Tuesday, November 9, 2010

இனியாவது திருந்துவோம்!

ராதேக்ருஷ்ணா

எத்தனையோ பிறவிகளில் நிறைய
சண்டை போட்டுவிட்டோம்!
அடுத்தவரை குற்றம் சொல்லிவிட்டோம்!
சாபம் கொடுத்துவிட்டோம்!
இனியாவது திருந்தி வாழ்வோம்!
நம்பிக்கை வை!

க்ருஷ்ணனின் குழந்தைகள்!

ராதேக்ருஷ்ணா

நீயும், நானும், மற்றவரும் 
பகவான் க்ருஷ்ணனின் 
குழந்தைகள்! அதனால் யாரிடமும்
ஒரு வெறுப்பும் வேண்டவே 
வேண்டாம்! எல்லோரும் 
அன்போடு இருப்போம்! 
சந்தோஷமாக வாழ்வோம்!

Monday, November 8, 2010

என்ன பிரயோஜனம்?

ராதேக்ருஷ்ணா

உன் மனதை சரியான
வழியில் எடுத்து செல்லாமல்
மற்றவர் மீதும் கடவுள் மீதும்
குற்றம் சொல்லி என்ன 
பிரயோஜனம்? நாம ஜபம்
செய்து உன் மனதை
சரி செய்!

சரியான எண்ணங்கள்...

ராதேக்ருஷ்ணா

உன் எண்ணங்களின் 
அஸ்திவாரத்தில்தான் உன் 
வாழ்க்கை நடக்கிறது! அதனால்
உன் எண்ணங்கள் சரியாகத்தான்
இருக்க வேண்டும்! இதில்
எந்த மாற்றமும் கிடையாது!

மனதை கவனி!

ராதேக்ருஷ்ணா

தினமும் உன் மனதை கவனி! 
தினமும் உன் ஆசைகளை
கவனிக்கிறாய்! ஆனால் உன் 
மனதை அல்லவா நீ கவனிக்க
வேண்டும்! உன்னை தவிர வேறு
 யார் இதை செய்யமுடியும்!

வாஹன உற்சவம்!

ராதேக்ருஷ்ணா

ஸ்ரீ அனந்த பத்ம நாபனின்
கோயிலில் இப்பொழுது உற்சவம்
நடக்கிறது! ஒவ்வொரு நாளும் 
பத்மநாபர் ஒவ்வொரு வாஹனத்தில்
வலம் வருவார்! இன்று பல்லக்கு!

சத்தியம்!

ராதேக்ருஷ்ணா

நம்மாழ்வார் சொல்கிறார் 'இன்றே
திருவனந்தபுரத்திற்கு செல்லுங்கள்!
உங்கள் எல்லா இடர்களும் 
நிச்சயம் அழிந்துவிடும்! உங்கள்
நோய்கள் எல்லாம் தீரும்!'...சத்தியம்!

திருவனந்தபுரத்தில் இருக்கிறேன்!

ராதேக்ருஷ்ணா

ஆஹா! என் திருவனந்தபுரத்தில்
இருக்கிறேன்! என் அப்பன் 
ஸ்ரீ அனந்த பத்ம நாபனின் 
அந்தபுரத்திற்கு வந்துவிட்டேன்!
 என் முன் வினை என்னை
விட்டு ஓடிவிட்டது!

வலம் வா!

ராதேக்ருஷ்ணா

அன்னத்தை  மலை போல்
குவித்து அதை கோவர்தனமாக
பாவித்து வலம் வா!

Saturday, November 6, 2010

அனுபவி!

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனை நினை!
ராதிகாவின் கையை 
பிடித்துக்கொள்! அனுபவி!

தீபாவளி வாத்துக்கள்!

ராதேக்ருஷ்ணா

இனிய க்ருஷ்ண ஸ்மரண
தீபாவளி வாத்துக்கள்!

Thursday, November 4, 2010

நிஜமான தீபாவளி!

ராதேக்ருஷ்ணா

இந்த தீபாவளிக்கு, சில
ஏழைகளின் வீட்டில் உதவி 
என்னும் தீபத்தை ஏற்றி,
நிஜமான தீபாவளியை 
கொண்டாடு! ஏழை 
குழந்தைகளுக்கு உதவி 
செய்! கொண்டாடு!

பக்தி தீபாவளி!

ராதேக்ருஷ்ணா

இந்த தீபாவளி பக்தி
தீபாவளியாக இருக்கட்டும்!
நிறைய நாமஜபம் செய்து,
மஹாத்மாக்களை உன் வீட்டிற்கு
வரவழைத்து, சத்சங்க 
தீபாவளியாக கொண்டாடு!

ராதிகா க்ருஷ்ணனோடு கொண்டாடு!

ராதேக்ருஷ்ணா

எத்தனையோ தீபாவளி வந்தது!
போனது! உன் ஆயுசும் போனது!
இந்த தீபாவளியை க்ருஷ்ணனோடு
கொண்டாடு! ராதிகாவோடு
கொண்டாடு! உன் மனது
விரிவடையட்டும்!

Wednesday, November 3, 2010

நல்ல நேரம்...

ராதேக்ருஷ்ணா

உன் மனதில் க்ருஷ்ணனிடம்
திடமான பக்தி இருக்கும்வரை
எல்லா நேரமுமே நல்ல
நேரம்தான்! எமகண்டம் கூட
முஹூர்த்த வேளை தான்! 
ராகு காலமும் நல்ல காலமே!

தெய்வத்திற்காக காத்திரு!

ராதேக்ருஷ்ணா

வாழ்வில் தெய்வத்திற்காக
கோயிலில் காத்திருக்கும்
ஒவ்வொரு மணித்துளியும்
அற்புதமானது! அது உன் 
பலகோடி ஜன்மாவின்
கர்மவினையை அகற்றுகிறது!
காத்திரு!

நேரத்தை மதி!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு மணித்துளியும் உன்
வாழ்வில் மிக மிக 
விசேஷமானதே! எல்லா நேரமும்
 நல்ல நேரமே! நீ உன் நேரம் 
சரியில்லை என்று 
உளறிக்கொட்டாதே! 
நேரத்தை மதி!

Tuesday, November 2, 2010

நீயா...பணமா?

ராதேக்ருஷ்ணா

பணத்தை நீ கொண்டாடினால்
அது உன்னை விட்டு விலகும்!
அதை நீ வைக்க வேண்டிய
இடத்தில் வைத்தால் அது 
உனக்கு அடிமையாக இருக்கும்!
நீயா...பணமா...

மனதிற்கு சமாதானம்...

ராதேக்ருஷ்ணா

பணம் என்பது வாழ்வில்
நம்முடைய உடல் தேவைகளை
பூர்த்தி செய்ய ஓரளவு உதவும்!
மனதை சமாதானப்படுத்த
நாமஜபமே மிக சிறந்த வழி!

க்ருஷ்ணன் தான் நிம்மதி!

ராதேக்ருஷ்ணா

பணம் வாழ்க்கைக்கு அவசியம்
என்பதில் சந்தேகம் இல்லை!
ஆனால் பணத்தினால் மட்டுமே
நீ நிம்மதி அடைவாய் என்று
நினைத்துவிடாதே! 
க்ருஷ்ணன் தான் நிம்மதி!

Monday, November 1, 2010

நீ எப்படி?

ராதேக்ருஷ்ணா

சொன்ன வாக்கை 
காப்பாற்றாவிட்டால்
நிச்சயம் நம் வாழ்வை அது
பாதிக்கும்! சொன்ன சொல்லை 
காப்பாற்றுவது நல்லவர்களின்
செயல்! நீ எப்படி?
நிதானமாக இரு...

இதில் தெளிவாக இரு!

ராதேக்ருஷ்ணா

வாக்கு கொடுப்பது மிக
சுலபம்! அதை காப்பாற்றுவது
மிக கடினம்! அதனால் உன்னால்
முடியாத காரியங்களில் வாக்கு
கொடுக்காதே! இதில் 
எப்போதும் தெளிவாக இரு!

வாக்கு தவறாதே!

ராதேக்ருஷ்ணா

ஒரு வாக்கு கொடுத்தால் அதை
நிச்சயம் காப்பாற்ற வேண்டும்!
அதனால் எப்பொழுதும் வாக்கு
கொடுக்கும்போது மிகவும்
ஜாக்கிரதையாக இருக்க 
வேண்டும்! வாக்கு தவறாதே!

உயர்வு தாழ்வு...

ராதேக்ருஷ்ணா

உன் தாயார் உனக்கு எத்தனை
உயர்வோ, அது போல் தான்
எல்லோருக்கும்! நீயும், நானும்,
கருவறையில் சிறைப்பட்டவர்கள்தான்!
இதில் நீ என்ன உயர்வு?
நான் என்ன தாழ்வு...

அஹம்பாவம் வேண்டாம்!

ராதேக்ருஷ்ணா

சகோதர/சகோதரி பாசம் உன்
வீட்டில் மட்டும் தான் பொங்கி
வழிகிறது என்று அஹம்பாவம்
 வேண்டாம்! உன் சுயநலத்தை
அவர்கள் தீண்டாதவரையே
அது வழியும்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP