Monday, October 4, 2010

சர்வ லோக நாதன்!

ராதேக்ருஷ்ணா

சந்த் கபீரையும் தன்
தாசனாக்கிய  ராமன் சர்வ
லோக நாதன்! ராமன்
 எல்லோரையும் வசப்படுத்துவான்!
வீரத்தினால் எதிரியையும்
வசப்படுத்துபவன் ராமன்!

ஜெய் ஸ்ரீ ராம்!

ராதேக்ருஷ்ணா

ராமனை இதுவரை யாரும் 
ஜெயித்ததில்லை! இதுவரை ராமன் 
யாரிடமும் தோற்றதில்லை!
ராமனுடைய பக்தர்களும்
இன்றுவரை வீழ்ந்ததில்லை!
ஜெய் ஸ்ரீ ராம்!

Saturday, October 2, 2010

சத்தியமேவ ஜெயதே!

ராதேக்ருஷ்ணா

ராமன் சத்தியம்!
அயோத்யா சத்தியம்!
ராமாயணம் சத்தியம்!
ஹிந்து தர்மம் சத்தியம்!
பாரத பூமி சத்தியம்!
சத்தியமேவ ஜெயதே!
ஜெய் ஸ்ரீ ராம்!

Thursday, September 23, 2010

கெடுதல் செய்யாதே!

ராதேக்ருஷ்ணா

முடிந்தால் உதவி செய்!
மறந்தும் யாருக்கும் கெடுதல்
செய்யாதே! யாருடைய வாழ்வையும்
கெடுக்காதே! யாரைப் பற்றியும் 
வம்பு பேசாதே! உன் 
வாழ்க்கையை ஒழுங்காக கவனி!

கவலை வேண்டாம்!

ராதேக்ருஷ்ணா

மனதில் நம்பிக்கையோடு இரு!
ஒரு நாளும் உன் நம்பிக்கை
வீண் போகாது! க்ருஷ்ணனுக்கு
உன்னை காப்பாற்ற நன்றாக
தெரியும்! அதனால் எந்த 
கவலையும் படாதே!

Wednesday, September 22, 2010

உன்னை மாற்றிக்கொள்!

ராதேக்ருஷ்ணா

தீவிரவாதத்திற்கு முக்கிய
 காரணம் அஹம்பாவமே!
நீ அஹம்பாவத்தில்
இருக்கும்போதெல்லாம் நீ
ஒரு தீவிரவாதியே! இதை நீ
உணர்ந்து உன்னை மாற்றிக்கொள்!

அஹம்பாவம் வேண்டாம்!

ராதேக்ருஷ்ணா

உனது வாழ்க்கையில் நீ 
அஹம்பாவத்திற்கு இடம்
கொடுத்தால் நிச்சயம் தோற்று
விடுவாய்! அஹம்பாவத்தினால் 
நீ பல முறை க்ருஷ்ண 
தரிசனத்தை இழந்திருக்கிறாய்!

உன் முடிவு என்ன?

ராதேக்ருஷ்ணா

அஹம்பாவத்தினால் நீ இழந்தது
பல கோடி! பக்தியினால்
இது வரை நீ அடைந்த
நன்மைகள் பல கோடி!
அதனால் இரண்டில் 
எதுவென்று  நீ முடிவு செய்!

Tuesday, September 21, 2010

ஜெயிக்கவேண்டும்!

ராதேக்ருஷ்ணா

நீ உலகை பார்த்து 
பயப்படக்கூடாது! நீ 
மனிதர்களிடம் பயந்து
ஒதுங்கக்கூடாது! நீ 
நிகழ்ச்சிகளை கண்டு 
நடுங்கக்கூடாது! நீ
வாழ்வில் ஜெயிக்கவேண்டும்!

பாக்கியசாலி!

ராதேக்ருஷ்ணா

நீ எப்பொழுதும் க்ருஷ்ண
குழந்தை!  நீ என்றுமே ஆத்மா!
நீ பக்தியை அனுபவிக்க வந்த
பக்தன்/பக்தை! நீ உலகில் வாழ
வந்த பாக்கியசாலி! புரிந்துகொள்!

கண்டுபிடி!

ராதேக்ருஷ்ணா

நீ சில விஷயங்களில் புத்திசாலி!
 நீ சில காரியங்களில் திறமைசாலி! 
நீ சில சமயங்களில் அறிவாளி! 
நீ சில சந்தர்ப்பங்களில் 
பயந்தாங்கொள்ளி! கண்டுபிடி!

Monday, September 20, 2010

யோசித்து செலவு செய்!

ராதேக்ருஷ்ணா

செலவு செய்யும் முன்பு
பல தடவை யோசி! செலவு
செய்த பின் உன்னால் யோசிக்க
 முடியாது! யோசித்தாலும் ஒரு 
பிரயோஜனமில்லை! இது உன்
வாழ்க்கை! ஜாக்கிரதை!

பணத்தை அவமதிக்காதே!

ராதேக்ருஷ்ணா

பணத்தை மதிக்க கற்றுக்கொள்!
பணத்தை உபயோகப்படுத்த
தெரிந்துகொள்! பணத்தை
அவமதிக்காதே! செலவு செய்வது 
சுலபம்! சம்பாதிப்பது கடினம்...

பணத்தை சேமி!

ராதேக்ருஷ்ணா

பணத்தை சேமி!
 தேவையானவற்றிற்கு மட்டும்
செலவு செய்! கஞ்சனாக 
இருக்காதே! ஊதாரியாகவும்
இருக்காதே! பணத்தை நல்ல
வழியில் உபயோகப்படுத்து!

நிம்மதியாயிரு!

ராதேக்ருஷ்ணா

பக்தர்களின் மனதில் க்ருஷ்ணன்!
க்ருஷ்ணனின் மனதில் பக்தர்கள்!
நீயும் க்ருஷ்ண பக்தன்/பக்தை!
 அதனால் எப்பொழுதும்
 சந்தோஷமாகவே இரு! 
நிம்மதியாயிரு!

என்றும் ஆனந்தமே!

ராதேக்ருஷ்ணா

உன்னை தன் மனத் தொட்டிலில்
க்ருஷ்ணன் வைத்திருக்கிறான்!
உனக்கு ஏன் கவலை? உனக்கு
ஏன் குழப்பம்? உனக்கு ஏன்
சஞ்சலம்? உனக்கு என்றுமே
ஆனந்தம் மட்டும்தான்!

ஆனந்தமாய் தாலாட்டு பாடு!

ராதேக்ருஷ்ணா

மனமே தொட்டில்! உன்
க்ருஷ்ணனை அதில் இட்டு
ஆனந்தமாய் தாலாட்டு பாடு!
எல்லாவற்றையும் மறந்து உன்
க்ருஷ்ணனிடம் உன் மனதை
கொடு! பிறகு பார்!
உனக்கே புரியும்!

யாரும் கட்டுப்படுத்தவில்லை!

ராதேக்ருஷ்ணா

யாரும் உனக்கு எல்லையை
 நிர்ணயம் செய்யவில்லை! உன்
எல்லைகளை தாண்டக்கூடாது
என்று யாரும் உன்னை 
கட்டுப்படுத்தவில்லை! மனதில்
நம்பிக்கையோடு வெளியில் வா!

புரிகிறதா?

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு 
எல்லையை நீ தான் வரைந்து
வைத்து கொண்டிருக்கிறாய்!
அதனால்தான் வயது கடந்தவுடன்
நீ வருத்தப்படுகிறாய்! புரிகிறதா?

எல்லைகளை தாண்டு!

ராதேக்ருஷ்ணா

எல்லா எல்லைகளையும் நீ
தான் தாண்டி வரவேண்டும்!
எல்லைகள் உனக்காக சுருங்காது!
நீ எல்லைகளை கடந்தால்தான்
நீ அதைவிட பலசாலி என்று
உனக்கு புரியும்!

Friday, September 17, 2010

தெய்வத்தின் துணை!

ராதேக்ருஷ்ணா

முயற்சி செய்பவர்களுக்குத்தான்
தெய்வம் என்றும் துணை 
இருக்கும்! முயற்சி 
செய்யாதவர்களை தெய்வம்
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை! உன்
முயற்சிதான் உன் வாழ்க்கை! 

முயற்சியே வாழ்க்கை!

ராதேக்ருஷ்ணா

முயற்சி செய்வதினாலே நீ உன்னை
 உலகில் அறிமுகப்படுத்துகிறாய்!
 உனது பெருமையும், வெற்றியும் 
உன் முயற்சியில்தான் 
ஒளிந்துகொண்டிருக்கிறது!
முயற்சியே வாழ்க்கை!

முயற்சி...

ராதேக்ருஷ்ணா

முயற்சி செய்துகொண்டே 
இரு! உன்னால் உருப்படியாக 
செய்யமுடிந்தது முயற்சி 
மட்டுமே! முயற்சி செய்பவர் 
ஒரு நாளும் வீழ்வதில்லை! 
முயற்சிப்பதே பரம சுகம்!

Thursday, September 16, 2010

புரிந்து கொள்!

ராதேக்ருஷ்ணா

நீ எதையெல்லாம் தொலைத்தாயோ
அதையெல்லாம் உன் க்ருஷ்ணன் 
உன்னிடம் இருந்து உரிமையோடு
எடுத்துக்கொண்டான் என்பதை 
புரிந்து கொள்! அப்பொழுது 
கவலை இல்லை!

தொலைக்காமலிருக்க பார்!

ராதேக்ருஷ்ணா

வாழ்வில் தொலைந்த பொருளை
நினைத்துக்கொண்டு வாழ்வை
தொலைத்தவர்கள் பலர்! நீயும்
அந்த வரிசையில் போய் 
சேர்ந்துவிடாதே! இனிமேல்
தொலைக்காமலிருக்க பார்!

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP