Sunday, January 9, 2011

சாதிக்கமுடியும்...

ராதேக்ருஷ்ணா

உன் வாழ்க்கையையும், உன் 
செய்கைகளையும், உன் எண்ணங்களையும்
நீ சரி செய்துகொண்டே வந்தால்
நிச்சயம் உன்னால் எல்லா
பெரிய காரியங்களையும் 
சாதிக்கமுடியும்...

அர்ப்பணம் செய்தோம்!

ராதேக்ருஷ்ணா

சுந்தர பரிபூரண நம்பியே!
உன் திருவடிகளில் எங்களை
அர்ப்பணம் செய்தோம்! அறியாத
இந்த பிள்ளைகளை எப்பொழுதும்
உன் அருகிலேயே வைத்துகொள்!
அருள் செய்!

திருமலை மேல் நம்பி தரிசனம்!

ராதேக்ருஷ்ணா

திருக்குறுங்குடியில் திருமலை
மேல் நம்பியை சேவித்தோம்!
போகும் பாதை வாழ்க்கை
பாதை போன்று நெளிவும், 
சுளிவும், பள்ளமும், மேடும்!
அவன் கிருபையை உணர்ந்தோம்!

செங்கனி வாய் அழகு!

ராதேக்ருஷ்ணா

இன்று அற்புதமாக திருக்குறுங்குடி
நம்பியை சேவித்தோம்! சுந்தர
பரிபூரண நம்பியின் செங்கனி வாய் 
அழகை எப்படி நான் வர்ணிப்பேன்?
ஆஹா! கற்பூரம் நாறுமோ!

வாழ்வை வெல்!

ராதேக்ருஷ்ணா

வாழ்வில் செவிக்கு மரியாதை
கொடுத்து சிரத்தையோடு 
கேட்பவர் மட்டுமே ஜெயிக்கமுடியும்!
உன் செவி உன்னை வாழவைக்கும்!
நல்லதை மட்டுமே கேள்!
வாழ்வை வெல்!

செவிக்கு வேலை கொடு!

ராதேக்ருஷ்ணா

முதலில் உன் செவிக்கு 
வேலை கொடு! பிறகு உன் 
வாய்க்கு வேலை கொடு!
மற்றவர் சொல்வதை ஒழுங்காக
கவனித்தாலே நீ வாழ்வில் பல 
கஷ்டங்களிலிருந்து தப்பலாம்!

Friday, January 7, 2011

பேச்சை குறை...

ராதேக்ருஷ்ணா

எத்தனைக்கு எத்தனை பேச்சை
குறைக்கிறாயோ, அத்தனைக்கு 
அத்தனை உன் வாழ்க்கை சிறக்கும்!
பேச்சை குறைத்தவர்கள் மட்டுமே
இன்று வரை வென்றிருக்கிறார்கள்!

உண்மை இதுவே!

ராதேக்ருஷ்ணா

ஜாதியைக்கொண்டு ஒருவரை
 நாம் எடை போட முடியாது!
மனதைக்கொண்டும், 
செயல்களைக்கொண்டும் நாம்
நிச்சயமாக ஒருவரை எடை போட
முடியும்! உண்மை இதுவே!
ஏற்றுக்கொள்!

இரண்டே ஜாதி தான்!

ராதேக்ருஷ்ணா

உலகில் இரண்டே ஜாதி தான்!
ஒன்று கடவுளை வெளிப்படையாக
ஏற்றுக்கொள்ளும் பக்தர் ஜாதி!
இன்னொன்று கடவுளை ரகசியமாக
ஏற்றுக்கொள்ளும் நாஸ்தீக ஜாதி!

ஒரு சபதம்...

ராதேக்ருஷ்ணா

இந்த மார்கழியில் ஒரு சபதம்
ஏற்போம்! இனி தீண்டாமை
எங்கும் இல்லை என்கிற விதி
செய்வோம்! சுவாமி
 ராமானுஜரைப்போல் எல்லோரையும்
"திருக்குலத்தோர்"ஆக ஏற்போம்!

அருள் செய்!

ராதேக்ருஷ்ணா

ஆஞ்சநேயா! உயர்ந்த ஹிந்து
தர்மத்திற்கு வந்துள்ள எல்லா
கஷ்டங்களும் நீங்க வேண்டும்!
ஹிந்து தர்மத்தை வெறுப்பவர்கள்
மனம் திருந்த வேண்டும்!
அருள் செய்!

சரணடைதேன்!

ராதேக்ருஷ்ணா

ஆஞ்சநேயா! எனக்கு பக்தியை
தாரும்! எனக்கு ஞானத்தை
தாரும்! பகவான் இஷ்டப்படி
வாழ நல்ல புத்தியை தாரும்! உம்
 திருவடிகளில் சரணடைதேன்! 

ராதேக்ருஷ்ணா

இன்று ஹனுமத் ஜெயந்தி!
ஸ்ரீ ஆஞ்சநேயரின் பிறந்த நாள்!
அவரைப் போலே விடாது 
நாம ஜபம் செய்து சீக்கிரத்தில்
அயோத்தியில் ஸ்ரீராமர் 
கோயில் கட்டுவோம்!

சரியான முடிவு!

ராதேக்ருஷ்ணா

ராசிக்கல்லை நம்பி உன் நாளை
தொடங்குவதைக் காட்டிலும், உன்
க்ருஷ்ணனை நம்பி நாளை
தொடங்கினால் நிச்சயம் நீ 
வென்றே தீருவாய்! இதுவே
சரியான முடிவு!

பக்தியை கொண்டு முடிவு செய்!

ராதேக்ருஷ்ணா

உன் கைரேகையைக் கொண்டு
உன் தலையெழுத்தை நீ முடிவு
செய்வதை விட, உன் உழைப்பையும்,
நம்பிக்கையையும், பக்தியையும் 
கொண்டு உன் தலையெழுத்தை
முடிவு செய்!

இன்றே ஜெயிப்பாய்!

ராதேக்ருஷ்ணா

இன்றைய நாள் எப்படி
இருக்குமென்று ராசி பலனைப்
 பார்ப்பதைக் காட்டிலும், உன் முழு
முயற்சியை உபயோகப்படுத்தினால்
நீ நிச்சயம் இன்றே ஜெயிப்பாய்!
உண்மை!

வாராய்!

ராதேக்ருஷ்ணா

முதலில் சிஷ்யரை சேவித்துவிட்டு,
ஆழ்வார் திருநகரியில் ஆசார்யன்
சுவாமி நம்மாழ்வாரை சேவிப்போம்!
அதன் பிறகு பவிஷ்யதாசார்யன்
ராமானுஜரை சேவிப்போம்! 
வாராய்!

பக்தி நிதியை தாரும்!

ராதேக்ருஷ்ணா

முதலில் மதுரகவி ஆழ்வாரை
தரிசித்துவிட்டு, எங்கள் வைத்த மா நிதி  
பெருமாளிடம் சரணாகதி செய்வோம்!
வைத்த மா நிதியே, பக்தி
நிதியை தாரும்!

ராதேக்ருஷ்ணா

இந்த மார்கழி மிகவும்
அற்புதமானதே! ஒவ்வொரு நாளும்
திவ்ய தேச யாத்திரை செல்லும்
பாக்கியம் வாய்க்கிறது! இதோ
இப்பொழுது திருகோளூர்
 செல்கிறோம்! வா!

நல்லனவெல்லாம் நடக்கட்டும்!

ராதேக்ருஷ்ணா

உலகில் பொய் இல்லாமல்
போகட்டும்! உலகில் கொள்ளை
ஒழிந்துபோகட்டும்! உலகில் 
பொறாமை தேய்ந்துபோகட்டும்!
உலகில் நல்லனவெல்லாம் நடக்கட்டும்!
உலகம் புன்னகை சிந்தட்டும்!

மாசு நீங்கட்டும்!

ராதேக்ருஷ்ணா

உலகில் அமைதி உண்டாகட்டும்!
உலகில் நிம்மதி விளையாடட்டும்!
உலகில் தீவிரவாதம் அழியட்டும்!
உலகில் வியாதிகள் நாசமாகட்டும்!
உலகில் மாசு நீங்கட்டும்!

உலகம் சுகப்படட்டும்!

ராதேக்ருஷ்ணா

உலகமெங்கும் ஞான ஒளி
பெருகட்டும்! உலகமெங்கும் 
பக்தி பெருகட்டும்! உலகமெங்கும்
ஆனந்தம் பெருகட்டும்!
 உலகமெங்கும் ஒற்றுமை வளரட்டும்! 
உலகம் சுகப்படட்டும்!

Friday, December 31, 2010

திருமலையே! நீ நினைத்தால் ...

ராதேக்ருஷ்ணா

திருமலையே! நீ என்னை
நினைத்துக்கொண்டே இரு!
அப்பொழுதுதான் என்னால் 
உன்னை தரிசிக்க முடியும்!
எனக்கு பக்தி இல்லை! 
ஆனாலும் நீ நினைத்தால் 
எனக்கு பக்தி வரும்!

கோடி நமஸ்காரங்கள்!

ராதேக்ருஷ்ணா

உன் மலையை விட்டு உடல்
வந்துவிட்டாலும், மலையப்பா!
இன்னும் மனது திருமலையிலே
தான் சுற்றிக்கொண்டிருக்கிறது!
உனக்கும், திருமலைக்கும் கோடி
நமஸ்காரங்கள்!

நான் வேண்டும் வரம்!

ராதேக்ருஷ்ணா

ஸ்ரீநிவாசா! உன் சரண
கமலங்களில் சரணாகதி 
செய்கிறோம்! எல்லா பிறவியிலும்
உன் திருமலையை தொழும் 
வரம் தா! அதுவே நான்
வேண்டும் வரம்! கோவிந்தா!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP