Saturday, May 28, 2011

நன்றாக அனுபவி!


ராதேக்ருஷ்ணா

உன் க்ருஷ்ணனை எப்படி 
வேண்டுமானாலும் அனுபவிக்க
உனக்கு அதிகாரம் உண்டு! அதை
 தடுத்து நிறுத்தும் அதிகாரம் 
யாருக்கும் ஒரு நாளும் 
இல்லை! நன்றாக அனுபவி!

செல்லக் குழந்தை...


ராதேக்ருஷ்ணா

நீ என்றுமே உன் க்ருஷ்ணனுக்கு
குழந்தைதான்! உன் உடலுக்கு 
எத்தனை வயசானாலும் நீ
என்றுமே உன் க்ருஷ்ணனுக்கு 
செல்லக் குழந்தைதான்!
உன்னை தள்ளமாட்டான்!

நீ க்ருஷ்ண குழந்தை...


ராதேக்ருஷ்ணா

குழந்தை போல் குதூகலமாய்
இரு! உன்னுடைய எல்லா வெற்றி 
தோல்விகளையும் மறந்துவிட்டு நீ
க்ருஷ்ண குழந்தை என்ற நினைவுடன்
வாழ்ந்தால் சுகம் உண்டு! 

Thursday, May 26, 2011

பெரிய சொத்து...


ராதேக்ருஷ்ணா

மனம் என்பது உலகில் எங்கும்
வாங்க முடியாத பொருள்!
அதை யாரும் உனக்கு
கடனாக தர முடியாது!
உன்னிடம் இருக்கும் பெரிய 
சொத்தே உன் மனம் மட்டும் தான்!

ஒழுங்காக வைத்துக்கொள்!


ராதேக்ருஷ்ணா

மனதைக்கொண்டு தான் பக்தி
செய்ய முடியும்! அந்த மனதை நீ 
ஒழுங்காக வைத்துக்கொள்ளாவிட்டால்
நீ என்ன சுகத்தை அனுபவிப்பாய்? 
உன் மனம்! உன் ஆனந்தம்!

க்ருஷ்ணனுக்கு பிடித்தது!


ராதேக்ருஷ்ணா

உன் மனம் க்ருஷ்ணனுக்கு மிகவும்
பிடித்த ஒன்று! எந்தக் காரணத்தைக்
கொண்டும் அதை யாருக்கும் 
கொடுத்துவிடாதே! கொடுத்தால் 
உனக்கு தான் கஷ்டம்! சரியா?

தெளிவான மனம்!


ராதேக்ருஷ்ணா

மனதை தெளிவாக வைத்துக்கொள்ளவே
பக்தி! உன் மனதை நீயே
குழப்பிக்கொண்டால் வேறு
யார் தான் உனக்கு உதவிசெய்ய
முடியும்! விடாமல் நாமஜபம் செய்!

புரிந்து நட!


ராதேக்ருஷ்ணா

உன் மனதை நீ சரியாக புரிந்து 
கொண்டு உபயோகப்படுத்தினால் 
நிச்சயம் நீ உலகையே வசம்
செய்யமுடியும்! உன் மனதுதான்
உன் பலம்! புரிந்து நட!

மனதின் பலம்!


ராதேக்ருஷ்ணா

மனதைக்கொண்டு உலகில் பல 
ஆயிரம் காரியங்கள் செய்யமுடியும்!
மனதிற்கு பலம் அதிகம்! அது
நினைத்ததை சாதித்தே தீரும்!
அதனால் நல்லதை நினை!

Tuesday, May 24, 2011

மன்மதனாக நிற்கிறான்!


ராதேக்ருஷ்ணா

இதோ க்ருஷ்ணன் தயாராக
இருக்கிறான்! சகல ஆபரணங்களோடு 
கதம்ப மரத்தின் கீழே
புல்லாங்குழலோடு நிற்கின்றான்!
ஆஹா மன்மதனாக நிற்கிறான்!

பிருந்தாவன சஞ்சாரம்...


ராதேக்ருஷ்ணா

ராதிகா ராணியின் கையைப்
பிடித்துக்கொண்டு குட்டிக் 
குழந்தையாக பிருந்தாவனத்தில்
சஞ்சாரம் செய்வோம்! நம்முடைய
அஹம்பாவத்தை அழிப்போம்!
வா...வா...வா..

ராசக்ரீடை!!


ராதேக்ருஷ்ணா

இப்பொழுது நாங்கள் ராசக்ரீடை 
வாசிக்கப்போகிறோம்! க்ருஷ்ணனோடு
கோபிகள் போலே நாமும் ஆடிப்பாடி
மகிழ்வோம்! சீக்கிரம் தயாராகு! 
இதோ க்ருஷ்ணன் வந்துவிட்டான்!

வீண் போவதில்லை!


ராதேக்ருஷ்ணா

பெற்ற தாயைக் காட்டிலும்
பாகவதம் நிறைய நல்ல 
விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறது!
பாகவதத்தை நம்பியவர்கள் ஒரு
நாளும் வீண் போவதில்லை! உறுதி!

Monday, May 23, 2011

சுகமாய் இருக்கலாம்!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கைக்கு தேவையான எல்லா
நல்ல விஷயங்களும் பாகவதத்தில்
கொட்டிக்கிடக்கிறது! நாம் 
ஒழுங்காக பாகவதத்தை
புரிந்துகொண்டால் 
சுகமாய் இருக்கலாம்!

பாகவதம் படி!


ராதேக்ருஷ்ணா

இன்று ஆனந்தமாக ஸ்ரீ
க்ருஷ்ண லீலா வைபவங்களை
ஸ்ரீமத் பாகவத பாராயணத்தில்
அனுபவித்தோம்! பாகவதம் 
படிப்பதே சுகம்! நீயும்
இன்று படி!

ஆசீர்வாதம் செய்தான்!


ராதேக்ருஷ்ணா

இப்பொழுதுதான் ஸ்ரீ அனந்த 
பத்மநாப சுவாமியை தரிசித்து
வந்தேன்! கருணைக்கடல்
 பத்மநாபன் உங்கள் அனைவருக்கும்
ஆசீர்வாதம் செய்தான்! அற்புதம்!

எத்தனை சுகம்!


ராதேக்ருஷ்ணா

இன்று பாகவதத்தில் ஸ்ரீ 
க்ருஷ்ண அவதாரம் ஆனது!
எத்தனை சுகமாக இருந்தது!
க்ருஷ்ணனின் திருவடியில் எங்களை
ஒப்படைத்தோம்! எத்தனை க்ருபை!

கோடி கோடி நமஸ்காரங்கள்!


ராதேக்ருஷ்ணா

குருஜிஅம்மாவின் சரணகமலங்களில்
 கோடி கோடி நமஸ்காரங்கள்!
குருஜிஅம்மாவின் பரம கருணையினால்
இன்று நாங்கள் இந்த பூமியில்
நிம்மதியாய் இருக்கிறோம்!

குருஜிஅம்மா வாழ்க!


ராதேக்ருஷ்ணா

குருஜிஅம்மாவிற்கு நல்ல 
ஆரோக்யமான வாழ்வை க்ருஷ்ணா
 நீ தா! குருஜிஅம்மாவை 
100 வருஷம் சௌக்கியமாக 
இந்த பூமியில் இருக்க வை! 
குருஜிஅம்மா வாழ்க!

என்ன கைம்மாறு செய்யமுடியும்?


ராதேக்ருஷ்ணா

குருஜிஅம்மாவினால் இன்று உலகில்
என்னைப் போல் பல பேர் விடாமல்
பகவானுடைய ரதேக்ருஷ்ணா 
நாமத்தை ஜபிக்கிறார்கள்! என்ன 
கைம்மாறு எங்களால் செய்யமுடியும்?

Friday, May 20, 2011

அஹம்பாவத்தை அழிக்கும் ஆயுதம் !


ராதேக்ருஷ்ணா

உலகில் எல்லாவற்றையும் அழிக்க
அற்புதமான ஆயுதம் உள்ளது!
அஹம்பாவத்தை அழிக்க இதுவரை
ஆயுதமே இல்லை! நாம ஜபம்
மட்டுமே அஹம்பாவத்தை அழிக்கும்!

மதம் பிடித்த யானை!


ராதேக்ருஷ்ணா!

அஹம்பாவம் என்பது மதம்
பிடித்த யானை! அதன் 
முன்னால் உன்னால் ஜெயிக்க
முடியாது! அதனால் அந்த மத 
யானையை இப்போதே 
கொன்று விடு! யுத்தம் செய்!

அஹம்பாவம் வேண்டாம்!


ராதேக்ருஷ்ணா

நான் என்னும் அகந்தை தான்
மனிதரின் எல்லா விதமான
துன்பங்களுக்கும் ஆதி காரணம்!
அதனால் எந்த நிலைமையிலும் 
அஹம்பாவம் வேண்டாம் என்று
பிரார்த்தனை செய்!

Thursday, May 19, 2011

முயற்சிப்பாயா?


ராதேக்ருஷ்ணா

முயற்சி கடவுளின் மறு அவதாரம்!
முயற்சி கடவுளின் ஆசீர்வாதம்!
முயற்சி இல்லாதவர் இந்த உலகில்
நிம்மதியாக வாழவே முடியாது!
முயற்சிப்பாயா?

கடவுளின் வரம்...


ராதேக்ருஷ்ணா

முயற்சி செய்வதை விட உலகில்
சுகமான காரியம் என்ன உண்டு?
முயற்சி செய்வதால் நம்முடைய 
நம்பிக்கை அதிகமாகிறது! முயற்சி
தான் கடவுளின் வரம்...

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP