Thursday, February 3, 2011

சுகமாக இருக்கும்!


ராதேக்ருஷ்ணா

இன்று நீ பிருந்தாவனத்தில்
இருப்பதாக நினைத்துக்கொள்!
நீ செய்யும் ஒவ்வொரு காரியமும்
பாங்கே பிஹாரி க்ருஷ்ணனுக்காக
என்று செய்! சுகமாக இருக்கும்! 
அனுபவி!

அமைதி கொள்!


ராதேக்ருஷ்ணா

உன் வெற்றியில் கண்ணன் 
உன்னோடு இருந்தான்! உன்
தோல்வியில் கண்ணன் உன்னோடு
இருந்தான்! உன் அழுகையில்
கண்ணன் இருக்கின்றான்! உன்
சிரிப்பில் கண்ணன் இருக்கின்றான்!
அமைதி கொள்!

என்றும் உன்னோடு...


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய கஷ்டங்களின் போதும்
க்ருஷ்ணன் உன்னோடு இருந்தான்!
உன்னுடைய சந்தோஷங்களின் 
போதும் கண்ணன் உன்னோடு 
இருந்தான்! அதனால் க்ருஷ்ணன்
என்றும் உன்னோடு உண்டு!  

தைரியமாக இரு!


ராதேக்ருஷ்ணா

உன் கடந்த காலத்திலும்
கண்ணன் உன்னோடு இருந்தான்!
நிகழ்காலத்திலும் உன்னோடு
இருக்கின்றான்! எதிர்காலத்திலும்
உன்னோடு இருப்பான்! அதனால்
நீ தைரியமாக இரு!

Tuesday, February 1, 2011

நல்லதை மட்டுமே...


ராதேக்ருஷ்ணா

நல்லதை மட்டுமே நினைக்கப்
பழகு! நல்லதை மட்டுமே
பேசிப்பழகு! நல்லதை மட்டுமே
செய்யப்பழகு! பிறகு தானாகவே
உன் வாழ்க்கை நல்லதாகவே
நடக்கும்!

போராடு!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் போராட தயாராக
இருப்பவர்கள் மட்டுமே ஜெயிக்கிறார்கள்!
நீ ஜெயிக்க வேண்டுமென்றால்
போராடித்தான் ஆகவேண்டும்!
இதை தவிர வேறு வழி இல்லை!

அப்படியே ஏற்றுக்கொள்!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும்
உன்னை உயர்த்துகிறது! அதனால்
எல்லா நிகழ்வுகளையும் நீ
அப்படியே ஏற்றுக்கொள்! 
அப்பொழுதுதான் நீ
நிச்சயம் ஜெயிப்பாய்!

ஜெயிக்க முடியும்!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே!
அதனால் உன் வாழ்வை நீ
ஒரு நாளும் வெறுக்காதே!
தைரியமாக இரு! நிச்சயம்
உன்னால் வாழ்வை ஜெயிக்க
முடியும்! நம்பிக்கை!

தவற விடாதே!


ராதேக்ருஷ்ணா

பொறுமை இல்லாதவர்கள் தான்
வாழ்வில் நல்ல சந்தர்ப்பங்களை
இழந்துவிடுகிறார்கள்! பொறுமையோடு
இருப்பவர்கள் வாழ்வில் நல்லதை
தவற விடுவதே இல்லை!

மிக அவசியம்!


ராதேக்ருஷ்ணா

பொறுமை இருந்தால் தான்
நீ உலகில் எல்லாவற்றையும்
ஜெயிக்க முடியும்! பொறுமை 
இருந்தால் தான் நீ உலகில்
தைரியமாக வாழமுடியும்!
பொறுமை மிக அவசியம்!

அமைதி!


ராதேக்ருஷ்ணா

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு
விதம்! அதற்காக நீ எரிச்சல்
அடையக்கூடாது! நீ பொறுமையை
இழந்தால் உனக்கு தான் குழப்பம்
அதிகமாகும்! அமைதி!

சாதாரணமாக வாழ்!


ராதேக்ருஷ்ணா

வாழ்க்கை மிகவும் பெரியது!
அதனால் அதைக் கண்டு நீ
பயப்பட என்ன இருக்கிறது?
நீ சாதாரணமாக உன்
வாழ்க்கையை வாழ்ந்தாலே
நன்றாக இருப்பாய்!

உன் மனதின் பலம்!


ராதேக்ருஷ்ணா

தைரியம் என்பது உன் மனதின்
பலம்! நீ தான் உன் மனதை
எப்பொழுதும் தைரியமாக
வைத்துக்கொள்ளவேண்டும! 
மனதிலே நம்பிக்கை இருந்தால்
நீ ஜெயிப்பாய்!

தைரியத்தை இழக்காதே!


ராதேக்ருஷ்ணா

மனதிலே தைரியம் இருந்தால் 
உன்னால் எல்லா நிலைமைகளிலும்
ஜெயித்து வரமுடியும்! எந்த ஒரு
சந்தர்ப்பத்திலும் தைரியத்தை 
துளி கூட இழக்காதே!

Friday, January 28, 2011

க்ருஷ்ணனின் லக்ஷியம்!


ராதேக்ருஷ்ணா

உன்னை ஆனந்தக்கடலில் திளைக்க
வைப்பதே க்ருஷ்ணனின் லக்ஷியம்!
அதற்கு நீ க்ருஷ்ணனை முழுமையாக
நம்பினால் போதும்! மற்றவைகளை
அவன் செய்வான்!

க்ருஷ்ணனுக்கு தெரியும்!


ராதேக்ருஷ்ணா

உன்னுடைய அனைத்தும் க்ருஷ்ணனுக்கு
நன்றாகவே தெரியும்! அதனால்
க்ருஷ்ணனிடம் எல்லாவற்றையும் 
சொல்லிவிட்டு நிம்மதியாக வாழ்!
அதையே க்ருஷ்ணன் விரும்புகிறான்!

பகவான் க்ருஷ்ணனின் குழந்தை!


ராதேக்ருஷ்ணா

உன் எண்ணங்கள் உயர்ந்ததோ 
அல்லது தாழ்ந்ததோ, நீ நிச்சயம்
பகவான் க்ருஷ்ணனின் குழந்தை!
நிச்சயம் ஒரு நாள் நீ பகவானின்
இஷ்டப்படி வாழ்வாய்! 

Thursday, January 27, 2011

சுவாமி ராமானுஜரின் சொத்து!


ராதேக்ருஷ்ணா

ஸ்ரீ கூரத்தாழ்வான் எப்பொழுதும்
தன்னை சுவாமி ராமானுஜரின் 
சொத்தாகவே நினைத்திருந்தார்!
தன குரு ராமானுஜரை காக்க 
அவரின் காவியை உடுத்தினவர்!

ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருநக்ஷத்திரம்!


ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்
ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருநக்ஷத்திரம்!
கோடீஸ்வரனான கூரேசர் எல்லோரிடமும்
சமமாக பழகுவார்! அவரை நினை...

Tuesday, January 25, 2011

அன்பு மட்டும்தான்!


ராதேக்ருஷ்ணா

மனிதர்களை நீ ஜெயிக்க ஒரே 
ஆயுதம் அன்பு மட்டும்தான்!
உலகில் என்றுமே தோற்காத
ஆயுதம் அன்பு மட்டுமே! 
அன்பினால் முடியாதது 
எதுவுமில்லை! புரிந்துகொள்!

அமைதியாக இரு!


ராதேக்ருஷ்ணா

எல்லோரிடமும் நீ அன்பாக 
இரு! அவர்கள் அந்த அன்பை
உதாசீனப்படுத்தினால்
கவலைப்படாதே! அது அவர்கள்
ஸ்வபாவம் என்று விட்டு விடு!
அமைதியாக இரு!

விடாமல் நாம ஜபம் செய்...


ராதேக்ருஷ்ணா

உறவுகள் பலவிதம்! ஒவ்வொருவரும்
ஒரு ரகம்! இதற்கு நடுவில் 
தான் வாழவேண்டும்! அதற்கு
ஒரே வழி விடாமல் நாம ஜபம்
செய்வது மட்டுமே! 
செய்தால் சந்தோஷம்!

முயற்சி தேவை!


ராதேக்ருஷ்ணா

பொறாமையினால்தான் பலர் 
தங்களுக்கு கிடைத்த வாழ்வை
அவமதிக்கிறார்கள்! உயர்ந்த
இடத்தை அடைய நினைப்பது
தவறில்லை! அதற்கு
முயற்சி தேவை!

சமர்ப்பணம் செய்துவிடு!


ராதேக்ருஷ்ணா

எப்பொழுதெல்லாம் உன் மனதில்
பொறாமையின் சின்னங்கள் 
தோன்றுகிறதோ, அப்பொழுதே 
உடனே அதை க்ருஷ்ணனுக்கு 
சமர்ப்பணம் செய்துவிடு! 
அப்பொழுதுதான் நீ வெல்வாய்!

பொறாமை...


ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு முறையும் உனக்கு
உன்னை விட பெயரும் புகழும்
அடைந்தவர்களை பார்க்கும்பொழுது
மனதில் ஒரு துக்கம் வந்தால்
அதற்கு பெயர் தான் பொறாமை...

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP