Monday, April 30, 2012

நிம்மதி...

ராதேக்ருஷ்ணா!

அடுத்தவரின் சொத்து நமக்கு
 ஒரு நாளும் வேண்டவே
வேண்டாம்! நமக்கு கிடைப்பதைக் கொண்டு 
நாம் வாழ்ந்தால்
மட்டுமே நாம் இங்கே
நிம்மதியாக இருக்க முடியும்!

Thursday, April 26, 2012

ஸ்ரீரங்கநாயகி...


ராதேக்ருஷ்ணா!

ஸ்ரீரங்கநாயகி...உன்னை நம்பியே 
அடியேன் இந்த ஏமாற்று 
மனிதருக்கு நடுவில் காலத்தை 
கழிக்கின்றேன்! எல்லோரும் நலமாய்
இருக்க உன் திருவடியில் விழுகின்றேன்!

ராஜாதி ராஜன்!


ராதேக்ருஷ்ணா!

ஸ்ரீரங்கநாதா...நிஜமாகவே நீர் 
ராஜாதி ராஜன்தான்! உம்முடைய 
திருவடி நிழலில் எனக்கு ஒரு இடம் 
தா! உனது கருணை மட்டுமே 
எனக்கு சமாதானம்!

ராமானுஜா...


ராதேக்ருஷ்ணா!


ராமானுஜா...நீர் மிகவும் பெரியவர்!
அதனால் தான் இன்று உமது 
தானான திருமேனி தரிசனத்தை 
அடியேனுக்கு ஸ்ரீரங்கத்தில் 
அற்புதமாக தந்தீர்...

Thursday, April 19, 2012

நீயே காப்பாற்று!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணா...இந்த வாழ்வில் 
எல்லோரும் நன்றாய் இருக்க 
ஓடிக்கொண்டிருக்கிறேன்! மனைவி 
குழந்தை குடும்பம் சத்சங்கம் 
சிஷ்யர்கள் எல்லோரையும் 
நீயே காப்பாற்று!

உழன்றுகொண்டிருக்கிறேன்!


ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணா நான் இந்த உலகில் 
வந்த காரணம் உன்னை 
அனுபவிக்கவே! ஆனால் நான் 
உன்னை அனுபவிக்காமல் சம்சார 
சாகரத்தில் உழன்றுகொண்டிருக்கிறேன்! 
காப்பாய்...

க்ருஷ்ணா...காப்பாற்று!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணா...நான் உன்னை மட்டுமே 
நம்பி இருக்கிறேன்! இந்த சந்தேக 
மனிதர்களுக்கு நடுவில் நான் படும் 
பாடு உனக்கு நன்றாய் தெரியும்!
என்னை உடனே காப்பாற்று!

Friday, April 6, 2012


ராதேக்ருஷ்ணா!

இன்று இரவு 8 மணிக்கு 
ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி 
வேட்டையாட வருகிறார்! பக்த 
ஜனங்கள் எல்லோரும் கட்டாயம் 
வரவேண்டும்! இது 
கோபாலவள்ளியின் உத்தரவு!

ஸ்ரீ பத்மநாபரின் வேட்டை!


ராதேக்ருஷ்ணா!

பத்மநாபனுடைய திருவடி நிழலில் 
சௌக்கியமாக இருக்கிறேன்! 
எனக்கு என்ன குறை? வாழ்வில் 
பத்மநாபன் மட்டுமே எனக்கு கதி! 
இன்று ஸ்ரீ பத்மநாபரின் வேட்டை!

Friday, March 30, 2012

அவமானப்படுவர்!


ராதேக்ருஷ்ணா

அடுத்தவரை அவமானப்படுத்துபவர் ஒரு நாள் 
நிச்சயம் இந்த உலகத்தில் பலரிடம் இருந்து 
அவமானப்படுவர்! என்ன கொடுக்கிறோமோ 
அதுவே நமக்கு கிடைக்கும்!

தர்மம் வெல்லும்!


ராதேக்ருஷ்ணா

சிலருக்கு அடுத்தவரை கஷ்டப்படுத்துவதில் 
அலாதி இன்பம்! ஆனால் அது 
அவர்களையே படுத்தும் என்பது 
பின்னாளில் நிச்சயமாகப் புரியும்!
தர்மம் வெல்லும்!


ராக்ஷசரின் செய்கைகள்!


ராதேக்ருஷ்ணா

அடுத்தவரை மனிதராக மதிக்காதவர்கள் 
நிச்சயம் வாழ்வில் படாத பாடு படுவர்!
மனிதரை இம்சிப்பதும் அவமதிப்பதும் 
ராக்ஷசரின் செய்கைகள்!

Friday, March 23, 2012

கோடி நமஸ்காரம்!

ராதேக்ருஷ்ணா!

த்யாகராஜரின் தெலுங்கு
கீர்த்தனைகள் கேட்டாலே
மனது உருகும்! ராமனை
தனது மொழியில் எத்தனை
அழகாக அனுபவித்து இருக்கிறார்!
கோடி நமஸ்காரம்!

ராதேக்ருஷ்ணா!

இன்று உகாதி! தெலுங்கு
மற்றும் கன்னடம் பேசும்
மக்களுக்கு புத்தாண்டு! பல
பக்தர்கள் இந்த 2 மொழிகளிலும்
நிறைய பக்திப்பாடல்கள்
பாடி இருக்கிறார்கள்...

அடுத்தவரை தாழ்வாக நினைக்காதே!

ராதேக்ருஷ்ணா!

எப்பொழுதும் அடுத்தவரை தாழ்வாக நினைப்பவர்கள் நிச்சயம் தான் இறுதி காலத்தில் அடுத்தவரின்
தயவோடு மட்டுமே வாழ
வேண்டிய நிலை வரும்!

சுயநலத்தின் வெளிப்பாடு!

ராதேக்ருஷ்ணா!

தன்னை மட்டுமே எல்லோரும்
கொண்டாடவேண்டும் என்று
நினைப்பவர்கள் எப்பொழுதும்
அடுத்தவருக்கு துக்கத்தை
மட்டுமே தருகிறார்கள்!
சுயநலத்தின் வெளிப்பாடு!

புரிந்துகொள்வதே இல்லை!

ராதேக்ருஷ்ணா!

சிலருக்கு அடுத்தவர் மனதை
நோகடிப்பதில் எப்பொழுதும்
பரம ஆனந்தம்! அனால்
அந்த புத்தி தன்னையே
பாதிக்கும் என்பதை பலர்
புரிந்துகொள்வதே இல்லை!

Sunday, March 18, 2012

காத்திருக்கிறோம் தாயாருக்காக!


ராதேக்ருஷ்ணா!

இப்பொழுது திருச்சாநூரை 
நெருங்குகிறோம்! தாயாரின் 
தரிசனம் கிடைக்குமா இல்லையா 
என்று தாயாருக்கு மட்டுமே தெரியும்! 
காத்திருக்கிறோம் தாயாருக்காக!

ஸ்ரீநிவாசனின் திருவிளையாடல்...


ராதேக்ருஷ்ணா!

ஸ்ரீநிவாசனின் திருவிளையாடல் 
ஆரம்பமாகிவிட்டது! எங்களை 
திருமழிசையில் மத்ய 
ஜகந்நாதரையும், திருமழிசை 
ஆழ்வாரையும் தரிசிக்க வைத்தான்!

Thursday, March 15, 2012

தயவு செய்!


ராதேக்ருஷ்ணா!

குழந்தையாய் நான் இருக்க 
க்ருஷ்ணா நீ அருள் செய்!
குழந்தையாய் நான் இருந்தால் 
உலகில் உள்ள அனைவருக்கும் 
என்னால் சந்தோஷம் மட்டுமே 
கிடைக்கும்! தயவு செய்!

உத்திரமேரூர்!


ராதேக்ருஷ்ணா!

நேற்று உத்திரமேரூரில் பஞ்ச 
வரதராஜரை அனுபவித்தோம்!
பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் 
5 மூர்த்திகளை ஸ்தாபித்து 
உபாசனை செய்த இடம் 
உத்திரமேரூர்!

ராஜ அலங்காரத்தில் பாண்டுரங்கன்!!


ராதேக்ருஷ்ணா!

நேற்று ஸ்ரீ ஹரிதாஸ் கிரி 
குருஜி அவர்கள் பிறந்த 
ஊரான தென்னாங்கூர் 
சென்று, ராஜ அலங்காரத்தில் 
பாண்டுரங்கனை அழகாக 
தரிசித்தோம்! ஆஹா...ஆஹா...

Monday, March 12, 2012

இது சத்தியம்...


ராதேக்ருஷ்ணா!

நிச்சயம் தர்மம் வெல்லும்!
யாரும் அதர்மத்தைக் கண்டு 
பயப்படவேண்டாம்! மதம் 
மாற்றும் கொடுமை சீக்கிரத்தில் 
இல்லாமல் போகும்! இது 
சத்தியம்... வெல்வோம்...

சூழ்நிலை கைதிகள்!

ராதேக்ருஷ்ணா

நாம் நல்லது செய்ய நினைத்தாலும் 
சில சமயங்களில் நாம் சூழ்நிலை 
கைதிகளாகிறோம்! அப்பொழுது 
தெய்வம் மட்டுமே நாம் செய்யவேண்டிய 
நல்லதை செய்யமுடியும்!

பிரார்த்தனை...


ராதேக்ருஷ்ணா

பல சந்தர்ப்பங்களில் பல நிகழ்சிகளில் 
நாம் கையாலாகாதவராகவே 
இருக்கவேண்டியுள்ளது! அந்த 
சமயத்தில் நாம் பிரார்த்தனை 
தான் செய்யமுடியும்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP