Friday, December 10, 2010

ஏமாறாதே! தப்பித்துக்கொள்!

ராதேக்ருஷ்ணா

இயந்திரத்தோடு விளையாடி நீ
என்ன வாழ்வில் கற்றுக்கொள்ள 
முடியும்? ஒரு இயந்திரம் உன்
வாழ்வை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது
என்பதை புரிந்துகொள்!
தப்பித்துக்கொள்!

வாழ்க்கை விளையாட்டு!

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையே ஒரு விளையாட்டு!
அதில் ஜெயிப்பதற்கான வழியைப்
பார்! அதை விட்டு விட்டு, மற்ற
எந்த விளையாட்டைப் பார்த்து
நீ வாழ்வில் ஜெயிக்கப் போகிறாய்?

Thursday, December 9, 2010

ஆழமாக யோசித்து பார்!

ராதேக்ருஷ்ணா

குரு சொல்கின்ற விஷயங்களை
ஆழமாக யோசித்து பார்!
உன்னைப்பற்றி யாராவது
குருவிடம் சொல்லி, அதற்கு 
குரு உன்னை திட்டினாலும்,
உன்னை நெறிப்படுத்தவே!

குரு சொல்வதை கேள்!

ராதேக்ருஷ்ணா

குரு உங்களை எதற்காவது
திட்டினால், அது உங்கள் மேல் 
உள்ள அக்கரையினால்தானே 
ஒழிய, வேறு ஒரு அர்த்தமும்
இல்லை! குரு சொல்வதை 
கேட்டு நடந்தால் நல்லது!

உங்கள் நன்மைக்காகவே...

ராதேக்ருஷ்ணா

குருவின் முன்பாக நல்லவர் போல்
இருந்துவிட்டு, பிறகு தன் இஷ்டம்
போல் இருப்பதனால் குருவிற்கு ஒரு
 நஷ்டமும் இல்லை! குரு உங்கள்
 நன்மைக்காகவே சொல்கிறார்!

Wednesday, December 8, 2010

நம்பிக்கை இழக்காதே!

ராதேக்ருஷ்ணா

எது வந்தாலும் கலங்காதே! என்ன
 நடந்தாலும் பயப்படாதே! உன் 
மனதில் க்ருஷ்ணன் இருக்கிறான்! 
உன்னால் எல்லாவற்றையும்
ஜெயிக்க முடியும்! நம்பிக்கை
இழக்காதே!

பிரச்சனைகள்...

ராதேக்ருஷ்ணா

பிரச்சனைகள் உன்னை வளர்க்கின்றது!
பிரச்சனைகள் உன்னை அழிப்பதில்லை!
பிரச்சனைகள் உனக்கு பலமும், 
பக்குவமும் தருகின்றன! 
அதனால் கலங்காதே!

தீர்வு கிடைக்கும்!

ராதேக்ருஷ்ணா

தீர்வு இல்லாத பிரச்சனை
என்பது எதுவும் இல்லை!
நீ தான் தீர்வுகளை 
கவனிப்பதில்லை! க்ருஷ்ண
நாமத்தை ஜபித்து வாழ்ந்தால்
தீர்வு கிடைக்கும்!

Tuesday, December 7, 2010

தலையாய தர்மம்!

ராதேக்ருஷ்ணா

தனி ஒருவருக்கு உணவில்லை 
எனில், இந்த ஜகத்திலிருக்கும்
நாம் அனைவரும் தான் அதற்கு
பொறுப்பு! அதனால் பசிக்கு 
உணவிடுவோம்! இது நம்
தலையாய தர்மம்!

எல்லோருக்கும் உணவு!

ராதேக்ருஷ்ணா

உணவு ஒவ்வொரு ஜீவனுடைய
உரிமை! உனக்கு வேண்டிய 
அளவு நன்றாக சாப்பிடு!
பசித்தவருக்கு வேண்டிய 
உணவைக் கொடு! எல்லோரும்
சாப்பிட்டு நன்றாக இருப்போம்!

உணவை வீணாக்காதே!

ராதேக்ருஷ்ணா

நீ சாப்பிட்டு வீசி எறிகின்ற 
எச்சிலையும், மிச்சத்தையும்
சாப்பிட்டு வாழும் நிலைமையில்
பலர் இருக்கின்றனர்! அதனால்
உணவுப் பண்டங்களை வீணாக்காதே!

Monday, December 6, 2010

கண்ணா! காப்பாற்று...

ராதேக்ருஷ்ணா

எல்லோரையும் எப்பொழுதும் 
காப்பாற்றும் கண்ணா, ஜனங்களை
அடை மழையிலிருந்து காப்பாற்று!
கோபரையும், கோபிகளியும் காத்த 
தெய்வமே, எங்களையும் காப்பாற்று! 

ஆழி மழை கண்ணா...

ராதேக்ருஷ்ணா

ஆழி மழை கண்ணா, எங்கள்
ஜனங்கள் உலகில் சுகமாக
வாழ்வதற்கான மழை பெய்தால்
போதும்! அதிக மழை ஒரு
 நாளும் வேண்டாம்! அருள்
செய்வாய்! காப்பாற்று!

பிரார்த்தனை செய்வோம்!

ராதேக்ருஷ்ணா

குன்றம் ஏந்தி குளிர் மழை
காத்தவன், இன்றும் ஜனங்களை
அடை மழையிலிருந்து 
 காப்பாற்றுவான்! எல்லோரும் 
திடமாக க்ருஷ்ணனிடம்
பிரார்த்தனை செய்வோம்!

அஹம்பாவத்தை விட்டு இரு!

ராதேக்ருஷ்ணா

நிகழ் காலத்தில் இரு!
முயற்சியோடு இரு!
முயன்றுகொண்டே இரு!
நொந்துபோகாதிரு!
சளைக்காமல் இரு!
அறிவோடு இரு!
 அசராமல் இரு! 
அஹம்பாவத்தை விட்டு
 இரு! வாழ்வாய்!

ஜாக்கிரதையாய் இரு!

ராதேக்ருஷ்ணா

நாமஜபத்தோடு இரு!
க்ருஷ்ணனோடு இரு!
பக்தர்களோடு இரு!
சத்சங்கத்தோடு இரு!
திடமாக இரு! 
பணிவாய் இரு!
விவேகத்தோடு இரு!
பொறுப்பாக இரு!
ஜாக்கிரதையாய் இரு!

பக்தியோடு இரு...

ராதேக்ருஷ்ணா

தைரியமாக இரு!
பொறுமையாக இரு!
நம்பிக்கையோடு இரு!
தெளிவாக இரு! 
சிரத்தையோடு இரு!
சுறுசுறுப்பாக இரு!
ஆனந்தமாக இரு!
அன்போடு இரு!
பக்தியோடு இரு...

உன் மனதிடம் சொல்...

ராதேக்ருஷ்ணா!

"எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது! 
எல்லாம் சரியாகத்தான் நடக்கும்! 
என் வாழ்க்கையை க்ருஷ்ணன்
 கவனித்துக்கொள்கின்றான்!"...
இதையே உன் மனதிடம் சொல்...

க்ருஷ்ணனை பிடித்துக்கொள்!

ராதேக்ருஷ்ணா

என்ன நடந்தாலும் உன்
க்ருஷ்ணனை திடமாக 
பிடித்துக்கொள்! அவன்
எல்லாவற்றையும் சரி செய்வான்!
அவனுக்கு வேறு என்ன வேலை?
 நம்மை காப்பாற்றுவதுதான்
அவன் வேலை!

நம்பிக்கை இழக்காதே!

ராதேக்ருஷ்ணா

எது எவ்வளவு மோசமாகப்
போனாலும், நீ நம்பிக்கையோடு 
இரு! உன்னை சுற்றி 
இருப்பவர்கள் எல்லோரும் 
நம்பிக்கை இழந்தாலும் நீ
 துளியும் நம்பிக்கை 
இழக்காதே! வெல்வாய்!

Friday, December 3, 2010

அழியாத ஆத்மா!

ராதேக்ருஷ்ணா

நீ எப்பொழுதும் மன 
வலிமையோடு இருப்பாய்! நீ
எப்பொழுதும் உறுதியோடு
இருப்பாய்! நீ எப்பொழுதும்
க்ருஷ்ணனோடு இருக்கிறாய்!
நீ என்றும் அழியாத ஆத்மா!

நிம்மதியாக இருப்பாய்!

ராதேக்ருஷ்ணா

நீ எப்பொழுதும் நன்றாக
இருப்பாய்! நீ எப்பொழுதும்
ஆரோக்யமாக இருப்பாய்! நீ
 எப்பொழுதும் சந்தோஷமாக 
இருப்பாய்! நீ எப்பொழுதும் 
நிம்மதியாக இருப்பாய்!

க்ருஷ்ண ஆசீர்வாதம்!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நிகழ்வையும் உற்றுப்
பார்! அதில் உன் க்ருஷ்ணன்
உன்னை ஆசீர்வதிப்பது தெரியும்!
தயவு செய்து அதை மட்டுமே
கவனித்தால் உன்னால் 
வாழ்வில் வெல்லமுடியும்! 

Thursday, December 2, 2010

ஒழுங்காக கவனி...

ராதேக்ருஷ்ணா

இயற்கையே தெய்வம்! உனக்கு
இயற்கை நல்லதை மட்டுமே
தருகிறது! நீ அதை மட்டுமே 
கவனி! இயற்கையை நீ ஒழுங்காக
கவனித்தால் வாழ்வில் வெல்லலாம்!

புரிந்ததா?

ராதேக்ருஷ்ணா

இயற்கையின் நிகழ்வுகளை 
யாராலும் தடுக்கமுடியாது!
நீ வேண்டுமானால் உன்னை
பாதுகாத்துக்கொள்ளலாம்!
அதற்கு மட்டுமே உனக்கு
அதிகாரம் உண்டு! புரிந்ததா?

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP