Wednesday, June 13, 2012

நீ சுகமாய் இருப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

பத்மநாபா...நீ நன்றாய் இரு!
நிம்மதியாய் தூங்கு! வேளா 
வேளைக்கு சமத்தாக சாப்பிடு!
உன் சொத்தை ஆதிசேஷன் 
பார்த்துக்கொள்வார்! நீ 
சுகமாய் இருப்பாய்!

என் பத்மநாபன் உண்டு!


ராதேக்ருஷ்ணா!

ஆகாயத்தில் நான் பறந்தாலும் என் 
பத்மநாபன் என்னோடு உண்டு! பூமியில் 
நான் நடந்தாலும் என் பத்மநாபன் 
என்னோடு உண்டு! கடலில் நான் 
மூழ்கினாலும் அவன் உண்டு!

Saturday, June 9, 2012

தாமரை மாலையில் நரசிம்மர்...


ராதேக்ருஷ்ணா!

இன்றும் ஸ்ரீ பத்மநாபரின் கோயிலில்,
நரசிம்மரின் கோபத்தை தணிக்க 
அவர் சந்நிதியின் முன் ராமாயணம் 
வாசிக்கிறார்கள்! இன்று தாமரை 
மாலையில் நரசிம்மர் ஜோர்!

வீர கர்ஜனை!


ராதேக்ருஷ்ணா!

பல சமயத்தில் பத்மநாப சுவாமி 
கோயிலில் ராத்திரியில் சிங்கத்தின் 
கர்ஜனையை காவல் காரர்கள் 
கேட்டிருக்கிறார்கள்! நரசிம்மரின் 
வீர கர்ஜனை அது!

சக்தி வாய்ந்த நரசிம்ஹர்!


ராதேக்ருஷ்ணா!

திருவனந்தபுரம் கோயிலில் உள்ள 
நரசிம்ஹ மூர்த்தி மிகவும் சக்தி 
வாய்ந்தவர்! மகாராஜா சுவாதி 
திருநாளுக்கு தீர்த்தத்தில் தந்த 
விஷத்தை மாற்றினார்!