Thursday, April 7, 2011

ஏன் பயப்படுகிறாய்?


ராதேக்ருஷ்ணா

என்ன பெரிய உலகம்?
சில கோடி மனிதர்களா
உன் வாழ்வை நிர்ணயம்
செய்கிறார்கள்? யார் இந்த
மனிதர்கள்? இவர்களுக்காக 
ஏன் நீ பயப்படுகிறாய்?
வெளியில் வா...

திருந்து!


ராதேக்ருஷ்ணா

உலகம் உன்னை எப்படி
நடத்தினாலும் நீ தெளிவாக,
தைரியமாக இரு! இந்த
 உலகம் உன்னை ஒன்றும் 
செய்ய முடியாது! நீ தான்
அலட்டிக்கொள்கிறாய்!
திருந்து!

Wednesday, April 6, 2011

சிரி!


ராதேக்ருஷ்ணா

உலகில் எல்லா ஜீவராசிகளும்
சந்தோஷமாக சிரிக்கிறது!
மனிதன் தான் சிரிக்கிறான்
என்பது பெரிய பொய்! 
மனிதன் தான் ஒழுங்காக
சிரிப்பதில்லை! இனி சிரி!

காசு கொடுக்கவேண்டாம்!


ராதேக்ருஷ்ணா

சிரிப்பதற்கு நீ ஒன்றும் காசு
கொடுக்கவேண்டாம்! சிரித்துக்கொண்டே
உன் கடமைகளை செய்து பார்!
எத்தனை சுலபமாக செய்ய
முடியும் என்பதை நீயே பார்!

சிரித்துக்கொண்டே இரு!


ராதேக்ருஷ்ணா

சந்தோஷமாக சிரித்துக்கொண்டே
 இரு! நீ சிரித்துக்கொண்டே 
வாழ்ந்தால் உன் வாழ்வில் 
நிச்சயமாக வெல்வாய்! மனதின் 
எல்லைகளை உடைத்தெறி!
ஆனந்தம் வரும்!

மனதை விசாலமாக்கு!


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்வை படுத்தாதே!
அது உனக்கு எல்லாவற்றையும்
தருகிறது! வாழ்விடமிருந்து
எல்லாவற்றையும் பெற்றுக்கொள்!
அது உனது உரிமை!
மனதை விசாலமாக்கு!

க்ருஷ்ணனிடம் ஒப்படைத்துவிடு!


ராதேக்ருஷ்ணா

மனதை சந்தோஷமாக 
வைத்துக்கொள்ளவே பக்தி!
மனதை க்ருஷ்ணனிடம்
ஒப்படைத்துவிட்டு உன்
வேலையைப் பார்! நிச்சயம்
உன் வாழ்வு சந்தோஷமாக
இருக்கும்! 

நினைவுகள்!


ராதேக்ருஷ்ணா

நினைவெல்லாம் சரியாக இருந்தால்
நிச்சயம் வாழ்வில் ஜெயிக்கமுடியும்!
நினைவுதான் வாழ்க்கை! உன் 
நினைவுகளை அடகு வைக்காதே!
சரியாக நினை! வாழ்!

Tuesday, April 5, 2011

அற்புதமான சாநித்தியம்!


ராதேக்ருஷ்ணா

எத்தனை அற்புதமான தரிசனம்! 
சுவாமி ராமானுஜருக்கு பஞ்ச
சம்ஸ்காரம் செய்த மகிழ 
மரத்தடியில் எத்தனை 
அற்புதமான சாநித்தியம்!
ராமானுஜா!

உகாதி திருநாள்!


ராதேக்ருஷ்ணா!

இன்று உகாதி திருநாள்!
புதிய வருஷம் ஆரம்பம்! 
எல்லாம் நல்லதாக நடக்கட்டும்!
எல்லோரும் சந்தோஷமாக 
இருப்போம்! அன்பு வளரட்டும்!
வாழ்வு வளமாகட்டும்! 

ஏரி காத்த ராமர்...


ராதேக்ருஷ்ணா

நாங்கள் இப்பொழுது மதுராந்தகம்
ஏரி காத்த ராமர் கோயிலுக்கு
செல்கிறோம்! சுவாமி ராமானுஜருக்கு
ஸ்ரீ பெரிய நம்பிகள் பஞ்ச
சம்ஸ்காரம் செய்த ஸ்தலம் இது!

வளமாக்கிக்கொள்...


ராதேக்ருஷ்ணா

பக்தியைக் கொண்டு உன் வாழ்வை
நீ வளமாக்கிக்கொள்ளலாம்!
பக்தியினால் நீ உலகை வெல்லலாம்!
பக்தியினால் உன் வாழ்வின் தரத்தை
நீ உயர்த்திக்கொள்ளலாம்!

அக்ஷய பாத்திரம்!


ராதேக்ருஷ்ணா

பக்தி என்பது குதூகலமாக
வாழ்வதற்காகவே! பக்தியை 
யதார்த்தமாக செய்! பக்தி 
என்பது அக்ஷய பாத்திரம்!
அள்ள அள்ளக் குறையாமல்
ஆனந்தம் தரும்!

கண்ணன் என் சேவகன்!


ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணன் என்னும் சுமைதாங்கி
உன் சுமைகளை தாங்க தயாராக
இருக்கிறான்! நாம ஜபம் என்னும் 
கூலி கொடுத்தால் அவனை 
வேலைக்காரனாக 
வைத்துக்கொள்ளலாம்!

Sunday, April 3, 2011

குழப்பிக்கொள்ளாதே!


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு
நிகழ்ச்சியிலும் நீ தான்
ஜெயித்துக்கொண்டிருக்கிறாய்!
அனாவசியமாக மனதை போட்டு
குழப்பிக்கொள்ளாதே! வாழ்வை
உள்ளபடி வாழ்!

24 மணி நேரம் தான்!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் எல்லோருக்குமே 
ஒரு நாளைக்கு 24 மணி நேரம் 
தான்! அதில்தான் நாம் 
அனைவருமே வாழவேண்டும்! 
அதை எப்படி சரியாக வாழலாம்
என்பதை கண்டுபிடி!

உன் வாழ்க்கையை மதி!

ராதேக்ருஷ்ணா

வாழ்வை நீ சுமையாக கருதினால்
வேறு யார் தான் உன் வாழ்க்கையை
ரசித்து அனுபவிக்கமுடியும்! உன்
வாழ்க்கைக்கு உரிய மரியாதையை
நீ தான் தரவேண்டும்!

Friday, April 1, 2011

மனதார மன்னிப்பு கேள்!


ராதேக்ருஷ்ணா!

தவறு செய்துவிட்டாயா? மனதார
மன்னிப்பு கேள்! இனி தவறு
செய்யாமல் இருக்க என்ன வழி 
என்று பார்! அதை கண்டுபிடித்து
வாழ்வில் முன்னேறு! 
உன்னால் முடியும்!

வெளியில் வா!


ராதேக்ருஷ்ணா

தவறு செய்யாமல் உலகில்
யாருமே இல்லை! தவறை
மட்டுமே செய்பவர்களும் 
உலகில் இல்லை! அதனால்
உன் தவறை நினைத்து 
புழுங்காதே! தயவு செய்து
வெளியில் வா!

உன்னை சரி செய்துகொள்!


ராதேக்ருஷ்ணா

தவறு செய்வதால் நீ ஒன்றும்
மட்டமாவதில்லை! தவறுகளை
திரும்ப திரும்ப செய்வதால் 
தான் நீ மட்டமாகிறாய்! அதனால்
உன்னை சரி செய்துகொள்! வெல்!

நீ நீயாக இரு!

ராதேக்ருஷ்ணா

உனது வாழ்வில் நீ நீயாக
இருந்தால் உனக்கு மரியாதை!
நீ அடுத்தவரை காப்பியடித்தால்
உன் வாழ்க்கை அத்தனை 
சுகமாக இருக்காது! நீ
நீயாக இரு!

உன் வாழ்க்கை...உன் பொறுப்பு!


ராதேக்ருஷ்ணா

உன் தகுதிகளை நீ தான்
முழுமையாக 
தெரிந்துகொள்ளவேண்டும்!
உன் திறமைகளை நீ தான்
வளர்த்துக்கொள்ள வேண்டும்!
இது உன் வாழ்க்கை அல்லவா?
உன் பொறுப்பு!

விடா முயற்சி...


ராதேக்ருஷ்ணா

உன்னால் முடிந்ததை செய்!
முடியாததை செய்ய உன்னை 
தயார் செய்து கொள்! விடா
முயற்சி இருந்தால் எத்தனை 
பெரிய காரியமாக 
இருந்தாலும் செய்யமுடியும்!

Wednesday, March 30, 2011

வெற்றியின் ரகசியம்!


ராதேக்ருஷ்ணா

இன்று வரை நாம ஜபம் செய்து
வாழ்வில் முன்னேறியவர்கள் பல
கோடி பேர்! உன்னாலும் முடியும்!
நாம ஜபம் உனக்கு கிடைத்த
வெற்றியின் ரகசியம்! 
பிடித்துக்கொள்!

முன்னேற்றம் காண்பாய்!


ராதேக்ருஷ்ணா

நாம ஜபம் செய்து கொண்டே 
வர, உன் வாழ்வில் பல பல 
முன்னேற்றங்களை நிச்சயம்
நீ காண்பாய்! உன் மூளை
சரியாக வேலை செய்யும்!
மனம் தெளிவாக இருக்கும்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP