலங்காதே!
சுகமாய் இரு!
ராதேக்ருஷ்ணா!
மனதுக்கும் உடலுக்கும் நிறைய
சம்மந்தம் உண்டு! நம் மனதின்
பயமும், கோபமும், கவலையும்
நம் உடல் நலத்தை நிச்சயம்
பாதிக்கும்! மனதே சுகமாய் இரு!
Tuesday, October 30, 2012
நாராயண நாமம்...
ராதேக்ருஷ்ணா!
திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்
" இந்த மனித உடம்பில் பிறந்து,
நிறைய தவறுகளை செய்து நான்
படாத பாடு பட்டேன்! நாராயண
நாமம் என்னை காத்தது!"
மோக்ஷம் உண்டு...
ராதேக்ருஷ்ணா!
திருப்பாணாழ்வார் சொல்கிறார்
" ஸ்ரீ ரங்க நாதன் இடையில்
கட்டி இருக்கும் அழகான
பீதாம்பரத்தை நினைதிருந்தாலே
நமக்கு நிச்சயம் மோக்ஷம் உண்டு"
Monday, October 29, 2012
யோசிப்பாய்!
ராதேக்ருஷ்ணா!
அஹம்பாவம் ஒரு நாளும்
நல்லது செய்யாது! விநயம்
ஒரு நாளும் கெடுதல் தராது!
சத் சங்கம் ஒரு நாளும் உனக்கு
கஷ்டம் தராது! தீர்கமாய் யோசிப்பாய்!
சத்சங்கத்தில் இருப்பாய்!
ராதேக்ருஷ்ணா!
பக்தி செய்வதால் உனக்கு
நஷ்டமில்லை! நாம் ஜபம்
சொல்வதில் ஒரு கஷ்டமுமில்லை!
குரு சொல்படி நடந்தால் ஒரு
தொல்லையுமில்லை! சத்சங்கத்தில் இருப்பாய்!
பக்தி செய்வாய்!
ராதேக்ருஷ்ணா!
கஷ்டம் வருவது தெய்வதினால்
அல்ல! பிரச்னை தருவது கடவுளின்
வேலையுமல்ல! நம்மை அழவைப்பதில்
தெய்வத்திற்கு ஆசையுமில்லை!
பக்தி செய்வாய்!
Sunday, October 28, 2012
தெளிவாகு!
ராதேக்ருஷ்ணா!
காவி கட்டுபவர் எல்லாம்
சன்யாசியுமல்ல! கோயிலுக்கு போகாதவர்
எல்லாம் நாஸ்தீகனுமல்ல! கண்களில்
அழுகை வருபவரெல்லாம் பக்தருமல்ல!
தெளிவாகு!
கெட்டவர் அல்ல...
ராதேக்ருஷ்ணா!
கோபப்படுபவர் எல்லாம் கெட்டவர்
அல்ல!
அமைதியாய் இருப்பவர் எல்லாம்
நல்லவரல்ல! திட்டுபவர் எல்லாம்
விரோதியுமல்ல!
கொஞ்சுபவர் எல்லாம் வேண்டியவருமல்ல!
தெரிந்து கொள்!
ராதேக்ருஷ்ணா!
அழுபவர் எல்லாம் கோழையுமல்ல!
சிரிப்பவர் எல்லாம் தைரியசாலியுமல்ல!
தோர்ப்பவர் எல்லாம் முட்டாளல்ல!
ஜெயிப்பவர் எல்லாம் புத்திசாலியல்ல!
தெரிந்து கொள்!
Saturday, October 27, 2012
வாயினால் பாடி...மனிதனால் சிந்திக்க...
ராதேக்ருஷ்ணா!
ஸ்ரீமதி ஆண்டாள் சொல்கிறார்
"க்ருஷ்ண நாமத்தை வாயினால்
சொல்லி, மனிதனால் அவனையே
நினைத்தால் பாவங்கள் எல்லாம்
தீயில் பஞ்சு போலே உடனே அழியும்"
என் அரங்கன்!
ராதேக்ருஷ்ணா!
ஸ்ரீ திருப்பாணாழ்வார் சொல்கிறார்"
அமுதனான ஸ்ரீ ரங்கத்தில் இருக்கும்
என் அரங்கனாதனைக் கண்ட கண்கள்
வேறு எதையும் ரசித்து அனுபவிக்காது"
சுகம்..
ராதேக்ருஷ்ணா!
குலசேகர ஆழ்வார் சொல்கிறார்
"ஹே மனமே ! ஸ்ரீ ஹரியின்
திருவடிகளை நினைப்பது போலே
சுகம் தரும் வேறு ஒரு விஷயம்
இந்த உலகில் எதுவுமில்லை!"
Friday, October 26, 2012
நல்ல ரிஷியே!
ராதேக்ருஷ்ணா!
மான் மீது ஆசை வைத்து
மானாக பிறந்து 3 ஜன்மா
கழிந்து மோக்ஷம் அடைந்தாலும்,
ஜட பரதர் நல்ல ரிஷியே! யாவரையும்
மதிக்க தெரிந்து கொள்!
க்ருஷ்ண பக்தை !
ராதேக்ருஷ்ணா!
5 கணவரோடு வாழ்ந்தாலும்
திரௌபதி பதிவிரதை தான்!
அவள் காமத்துக்காக 5 பேரை
கல்யாணாம் செய்யவில்லை! திரௌபதி
அற்புதமான க்ருஷ்ண பக்தை !
தவறாக நினைக்ககூடாது!
ராதேக்ருஷ்ணா!
கோபக்காரராக இருந்தாலும் துர்வாசர்
ரிஷி தான்! பெண்ணிடம் மயங்கினாலும்
விஸ்வாமித்திரர் பிரம்ம ரிஷி தான்!
நாம்
அவர்களை தவறாக நினைக்ககூடாது!
Thursday, October 25, 2012
விஜயம் உண்டாகட்டும்!
ராதேக்ருஷ்ணா!
இந்த விஜய தசமிக்கு எல்லோருக்கும்
விஜயம் உண்டாகட்டும்! மனதில்
நிரந்தரமான நம்பிக்கை வரட்டும்!
வென்று காட்டும் வைராக்கியம்
உடனே வந்து சேரட்டும்!
Wednesday, October 24, 2012
போற்றி போற்றி!
ராதேக்ருஷ்ணா!
இன்று பூததாழ்வாரின் திருநக்ஷத்திரம்!
ஐப்பசி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில்,
திருக்கடல் மலை திவ்ய தேசத்தில்
அவதரித்தார்! போற்றி போற்றி!
விஜய தசமி!
ராதேக்ருஷ்ணா!
இன்று விஜய தசமி!
நாம் நன்றாக வாழ்வில்
வெற்றி பெற நமக்கு
கிடைத்த பொன்னால் இது!
என்றும் குருவை மறவாமல்
இருந்து வாழ்வில் ஜெயித்து கட்டுவாய்!
Tuesday, October 23, 2012
வேட்டையாடுவாய்!
ராதேக்ருஷ்ணா!
ஹே பத்மநாபா! உனது அருளுக்காக
ஏங்கும் எங்களிடம் தேவை
இல்லாத
அசுர குணங்கள் பல கோடி
இருக்கிறது! அவற்றை எல்லாம்
இப்பொழுதே வேட்டையாடுவாய்!
காண கண் கோடி வேண்டும்!
ராதேக்ருஷ்ணா!
வில்லேந்தி பத்மநாபன் வரும்
அழகைக் காண கண் கோடி
வேண்டும்! உச்சி முதல் பாதம்
வரை இப்பொழுது பத்மனாபரை
தரிசிப்பவர் பாகவதர்களே...
வைகுந்தம் அடைவர்!
ராதேக்ருஷ்ணா!
வேட்டையாட நமது பத்மநாபன்
தயாராகிவிட்டான்! இன்று ஸ்ரீ
அனந்த பத்மானாபனின் வேட்டையை
திருவனந்தபுரத்தில் பார்ப்பவர்
வைகுந்தம் அடைவர்!
Monday, October 22, 2012
தோற்பதில்லை!
ராதேக்ருஷ்ணா!
பிரார்த்தனை செய்பவர் வீண்
போவதில்லை! பிரார்த்தனை ஒரு
நாளும் தோற்பதில்லை! பிரார்த்தனை
செய்பவருக்கு பலம் அதிகம் !
பிரார்த்தனை என்பது பக்தியே!
விசேஷ வரம்!
ராதேக்ருஷ்ணா!
பிரார்த்தனை என்பது க்ருஷ்ணன்
உனக்கென விசேஷமாக கொடுத்த
வரம்! அந்த வரத்தைக் கொண்டு நீ
உலகில் எதை வேண்டுமானாலும்
அடையமுடியும்!
பிரார்த்தனை செய்!
ராதேக்ருஷ்ணா!
உனக்கு வேண்டியதை எல்லாம்
தருவதற்கு க்ருஷ்ணன் இருக்க,
நீ ஏன் மனிதரிடம் போய்
கெஞ்சுகிறாய்?
நிம்மதியாய், நிதானமாய்
க்ருஷ்ணனிடம்
பிரார்த்தனை செய்!
Sunday, October 21, 2012
கர்மாவுக்கு தகுந்தபடி...
ராதேக்ருஷ்ணா!
கர்மாவுக்கு தகுந்தபடி தான்
நம் வாழ்க்கை! நம் கர்மாவுக்கு
தகுந்தபடி தான் நம் உடலின் பலம்!
கர்மாவுக்கு தகுந்த படி தான்
நம் ஆனந்தமும்!
கர்மாவை கவனி!
ராதேக்ருஷ்ணா!
உனது உடல் மாறும்! ஆத்மா
மாறாது! கர்மாவுக்கு தகுந்தபடி
நிச்சயம் நமக்கு சரீரம் உண்டு!
உன் கர்மாவை கவனி!
க்ருஷ்ணனுக்கு பிடித்ததை செய்!
வைகுண்டைத்தை அடைவாய்!
ராதேக்ருஷ்ணா!
உன் கர்மாவுக்கு தகுந்த
படி
உனது சரீரம்
கிடைத்துள்ளது!
இந்த சரீரத்தைக் கொண்டு
நல்ல
காரியத்தை செய்து
க்ருஷ்ணனின் வைகுண்டைத்தை அடைவாய்!
Saturday, October 20, 2012
மனதில் பலம்...
ராதேக்ருஷ்ணா!
உன் மனதில் பலத்தை பற்றிய
சிந்தனை வந்தாலே, உன்
பலவீனமேல்லாம் நிச்சயம் மாறும்!
பலம் உன் மனதில் வரவேண்டும்!
பின் உடலிலும் வாழ்விலும் வரும்!
பலம் பெறுவாய்!
ராதேக்ருஷ்ணா!
வியாதியை பற்றி யோசிப்பதை
விட ஆரோக்கியத்தை பற்றி
யோசிப்பதே மிகவும் நல்லது!
உன் ஆரோக்கியத்தில் உனது
சிந்தனையை வெய்! நிச்சயம்
பலம் பெறுவாய்!
வளம் பெரும்!
ராதேக்ருஷ்ணா!
நாம் நமக்கு கிடைக்கும்
பொழுதிலெல்லாம், நல்ல
விஷயங்களாக
யோசிக்க ஆரம்பித்தால், நம் உடலும்,
நம் மனமும், நம் வாழ்வும் வளம்
பெரும்! இது சத்தியம்!
Friday, October 19, 2012
உனது சொத்து!
ராதேக்ருஷ்ணா!
உன் வாழ்க்கை என்பது உனது
சொத்து! எந்த நாளும் அதை
நீ வீனடிக்கவே கூடாது!
இழந்தால்
கிடைக்காத சொத்து
உனது
வாழ்வே! இதை நினைவில் கொள்!
க்ருஷ்ணன் தந்ததே!
ராதேக்ருஷ்ணா!
உன் வாழ்க்கையை பற்றி உன்னை
விட க்ருஷ்ணனுக்கு அக்கறை அதிகம்!
உனக்கு கிடைக்கிற எல்லாமே
க்ருஷ்ணன்
உனக்கு விசேஷமாக
தந்ததே!
வாழ்வை அனுபவிப்பாய்!
உபயோகப்படுத்து!
ராதேக்ருஷ்ணா!
நமக்கு பிடித்த மாதிரி
வாழ்க்கை
அமையவில்லை என்றால்
, அதில்
ஏதோ நன்மை இருக்கிறது என்று
புரிந்து கொள்! கிடைத்த வாழ்வை
நன்றாய் உபயோகப்படுத்து!
Thursday, October 18, 2012
உணரமுடியும்!
ராதேக்ருஷ்ணா!
குழந்தையும் தெய்வமும் ஒன்று!
நீ குழந்தையானால், நிச்சயம்
உன் வாழ்வில், வார்த்தையில்,
செயலில் நீ தெய்வத்தின்
தன்மையை நன்றாக உணரமுடியும்!
அனுபவிக்கமுடியும்!
ராதேக்ருஷ்ணா!
நீ குழந்தையாய் இருக்கும் வரை,
உன்னுடைய க்ருஷ்ணனை நீ வித
விதமாக அனுபவிக்கமுடியும்! உனது
அஹம்பாவம் தான் உன்னை
க்ருஷ்ணனிடமிருந்து விலக்கும்!
குழந்தையாய் வாழலாம்!
ராதேக்ருஷ்ணா!
நீ குழந்தையாய் மாறிவிட்டால்,
உலகமே உனக்கு கோயில்! நீ
அஹம்பாவியாக இருந்தால், உலகமே
உனக்கு நரகம்! நீ பக்தி செய்தால்
குழந்தையாய் வாழலாம்!
Wednesday, October 17, 2012
வா போவோம்!
ராதேக்ருஷ்ணா!
இப்பொழுது ஸ்ரீ பத்மநாபர்,
நரசிம்மரோடும், க்ருஷ்ணனோடும்
உற்சவத்திற்கு தயாராகி விட்டார்!
பக்தர்கள் பகவானுக்காக காத்திருக்கிறார்கள்!
வா போவோம்!
நவ வித பக்தி!
ராதேக்ருஷ்ணா!
இந்த நவராத்திரியில் ப்ரஹ்லாதன்
சொன்ன ஸ்ரவணம், கீர்த்தனம்,
ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம்,
வந்தனம், தாஸ்யம், சக்யம், ஆத்ம
நிவேதனம் ஆகியவை செய்வோம்!
நவராத்திரி ஆரம்பம்...
ராதேக்ருஷ்ணா!
நவராத்திரி ஆரம்பம்...ஒவ்வொரு
நாளும் நம் வீட்டில் தெய்வ
லீலை
வித விதமாய் நடக்கட்டும்! நமது
இதயத்தில் ஜகன் மாதாவின்
அருள் நிறையட்டும்!
Monday, October 15, 2012
உனக்கு நஷ்டம்!
ராதேக்ருஷ்ணா!
குரு ஒவ்வொருவருக்கும் அனுக்ரஹம்
மட்டுமே செய்கிறார்! உனக்கு
கிடைக்கும்
அனுக்ரஹம்
நிச்சயம்
மற்றவருக்கு இல்லை! உன் குருவை
நீ உணராவிட்டால் உனக்கு நஷ்டம்!
அற்புதமான க்ருபை...
ராதேக்ருஷ்ணா!
மற்ற சிஷ்யருக்கு குரு செய்யும்
அனுக்ரஹம் மட்டுமே உனக்கு
தெரிகிறது! குரு உனக்கு செய்யும்
அற்புதமான
க்
ருபையை நீ ஒரு
நாளும் கவனிப்பதே இல்லை!
சிஷ்யராக இல்லை!
ராதேக்ருஷ்ணா!
உன் குரு உன்னை விட
மற்றவருக்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்கிறார் என்கிற புத்தி
உனக்கு இருந்தால், இன்னும்
நீ உன் குருவிற்கு சிஷ்யராக
இல்லை என்று அர்த்தம்!
Sunday, October 14, 2012
நீயாச்சு நானாச்சு...
ராதேக்ருஷ்ணா!
வைகுண்டபதி...இன்று திருமந்திர
நகருக்கு என்னால் வர முடியவில்லை!
ஆனால் நிச்சயம் நீ என்னோடு
இங்கே
இருக்கிறாய்! நீயாச்சு நானாச்சு பார்க்கலாம்!
ஏன் ஒதுக்கி வைத்தாய்?
ராதேக்ருஷ்ணா!
ஹே...வைகுண்டபதி...என்னை
மட்டும் ஏன் இங்கே ஒதுக்கி
வைத்தாய்? நான் உன்னுடைய
5 கருட சேவைக்கு வராமல்
இங்கே
இருக்கிறேனே? நான் உன்
பக்தனல்லவா? சொல்...
5 கருட சேவை!
ராதேக்ருஷ்ணா!
இதோ தூத்துக்குடியில் நம்
வைகுண்டபதி பெருமாள்,5
கருட சேவைக்கு தயாராகிறார்!
பக்தர்கள் எல்லோரும் வைகுண்டபதியோடு
ஊர்வலம் செல்ல காத்திருக்கிறார்!
Saturday, October 13, 2012
க்ருஷ்ணனிடம் திருப்பு!
ராதேக்ருஷ்ணா!
நாம் நம் மனதை வியாதியிடமிருந்து
திருப்பிக்கொண்டே இருக்கவேண்டும்!
அப்பொழுதுதான் நம் வியாதிகள்
சீக்கிரம் சரியாகும்!
மனதை
க்ருஷ்ணனிடம் திருப்பு!
Thursday, October 11, 2012
உயர்ந்து காட்டுவாய்!
ராதேக்ருஷ்ணா!
உன்னை ஒதுக்கினவர் முன்
நீ ஜெயிக்கவேண்டும்! உன்
புலம்பலைப் பற்றி யாருக்கும்
கவலை இல்லை! ஒதுக்கினவர்
உன்னை நெருங்கி வரும்படி
நீ உயர்ந்து காட்டுவாய்!
யோசி!
ராதேக்ருஷ்ணா!
நாம் மற்றவரை ஒதுக்கும்போது
நாம் பலமானவராய் உணர்கிறோம்!
அதுவே மற்றவர் நம்மை ஒதுக்கும்போது
பலவீனமாய் உணர்கிறோம்! ஏன்
என்று கண்டுபிடி ? யோசி!
Wednesday, October 10, 2012
ஜெயிப்பாய்!
ராதேக்ருஷ்ணா!
மனதை எப்போதும் சந்தோஷமாக
வைத்திருப்பாய்! வாழ்வில் கஷ்டங்கள்,
வியாதிகள், பிரச்சனைகள் எல்லாம்
வரும்! ஆனால் சந்தோஷமாய்
இருந்தால் நீ ஜெயிப்பாய்!
விசித்திரமான வஸ்து!
ராதேக்ருஷ்ணா!
மனது ஒரு விசித்திரமான வஸ்து!
அதற்க்கு பிடிக்கிற ஒன்றை அது
நினைக்கும்போது பெரிய கஷ்டங்களையும்,
வியாதிகளையும் கூட அது மறந்துவிடும்!
வியாதி சரியாகும்!
ராதேக்ருஷ்ணா!
வியாதி இருக்கும்போது மனதை
மற்ற விஷயங்களில் திருப்பு!
அப்பொழுது வியாதியின் படுத்தல்
உனக்கு குறைவாய் தெரியும்!
சீக்கிரம் வியாதி சரியாகும்!
மனதை மாற்றவேண்டும்!
ராதேக்ருஷ்ணா!
உடலில் வியாதி வரும்போது
நமக்கு தெரியாமலேயே மனது
நம் உடலின் தொந்தரவை
நினைக்கும்!
அந்த சமயத்தில் நாம்
மனதை மாற்றவேண்டும்!
Tuesday, October 9, 2012
கடவுளாய் தெரிவர்!
ராதேக்ருஷ்ணா!
வலி நம்மை எளியவரிடம்
கூட பணிவாக பழக
வைக்கிறது!
உடலில் வலி இருக்கும்போது
நமக்கு உதவுபவர் வேலைக்காரரை
இருப்பினும் கடவுளாய் தெரிவர்!
வலி!
ராதேக்ருஷ்ணா!
வலியே நீ ஒழிக! வலிக்கு
சமமான விரோதி உலகில்
வேறு யாருமே இல்லை! வலி
தான் எனக்கு தெரிந்து ஒரு
மனிதனின் அஹம்பாவதை
சரியாய் அடக்குகிறது!
‹
›
Home
View web version