Tuesday, July 17, 2012

குழந்தையாக பழகுகிறார்!


ராதேக்ருஷ்ணா!

குரு என்றுமே குழந்தையாகத் தான் 
நம்மிடம் பழகுகிறார்! ஆனால் நாம் 
தான் பல சமயத்தில் பெரிய மனிதர் 
என்று நம்மை நினைத்துக்கொள்கிறோம்...

Monday, July 16, 2012

அன்பாக இருப்பாய்!

ராதேக்ருஷ்ணா!

குரு உனக்கு நல்ல தூக்கம்
தருகிறார்! குரு உனக்கு நல்ல
தைரியம் தருகிறார்! குரு உனக்கு நல்ல நிம்மதி தருகிறார்! நீ குருவிடம் அன்பாக இருப்பாய்!

ஜெயித்தே தீருவாய்...

ராதேக்ருஷ்ணா!
 
குரு ஒரு நாளும் உன்னை
நஷ்டப்பட விடமாட்டார்! உன்
குரு தான் நஷ்டப்பட்டாலும்,
உன்னை நஷ்டம் அடையவே
விடமாட்டார்! நீ வாழ்வில்
ஜெயித்தே தீருவாய்...

நீ நஷ்டப்படமாட்டாய்!

ராதேக்ருஷ்ணா!
 
குருவால் நஷ்டப்பட்டவர் எவருமில்லை! குருவால் லாபம் அடைந்தவர் மட்டுமே
இந்த உலகில் என்றும் உண்டு! உன் குரு உனக்கு லாபம் மட்டுமே! நீ நஷ்டப்படமாட்டாய்!

Saturday, July 14, 2012

குருவை நம்பு!


ராதேக்ருஷ்ணா!

குரு என்பவர் நல்ல மனிதர்!
அன்பின் உருவம்! குரு என்பவர் 
உனக்கு ஒரு நல்ல வழிகாட்டி!
குரு என்பவர் உன் குடும்பத்திற்கு 
ஒரு நல்ல காவலன்! குருவை நம்பு!

குரு சொல்படி கேள்!


ராதேக்ருஷ்ணா!

குரு என்பவர் தானும் கடவுளை 
அனுபவித்துக்கொண்டு, உன்னையும் 
கடவுளை அழகாக அனுபவிக்க 
சொல்லிக்கொடுப்பவர்! அதனால் 
நீ அவர் சொல்படி கேட்பது நல்லதே!!


ராதேக்ருஷ்ணா!

குருவை நீ கொண்டாடவேண்டும் என்று 
சத்தியமாக குரு எதிர்பார்க்கவே இல்லை!
குரு நீ கடவுளையும், நாம ஜபத்தையும்,
வாழ்க்கையையும் கொண்டாடவே 
விரும்புகிறார்!

Friday, July 13, 2012

சத்சங்கத்தை மதிப்பாய்!

ராதேக்ருஷ்ணா!
 
சத்சங்கம் என்பது ஒருவருக்கு
ஒருவர் வம்பு பேசுவதற்காக அல்ல! எல்லோரும் க்ருஷ்ணனின் குடும்பம்
என்கிற புத்தி வரவே சத்சங்கம்!
சத்சங்கத்தை மதிப்பாய்!

விசேஷ அனுக்ரஹம்...

ராதேக்ருஷ்ணா!
 
குரு மற்றவருக்கு விசேஷ
அனுக்ரஹம்  செய்கிறாரோ
என்று வம்பு பேசுபவர் பலர்
உண்டு! உனக்கு கிடைக்கும்
அனுக்ரஹத்தை வாங்கிக்கொண்டு
நீ பக்தி செய்தால் நல்லது!!

குரு அறிவார்!

ராதேக்ருஷ்ணா!

பலர் குருவிடம் சத்தியமாய்
நடந்து கொள்வது போல்
பேசுவார்கள்! பக்தியில்
மிகுந்த ஆசை உடையவர்
போலே நடப்பார்! ஆனால்
யாருக்கு நஷ்டம்? குரு அறிவார்!

Thursday, July 12, 2012

இது சத்தியம்!

ராதேக்ருஷ்ணா!
 
குருவினால் என்றும் எல்லோருக்கும் க்ருஷ்ணனிடம் சுகம், பக்தி, ஞானம்,வைராக்கியம், ஆயுள், குடும்பத்தில் நிம்மதி, ஆரோக்கியம் இதையே
பிரார்த்திக்கிறார்! 
இது சத்தியம்!

நல்லது மட்டுமே ...

ராதேக்ருஷ்ணா!

குரு நிச்சயம் எல்லோருக்கும்
நல்லது மட்டுமே செய்கிறார்!
குருவை நாம் வெறுத்தாலும்,
தூற்றினாலும் குரு சத்தியம்
நமக்கு நல்லது மட்டுமே
பிரார்த்திப்பார்...

Wednesday, July 11, 2012

ரிஷிகளே!


ராதேக்ருஷ்ணா!

பூரி ஜகந்நாதர் கோயிலில் நிறைய 
குரங்குகள், சிட்டுக்குருவிகள், புறாக்கள் 
வசிக்கின்றன! நிச்சயம் அவை எல்லாம் ரிஷிகளே!
 நான் அப்படி பிறக்க வேண்டுமே ஜகன்!

பக்தியுடையவர்கள்!


ராதேக்ருஷ்ணா!

ஒரிசா ஜனங்கள் நல்ல பக்தியுடையவர்கள்!
எல்லோரிடமும் மரியாதையுடன் பழகுகிறார்கள்!
ஜகன்னாதனிடம் அவர்களுக்கு  உள்ள பக்தி 
மிகவும் அற்புதமானது...

பார்த்தசாரதியை பார்க்கவேண்டும்!


ராதேக்ருஷ்ணா!


ஜெயதேவரின் ப்ரிய பூரி ஜகந்நாதனை
 நன்றாக அனுபவித்துவிட்டு பார்த்தசாரதியின் 
சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறேன்! 
சீக்கிரம் பார்த்தசாரதியை பார்க்கவேண்டும்!

Monday, July 2, 2012

கனவில் வந்தார்கள்!


ராதேக்ருஷ்ணா!

மகாத்மாக்களை தரிசித்தால் நிச்சயம் 
அவர்கள் உன்னுடைய கனவிலும் 
உனக்கு காட்சி தருவார்கள்! நேற்று 
நான் கண்ட மகாத்மாக்கள் 
கனவிலும் வந்தார்கள்!

Wednesday, June 13, 2012

நீ சுகமாய் இருப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

பத்மநாபா...நீ நன்றாய் இரு!
நிம்மதியாய் தூங்கு! வேளா 
வேளைக்கு சமத்தாக சாப்பிடு!
உன் சொத்தை ஆதிசேஷன் 
பார்த்துக்கொள்வார்! நீ 
சுகமாய் இருப்பாய்!

என் பத்மநாபன் உண்டு!


ராதேக்ருஷ்ணா!

ஆகாயத்தில் நான் பறந்தாலும் என் 
பத்மநாபன் என்னோடு உண்டு! பூமியில் 
நான் நடந்தாலும் என் பத்மநாபன் 
என்னோடு உண்டு! கடலில் நான் 
மூழ்கினாலும் அவன் உண்டு!

Saturday, June 9, 2012

தாமரை மாலையில் நரசிம்மர்...


ராதேக்ருஷ்ணா!

இன்றும் ஸ்ரீ பத்மநாபரின் கோயிலில்,
நரசிம்மரின் கோபத்தை தணிக்க 
அவர் சந்நிதியின் முன் ராமாயணம் 
வாசிக்கிறார்கள்! இன்று தாமரை 
மாலையில் நரசிம்மர் ஜோர்!

வீர கர்ஜனை!


ராதேக்ருஷ்ணா!

பல சமயத்தில் பத்மநாப சுவாமி 
கோயிலில் ராத்திரியில் சிங்கத்தின் 
கர்ஜனையை காவல் காரர்கள் 
கேட்டிருக்கிறார்கள்! நரசிம்மரின் 
வீர கர்ஜனை அது!

சக்தி வாய்ந்த நரசிம்ஹர்!


ராதேக்ருஷ்ணா!

திருவனந்தபுரம் கோயிலில் உள்ள 
நரசிம்ஹ மூர்த்தி மிகவும் சக்தி 
வாய்ந்தவர்! மகாராஜா சுவாதி 
திருநாளுக்கு தீர்த்தத்தில் தந்த 
விஷத்தை மாற்றினார்!

Thursday, May 31, 2012

க்ருஷ்ண ப்ரசாதம்!

ராதேக்ருஷ்ணா!

ஒவ்வொரு நாளும் க்ருஷ்ண ப்ரசாதம்!
ஒவ்வொரு ப்ரசாதமும் வித விதமாக 
இருக்கிறது! ஆனால் எல்லா ப்ரசாதமும் 
உனக்கு நல்லதையே செய்கிறது....அனுபவி!

Friday, May 18, 2012

கருணைக் கடல் அன்னை!


ராதேக்ருஷ்ணா!

அலர்மேல் மங்கை தாயாரைப் போல் 
சுலபமாக தரிசனம் தர இவ்வுலகில் 
வேறு யார் தான் உண்டு? தன்
 குழந்தைகளின் மேல் தாயாரின் 
கருணை சொல்லவே முடியாது!

திருமலைக்கு சொந்தக்காரர்!


ராதேக்ருஷ்ணா!

திருமலைக்கு சொந்தக்காரரான வராஹரின் 
அற்புத நிதானமும், விசேஷ மகிமையும் 
என்னை மோஹிக்க செய்கிறது! எத்தனை 
அமைதியான திருமுக மண்டலம்...

விசேஷ அனுபவம்!

ராதேக்ருஷ்ணா!

திருமலையில் ஸ்ரீநிவாசரை தரிசிப்பதே 
ஒரு விசேஷ அனுபவம்! அவர் 
எப்போது தரிசனம் தருவார் 
என்பது அவருக்கு மட்டுமே 
தெரிந்த ரஹசியம்...சுகம்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP